Sunday, September 30, 2012

ராகவேந்திர னருள்வானோ ?







ராகவேந்திர னருள்வானோ ?


ராகவேந்திர னருள்வானோ ? – இன்ப
ராக மொன்று யிசைப்பானோ ? – சுக
போக வாழ்க்கை தருவானோ ? – துயர்
போகத் துணையிருப்பானோ ?
                          { ராகவேந்திர}
காலமெலாங் குருவை யெண்ணும் – மனக்
கோலமே,யெழில் வண்ணம் – மனம்
போலவே வாழும் வண்ணம் – மேன்
மேலு முயர்வது திண்ணம் .
                          {ராகவேந்திர}
நேருகின்ற துயர் நீங்க – யின்பஞ்
சேருகின்ற வழி காட்ட – குறை
கூறிநிற்ப வரைத் தேற்ற – மனம்
ஆறுகின்ற வரை யவர்க்கே
                          {ராகவேந்திர}

Saturday, September 29, 2012

“ முத்துக்குமரா ”






முத்துக்குமரா யெனக் கத்துங்கடல் !


முத்துக்குமரா யென்று கத்துங்கடலே – அந்த
சத்தங்கேட்டு,ஷண்முகனைக் கூவும் மயிலே !
செந்திலதிபா யென்று,சேவற்கூவுமே – உனைச்
சிந்திக்கின்ற பக்தருள்ளம் மெய்மறக்குமே !
                                    (முத்துக்குமரா)
தித்திக்கின்றதே  நாவும் தித்திக்கின்றதே – உனை
பக்தியோடு,சிரத்தையோடு பாடும்போதிலே ;
சக்தி வந்ததே புது சக்தி வந்ததே – நாளும்
ஷண்முகனின் பொன்னடியைத் தேடும்போதிலே .
                                    ( முத்துக்குமரா )
என்றுமின்பமே  நெஞ்சி லென்று மின்பமே – வொரு
கன்றினைப்போற்,தாயினருட் பாலருந்தவே ;
குன்றவில்லையே யின்பங் குன்றவில்லையே – அந்தக்
குன்றிலாடுங் குமரன் குரல் கேட்குஞ் செவிக்கே !
                                     ( முத்துக்குமரா )

Thursday, September 27, 2012





பனிநீக்கும் பகலவனே ராகவேந்திரா !


உனைக்காண ஓடிவந்தேன் ராகவேந்திரா  !
உன் னருளைத் தருவாயா ராகவேந்திரா !
                                  (உனைக்காண)
எனக்காக யின்ப விளக்கேற்றி வைப்பாய் – அதில்
அருளான நல்லெண்ணை யூற்றிவைப்பாய் ;
அணையாத விளக்காக ஆக்கி வைப்பாய் – வாழ்விற்
துணையாகி எனை உயரத் தூக்கி வைப்பாய் ;
                                  (உனைக்காண)
பணக்காரனாக வேண்டேன் ராகவேந்திரா – நாளும்
பணிகின்ற பாக்கியம் போதும் ராகவேந்திரா ;
நீளுலகை யாள வேண்டேன் ராகவேந்திரா – என்றும்
நெஞ்சில் நீ மட்டும் இருந்தாற் போதும் ராகவேந்திரா ;
                                  (உனைக்காண)
இனிக்கின்ற வாழ்க்கை வேண்டேன் ராகவேந்திரா – என்றும்
இன்னலிலா வாழ்வு போதும் ராகவேந்திரா ;
பனிநீக்கும் பகலவனே ராகவேந்திரா – நான்
இனியென்று முன்னடிமை ராகவேந்திரா ;
                                   (உனைக்காண)

Wednesday, September 26, 2012







அருள்வாளோ அன்னை மீனாட்சி !
அவனி யெலா மிங்கு அவளாட்சி ;
ஆவலாய்க் காணவந்தோம் அருட்காட்சி !
நல்லெழிற் காட்சி !    அவளே நமக்                                   
கென்றும் வழிகாட்டி – துணை
                                  (அருள்வாளோ)

பவனிவரும் தங்கத் தேரினிலே,
குவளைவிழி கொண்டு நேரினிலே;
உவகையுடன் கண்டு பாரினிலே,
அவலநிலை மாறிச் சீருறவே !    
                                  (அருளவாளோ)

நீதியில்லை,நாட்டில் நேர்மையில்லை,
வேதத்திலே யெவர்க்கு மார்வமில்லை;
சாதியின் பேர்சொல்லிப் பார்வையிலே,
வேதியரை வெறுக்கும் நிலைமாற !
                                   (அருள்வாளோ)
போதிய உணவின்றி,உடையுமின்றி,
நாதியின்றி கேட்க யாருமின்றி,
வீதியிலே மக்கள் சாகின்றார் ;
மேதினியி லிந்த நிலைமாற !
                                 (அருள்வாளோ)

Monday, September 24, 2012

கூடலின் நாயகனே



கூடலின் நாயகனே !






கூடலின் நாயகனே – எங்கள்
           குடும்பத்தின் காவலனே !
மதுரவல்லி மணாளனே – மங்கை
           ஆண்டாள் காதலனே !
பாடலின் நாயகனே – யென்றும்
            பக்தர் குறைதீர்ப்பவனே.


அருள்வாயப்பா, பெருமாளப்பா,யிருள் நீக்கி
            யொளி சேர்க்க வருவாயப்பா ;
ஒருநாளில்லை,யிருநாளில்லை,பலநாளாய்ப்
            பதம் பணிந்தோம்,குறைதீரப்பா ;
வருநாளெல்லாம் திருநாளென்றே,நிறைதரு
            முனைப் பணிந்தோம்,நிகர்யாரய்யா ;
திருக்கோலத்தை,யிருகண்களாற் பருகியே
             மனமகிழ்ந்தோ மெழில் நீயப்பா.
                                  (அருளவாயப்பா)


வலம் வந்ததும்,நிலம் வீழ்ந்ததும்,வரங்கேட்டு
             வழிகாட்ட முறையிட்டதும் ;
குலம் வாழவும்,குறைதீரவும் கோபாலா
             யென்றுறக்கக் கூப்பிட்டதும் ;
கலங்காதவோர்,மனம் வேண்டியே கண்ணாயெனக்
              கூவி யுனை யழைத்ததும் ;
உலகளந்தவா,உடன் வந்தெனை,உயர்வான
              ஓரிடத்தை நீ காட்டியே.
                                (அருள்வாயப்பா

Sunday, September 23, 2012

இளமெழில் முருகா



இளமெழில் முருகா 





உளமுருகாதா யிள மெழில் முருகா !
வளம் பெருகாதா  வடிவே லழகா !
                                     
                                ( உளமுருகாதா )


பழம் நீயென்றே , பழனியில் நின்றே ,
தொழுகின்ற பக்தர் குறை தீர்க்க – உன்
                                      
                                     ( உளமுருகாதா )


கோடிக்கோடியாய் யுந்தன் கோவிலிற், 
                 பக்தர் வந்துனைப்பணிந்தும் ,
பாடிப்பாடியே,   பக்தி மேலிட,  
                 நெற்றியிற்   திருநீரணிந்தும் ;
ஆடி ஆடியே , அழகுக்காவடி , 
                 தூக்கி, நன்நடம்  புரிந்தும்>
கூடிக்கூடியே, குமரா யெனுமவர்,
                                     குறைகளுனுக்குத் தெரிந்தும்.
                                        
                                                                           ( உளமுருகாதா )




Saturday, September 22, 2012







வரந்தரும் வடிவேலா !








பரங்குன்றம் வாழும் பரமசிவன் மைந்தா ;
நிரந்தர சுகந்தந்து நிம்மதியும் நீ தா ;
                                     
                                                                                   (பரங்குன்றம்)

வரந்தரும் வடிவேலா  வாழ்வில் வசந்தந்தா – உனை
சிரந்தாழ்த்திப் பணிந்தோமே சிங்கார வேலவா – யென்றும்
மறக்காத மனந்தா  மயிலம ரெழில் மன்னா – துன்பம்
பிறக்காத நிலைதா துணிவுந்தா அணிசேர் திருப்
                                      
                                                                                  (பரங்குன்றம்)

                                       
இருத்தின்றோம் வாழ்வினிலே களிக்கின்றோ மென்றால் – உன்
திருக்கரத்தி னருளன்றி வேறேது அய்யா – அன்பு
பெருக்கெடுத்து ஓட, உன் பக்தர் மனம் பாட – அவ்
உருக்கமான பாடலிலே உந்தன் மயிலாட,மகிழ் திருப்
                                    
                                                                                 (பரங்குன்றம்)


Thursday, September 20, 2012





துணை நீயம்மா !



துணைநீயம்மா ! அருள்வாயம்மா !
உனையன்றி உயர் தெய்வம்,யார்தானம்மா ? 
                                           ( துணை நீயம்மா)

இணையின்றி யெழில் மதுரை யாள்பவளே >
நினைப்போரின் நெஞ்சதனில் வாழ்பவளே ;
அணைக்கின்ற அருட்கரத்தை யுடையவளே >
அன்பாலே உருவான அன்னை நீயே தாயே ;
                                       (துணை நீயம்மா)

மொழிபேசும், கிளிகொஞ்சு முந்தன் கையில்>
முழுமதியா யொளி வீசும்,முக முண்மையில் ;
ஒளிவீசு மிருவிழியி னருளொயில் >
வழிபிறக்க, வாழ்வானாய் யன்னை நீயே ;
                                         (துணை நீயம்மா)

Wednesday, September 19, 2012

எழில் மீனாட்சி



எழில் மீனாட்சி !





vHpyha; epd;wpLth bsq;fs; kPdhl;rp;
mUsha;g; bghHpe;jpLth sd;id kPdhl;rp
epHyha;j; bjhlu;ths;>epk;kjp jUths;.     (vHpyha;)

Jjpg;nghu; Jau;ePf;fpj; Jizah apUg;ghs; -- fuk;
Ftpg;nghu;> FiwePf;fpf; ;fuq;b;fhLg;ghs; -- jpdk;
epidg;nghu; epiyawpe;J mUs;g[upths; -- mtu;
tpidnahl tpHpjpwe;J tHpfhl;L kd;id   (vHpyha;)

fUtpHp jpwe;jhny fUizbahsp gpwf;Fk;>
<upjH; tpupe;jhny ,d;bkhHpna Ruf;Fk;>
ghnuhu;f; fUs;g[upa[k; gu;tjtu;j;jdpiag;
ghu;j;jhw; Jd;gbkyhk; gQ;rha;g; gwf;F     (bkHpyha;)
;

;