Sunday, October 25, 2015

சனி மகா திசைக்கான புதன் மகா திசைக்கான போதுப் பலன்கள்





சனி மகாதிசைக்கான போதுப் பலன்கள் தசா காலம் 19 வருடங்கள்.

சனி புக்தி – 3 – – 3 நாட்கள்.
        சனி புக்தியில் ஜாதகருக்கு தனலாபம் அதிகரிக்கும், பணியாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், பாவ காரியங்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்களுடன் தொடர்பு ஏற்படும் என பலதீபிகாவில் மந்தரேஸ்வரர் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் மற்ற நூல்களில் பண இழப்பு, குழந்தைகள் இழப்பு, உறவுகளுடன் வழக்கு விவகாரங்கள் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கஷடங்கள், கடும் வேதனை, சித்ரவதை, அதிகப்படியான மனக் குழப்பங்கள், சொத்து இழப்பு, குடும்பத்தாருக்கு அதிக இன்னல்கள், வாய்வு அல்லது கபம், சளித் தொல்லைகள், வழக்கு விவகாரங்கள், உறவுகள் தரும் இன்னல்கள், குடும்பத்தாரிடையே சண்டைகள் ஆகியவை ஏற்படும்.
புதன் புக்தி – 2 – – 8 மா – 9 நாட்கள்.
       ஜாதகருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். சந்தோஷம், பெண்களின் நட்பு, அரசாள்பவரால் மற்றும் உயர்அதிகாரிகளால் கொடுக்கப்படும் மரியாதை, கௌரவம். வெற்றி மற்றும் நண்பர்களின் சங்கமம் ஆகியவையும், ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது திசையில் அறிவு தெளிவுபெறும். பகுத்தறிவு மற்றும் மேதாவித்தனம், தர்ம காரியங்கள், குழந்தைப் பிறப்பு, குழந்தைகளின் முன்னேற்றம், உறவுகளுக்கு வெற்றி, சந்தோஷம், சொத்து மற்றும் புகழ் சேர்க்கை, மத விழாக்கள், வணிகம் மற்றும் விவசாயத்தின் மூலமான இலாபம் ஆகியவை ஏற்படும்.   

கேது புக்தி -  1 – – 1 மாதம் . 9 நாட்கள்.

       பணம் இழப்பு, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சண்டை, எதிரிகளால் தொல்லை, வாயு மற்றும் உடலில் ஏற்படும் விஷத் தன்மையால் ஆரோக்கியம் பாதிப்புகொடூரமான, இழிவான, அற்பமான, துஷட்டத்தனம் மிக்கவர்களுடன் தொடர்பு, மூட்டுவலி, நோய் அல்லது பாம்பினால் அபாயம் ஆகியவை ஏற்படும்.

சுக்கிர புக்தி – 3 – – 2 மாதங்கள்.

       ஜாதகர் குழந்தைகள், மனைவி மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார். சொத்து இலாபம், பரந்த நிலப்பரப்பில் கீர்த்தியுடன் திகழ்வார். கடற்பயணம், மற்றவர்களின் அனுகூலம் உண்டு. திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்பு, எதிரிகளை வெல்லுதல், தடைகளைத் தகர்த்து எறிதல் ஆகியவை ஏற்படும்.

சூரிய புக்தி – 11 – மா – 12 நாட்கள்.

       அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்படுதல், காய்ச்சல் மற்றும் பிற வியாதிகள், உயர் அதிகாரிகளின் ஆதரவின்மை, கண் உபாதைகள் மற்றும் சூரியன் காரகம் பெறும் உபாதைகள், உடல்வலி ஆகியவை ஏற்படும். சொத்து இழப்பு, மனைவியின் உடல் நிலை பாதிப்பு, அதிகாரிகளின் தொல்லைகள் ஆகியவை ஏற்படும்.

சந்திர புக்தி – 1 – 7 மாதம்

       ஒரு குறிப்பிட்ட திசையில் (பிரிவில்) அறிவுவாற்றல் அதிகரித்தல், புதிய திட்டங்களைத் துவங்குதல், செலவுகள் அதிகரித்தல், நண்பர்களுக்கு கஷ்டம் கொடுத்தல். சோகங்கள், உறவுகளை வெறுத்தல், நீரினால் பயம், கண்டம், பணிழப்பு, சொத்துக்களை அடகுவைத்தல், அது மூழ்கிய பின்னரே திரும்பப் பெறப்பட நேரும். கலகம், பீடை, வீட்டில் சண்டை, வழக்கு ஆகியவை ஏற்படும்.

செவ்வாய் புக்தி – 1 – 1 மா – 9 நாட்கள்.

கொஞ்சம் கௌரவக் குறைவு ஏற்படுதல், அக்னியால் ஆபத்து, இடம் அல்லது வீடு மாற்றம், நிலையில்லாத காலம், குலத்தில் ஈனம், கொடிய பகை, பழி, ஊர் ஊராய் அலைந்து திரிதல், அனைவரையும் பகைத்துக் கொள்ளுதல், பொன்னாபரணங்கள் திருட்டுப் போகுதல், சகோதர்களுக்கும், நண்பர்களுக்கும் இன்னல்கள் ஏற்படுதல். பிறரால் பணவிஷயமாக ஏமாற்றப்படுதல், இழத்தல் ஆகியவை ஏற்படும்.

 இராகு புக்தி – 2 10 மா – 6 நாட்கள்

       சொத்து இழப்பு, பணம் இழப்பு, காய்ச்சல் மற்றும் இதர நோய்கள், வெளிநாட்டு சுற்றுப் பயணம், விபத்து அபாயம், எதிரிகளால் தொல்லை, புண்கள், கல்லீரல் வீக்கம், உடலில் கஷ்டங்கள் பொன் ஆபரண நாசம், பாம்பு கடித்தல் ஆகியவை ஏற்படும்.

குரு புக்தி – 2 – 6 மா – 12 நாட்கள்.

       கடவுள் பக்தி அதிகரித்து, புனிதர்களின் தொடர்பு ஏற்படுதல். உயர் அதிகாரிகளின் அனுகூலமான நடவடிக்கைகள், வசதி வாயப்புக்கள் பெருகுதல்மணவாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கிய மேன்மை, உயர்பதவிகள் அடைதல், அனைத்து விருப்பங்களும் நிறைவேறுதல், குடும்பப் பெருக்கம், உடல் தொடர்பான வசதிகள் கூடுதல், ஆடை ஆபரண சேர்க்கை, அரசர்களால் நன்மை, உறவுகள் சேர்க்கை ஆகியவை ஏற்படும்.

புதன் மகா திசைக்கான போதுப் பலன்கள் தசா காலம் 17 வருடங்கள்.

புதன் புக்தி – 2 – 4 – மா 27 – நாள் ;

       அழகிய வீடும், வியாபாரத்தின் மூலம் அதிக சொத்துக்களும் சேரும். தொழில் மூலமாகவும், மதத் தொடர்புள்ள நபர்கள் மூலமான வருமானங்களும் வரும். அதிகப் புகழும், நல்ல கல்வியும், மேதாவித்தனமும், கற்றலில் ஆர்வமும் ஏற்படும். சந்தோஷம், குழந்தைப் பிறப்பும் ஏற்படும். வெற்றி, குடும்ப உறுப்பினர்கள் அதிகரித்தல், தர்மகாரிய நடவடிக்கைகளில் ஈடுபடுதல், உறவுகள் மூலமான ஆதாயங்கள் ஆகியவை ஏற்படும். அதிக பாக்கியம், நன்மை பயக்கும் ஞானம், வித்தை, எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதமாக முடிவடைதல் ஆகியவையும் ஏற்படும்.

கேது புக்தி – 11 மாதம் 27 நாட்கள்.

       பெரிய இடம்விட்டு மாறுதல், வியாதியால் கஷ்டங்கள், பொருட்சேதம், உறவுக்குக் கேடு, மருந்திடும் குணத்தால் துன்பம், அதிகமான மனக்கிலேசம் உண்டாகுதல். ஆரோக்கியக் குறைவு, இன்னல்கள், கவலைகள், சண்டைகள், பூமி, வாகனம் ஆகியவை இழப்பு, மதத்துக்கு எதிரான எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகள், மனக் குழப்பங்கள், உறவுகளால் தொல்லைகள், சுகம் இழப்பு, இடமாற்றம், உறவுகளுக்கு அதிர்ஷ்டமின்மை ஆகியவை ஏற்படும்.

சுக்ர புக்தி – 2 – 10 மாதங்கள்.

       மதத் திருவிழாக்கள் மற்றும் குரு, ஆசிரியர்களுக்கு மரியாதை அளித்தல், ஆகியவை ஏற்படும். தனலாபம், புத்தாடைகள், அணிகலன்கள் ஆகியவை கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு, உறவுகளுக்கு நல்ல முன்னேற்றம், இலாபம், சுக்கிரனின் காரகம் பெறும் வர்த்தகத்தில் ஆதாயம் அதிகரித்தல் ஆகியவை ஏற்படும். நீண்ட பயணங்கள், எதிர்பாலருடன் உறவு ஆகியவையும் ஏற்படுவதோடு, திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். அருமை தங்கிய மக்கட்பேறும், ஸ்த்ரீயுடன் போகமும், உறவுகள் சினேகமும், வித்தையும், வேறு நாட்டுக்குச் சென்றவர் திரும்ப வந்து சேருதல் ஆகியவையும் ஏற்படும்.

சூரியன் புக்தி – 10 மா – 6 நாட்கள். –

       பொன், பொருள் சேர்க்கை, நல்ல உணவு மற்றும் பானம், அரசு மற்றும் உயர்அதிகாரிகளிடம் இருந்து கௌரவம், மதிப்பு, மரியாதை கிடைக்கும். ஆனால், சூரியன் பாதிப்பு அடைந்து இருந்தால் கவலைகள், மக்களின் எதிர்ப்பைப் பெறுதல், உயர் அதிகாரிகளின் அனுகூலமற்ற தன்மை, அக்னியால் ஆபத்து, மனைவிக்கு நோய், தடைகள் ஆகியவை ஏற்பட்டாலும், சொத்துச் சேர்க்கை ஏற்படும். அரசரால் துன்பம், இடையூறுகள் ஆகியவை ஏற்படும்

சந்திர புக்தி – 1 – 5 மாதங்கள்.

       பெண்கள் மூலமான பண ஆதாயம், விவசாயம், வணிகம் மூலமான இலாபங்கள், வெற்றிகள், சந்தோஷம் மற்றும் வசதி வாய்ப்புக்கள் ஆகியவை ஏற்படும்.. சந்திரன் பாதிக்கப்பட்டிருக்க, ஜாதகர் வீக்கம், கால்களில் அடிபடுதல், தலைவலி, கண் நோய், படை, கழுத்துவலி போன்ற நோய்களால் கஷ்டப்படுவார். பெண்களுடன் சண்டைகள், தவறுகளால் கஷ்டங்கள் ஆகியவை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது. அனைவரிடத்தும் பகை உண்டாகுதலும் ஏற்படும்.

செவ்வாய் புக்தி – 11 மாதம் 27 நாட்கள்.

       அக்னி மூலமான, ஆயுதம் மூலமான அபாயங்கள், கண் பிரச்சனை, திருட்டு பயம், அனைத்து அபாயங்களும் விலகுதல் அல்லது மறைதல், எதிரிகள் தொல்லை ஆகியவை ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபடுவதின் காரணமாகப் புகழ் அதிகரித்தல், உயர் அதிகாரிகள் மூலமாக நன்மைகளும், அனுகூலங்களும் அடைதல் ஆகியவை ஏற்படும். காற்றால் பரவும் நோய்கள், பக்கத்து வீட்டு நபர்களின் மூலமான தொல்லைகள் ஆகியாவையும் ஏற்படும். பயணங்கள், புண்கள், குடித்தல், சண்டையிடுதல் மற்றும் தலைவலி ஆகியவையும் ஏற்படும்.

இராகு புக்தி – 2 – 6 மாதம் – 18 நாட்கள்.

       இராகு நல்லநிலையில் இருக்க அல்லது சுபர் பார்வை பெற, உறவுகள், நண்பர்கள் மூலமாக சொத்துச் சேருதல், பதவி உயர்வுகள் மற்றும் உயர் நிலையால் இலாபம் அடைதல், மகிழ்ச்சிப் பெருக்கம், புதிய வருமானங்கள், புதிய வீடு வாங்குதல் அல்லது வீடு மாற்றம் ஏற்படும். அந்நிய தேசத்தவரால் இலாபம் அடைவர். இதுவே, இராகு அசுப பாதிப்படைய பதவி இழத்தல், மரியாதை, கௌரவம் இழத்தல், கொடுமையான, கீழான பெண்களுடன் தொடர்பு, ஏற்படுதல், தீயால், விஷத்தால் அல்லது நீரால் கண்டம். கண், வயிறு ஆகியவற்றல் உபாதைகள், வெளி நாட்டவரால் பயம், ஆபத்து ஆகியவையும் ஏற்படும்.  கெட்ட கனவுகள், தலைவலி ஆகியவை ஏற்படும்.

குரு புக்தி – 2 – 3 மாதம் – நாட்கள்

       சந்தோஷம் மிக்க காலம், எதிரிகள் அழிதல், வியாதிகளில் இருந்து விடுதலை பெறல், வெற்றிகள், பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு, அரசு மூலம் மரியாதை, கௌரவம் அடைதல், உயர் அரசு அதிகாரிகளின் மூலமான ஆதாயங்கள் ஆகியவை ஏற்படும். சொத்துக்கள் சேருதல், வாகன யோகம், புத்திர பாக்கியம் ஆகியவை ஏற்படுதல், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடத்தல், புதிய உறவுகள் சேர்க்கை என அனைத்துமே நல்லனவையாகவே நடக்கும் யோக காலமாகும்.

சனி புக்தி – 2 – 8 மாதம் – 9 நாட்கள்.

       பலம் மிக்க சனியானால் ஜாதகர் இலாபங்களை அடைவார், சொத்துக்கள் சேரும், வசதி வாய்ப்புக்கள் பெருகும், சனி காரகம் பெறும் பொருள்களை வணிகம் செய்வதால் இலாபம் பெருகும். விவசாயம், பயணங்கள் மூலமாக ஆதாயம் பெருகும். தர்ம காரிய ஈடுபாடு அதிகரிக்கும், அதனால் ஆதாயமும் ஏற்படும். முறையற்ற வழிகளிலும் சம்பாத்யம் பெருகும்.

       பலமற்ற சனி எனில் கஷ்டங்கள் அதிகரிக்கும், மகிழ்ச்சிகள் மறையும், கவலைகள் அதிகரிக்கும், நிலைமாற்றம், தாழ்வு நிலை அடைதல், சொத்துக்களை இழத்தல், வியாபாரத்தில் தோல்வி அடைதல், வாயு, கபம், சளி, கோழை ஆகிய தொல்லைகள் ஏற்படுதல். சோகம் மிக்க மனம், தாழ்வு நிலையில் உள்ளவர்கள் எதிரியாகுதல் ஆகியவையும் ஏற்படும். உத்திராட நட்சத்திரத்தில் கேடு உண்டாகுதலும், உற்றாருக்கும் கேடு உண்டாகுதலும், ஒவ்வொரு நாளும் நன்மை இல்லாது போகுதலும் ஆகிய கெடு பலன்கள் உண்டாகும்.


Sunday, October 11, 2015

இராகு,குரு திசை பொதுப்பலன்கள்.






இராகு தசா பலன்கள் – (18 வருடங்கள்)

இராகு புக்தி – 2 – 8 மா – 12 நாட்கள்

       விஷகண்டம், ஊழல் விவகாரங்கள், சண்டைகள், இடமாற்றங்கள், மனக் கவலைகள், நீரில் கண்டம், பிற மாதரோடு புணருதல், அன்பு உறவுகளை விட்டுப் பிரிய நேரல், கொடூரமானவர்களின் நடவடிக்கை மூலமாக மனவேதனை, உறவுவில் மரணம், குடும்பத் தலைமை, அரசன், உயர் அதிகாரி அல்லது கூட்டாளிகளில் முதன்மையானவர்.

குரு புக்தி – 2 – 4 – மா 24 நாட்கள்

       நல்ல மற்றும் ஆனந்திக்கும் காலம், மகிழ்ச்சி, சொத்துச் சேர்க்கை, அதிகாரத்திலுள்ள மற்றும் உயர்நிலையிலுள்ளவர்களின் மூலமாக வசதி வாய்ப்புகள் பெருகுதல், மத செயல்பாடுகள், அழகிய பெண்களுடன் / ஆண்களுடன் இணக்கம். எதிரிகள் மறைந்து ஒழிதல், மழலைச் செல்வம் மடியில் தவழுதல், முயற்சிகள் அனைத்திலும் முழுவெற்றி அடைதல்.

சனி புக்தி – 2 – 10 மா – 6 நாட்கள்.

       அவதூறு, அபகீர்த்தி, தீயோர் நட்பு, உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல், கவலைகள், எதிரிகள் மூலமான இழப்புக்கள், மனக் கவலைகள், மனவேதனைகள், மனைவி, சகோதரன் அல்லது குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள்பதவி இயப்பு, ஆரோக்கியக் குறைவு, கலக்கம், குழப்பம், கலகம், மூட்டுவலி, ஜாதகரால் அனுபவிக்கப்படும் பித்த வாத, கப ரோகங்கள், வெளிநாட்டில் குடியேற நேரல்.

புதன் புக்தி -2 – 6 மா – 18 நாள்

புத்தியின் முதல் 11 மாதங்கள் அனுகூலமானதாக இருக்கும். குழந்தைப் பேறு உண்டாகும். சொத்துக்கள் சேரும். நண்பர்களின் சந்திப்பு, உயர் அதிகாரிகளின் அனுகூலமான செயல்பாடுகள், திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம். அறிவுபூர்வமான வியாபாரம் செய்வதற்கு உண்டான புத்திசாலித்தனம், திறமை மிக்க செயல்பாடுகள் ஆகும். கடைசி 12 மாதங்கள் தங்களது சுய செயல்பாடுகளால் எதிர்ப்பு மற்றும் எதிரிகள் ஏற்படுவர். வாகனயோகம், குழந்தைப்பிறப்பு, உற்றார் உறவினருடன் மகிழ்வோடு இருத்தல், எதிர்பாலருடன் இன்பம் துய்த்தல், வணிகம் மற்றும் ஏமாற்றுதல் மூலமாக இலாபம் பெறுதல் ஆகியவை ஏற்படும்.

கேது பக்தி – 1 – – 0 மா – 10 நாள்.

       தீ, காய்ச்சல், ஆயுதம் மற்றும் எதிரிகளால் தொல்லை ஏற்படுதல், தலைவலி, நண்பர்கள் மற்றும் பெரியவர்களுக்குக் காயம் ஏற்படுதல், விஷகண்டம், புண்கள் மற்றும் சண்டைகளால் ஏற்படும் கஷ்டங்கள், குழந்தைகளுக்கு நோய் ஏற்படுதல், மனைவிக்கு ஏற்படும் கஷ்டங்கள். உயர் அதிகாரிகளால் ஏற்படும் ஆபத்து மற்றும் அனைத்து வகையிலுமான துரதிர்ஷடங்கள்.

சுக்கிர புக்தி – 3 வருடங்கள்

        வாகன யோகம், பணம் மற்றும் திருமணம், நல்ல குடும்ப வாழ்க்கைக்கு ஆசிர்வதிக்கப்படுதல், எதிர்பாலருடனான தொடர்பு, மனைவி மூலமான இலாபங்களால் மகிழ்ச்சி அடைதல். உயர் அதிகாரிகள் மூலமான நன்மைகள். உறவுகளுடன் சண்டை ஏற்படுதல். வாயுத் தொல்லைகள், தீயகுணமுள்ள நண்பர்களின் நட்பைப் பெறுதல் மற்றும் அவர்களால் நஷ்டம் அடைதல். ஆனால் இவ்விதமான அனைத்துத் தொல்லைகள், கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனி தோல் உடனே விலகிவிடும். பூமி இலாபம், திருமணம் அல்லது குழந்தைப் பிறப்பு ஆகியவை ஏற்படும்.

சூரிய புக்தி – 10 மா- 24 நாட்கள்

       குடும்பத்தாரிடையே சண்டை, எதிரிகளால் தொல்லைகள், கண்களில் தொந்திரவு, தீ, விஷகண்டம் மற்றும் ஆயுதத்தால் ஆபத்துக்கள்,  வீண்பயம், புதிய எதிரிகள் உருவாகுதல் ஆகியவை ஏற்படும். மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, குடியிருப்பு மாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்படும். உயர்பதவியில் உள்ளவர்களின் மூலமாக நன்மைகள் ஏற்படும். தேர்வுகளில் வெற்றி அடைதல், வெளிவட்டார வாழ்க்கையில் சந்தோஷம் கிடைத்தல், நல்ல மரியாதை, புகழ் ஏற்பட்டாலும், மனதில் நிம்மதியின்மை ஆகியவை ஏற்படும்.

சந்திர புக்தி – 1 – – 6 மாதங்கள்

       பலம் மிக்க சந்திரன் எனில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் குதூகலமாய் இருத்தல். இடமாற்றம், தனலாபம் ஆகியவை ஏற்படும். பாதிப்படைந்த சந்திரன் எனில் மனைவி மூலமான பணயிழப்பு, மனக் குழப்பங்கள், சண்டைகள், சொத்து இழத்தல், நிலையில்லாத ஆரோக்கியம், உடலில் வலி மற்றும் நீரால் கண்டம் ஆகியவை ஏற்படும்.

செவ்வாய் புக்தி – 1 – 0  மா - 18 நாட்கள்.

       உயர் அதிகாரிகள் மூலமாக இழப்புக்கள் மற்றும் ஆபத்துக்கள், தீ, ஆயுதம் அல்லது திருடரால் கஷ்டங்கள் ஏற்படும். பணம் இழத்தல், வழக்குகளில் தோல்வி, எதிர்ப்புகளால் பாதிப்பு அடைதல் அல்லது இடையூறுகள், இதயம் மற்றும் கண்களில் தொல்லைக்ள ஏற்படும். எதிரிகளால் ஆபத்து, வழக்கு விவகாரங்கள் மற்றும் மனக் குழப்பங்கள் ஆகியவையும் ஏற்படும்.

குரு திசை பொதுப்பலன்கள்.

குரு புக்தி - 2. 1.மா -6 நாட்கள்.

சொத்து லாபம், நல்லதிர்ஷ்டம், பிரகாசமான, மகன் பிறப்பு, கௌரவம், அரசு மற்றும் அதிகாரிகளின் மூலமான அனுகூலம். மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, நல்லகாரியங்கள் செய்தல், நல்லாரோக்கியம், நம்பிக்கை. வெற்றி, விருப்பங்கள்,புனித பயணங்கள், மத சம்பந்தமான மற்றும் தர்ம ஸ்தாபனங்களுடன் தொடர்பு ஆகியவை ஏற்படும். பாதிப்பு அடைந்த குரு எனில் இதற்கு நேர்மாறான பலன்கள் ஏற்படும்.

சனி புக்தி - 2-6- மா 12 நாட்கள்.

தீய செயல்கள், குடித்தல்,போக்கிரிகளுடன் தொடர்பு, மனக்கவலைகள், திருமணமானவரானால் மகன்கள் மூலமாக சொத்து இழத்தல், வியாபார நஷ்டம், மனைவி அல்லது கூட்டாளியால் தொல்லைகள் ஆகியவை ஏற்படும். இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் ஜாதகருக்கு உயர்வு, மேன்மை, புகழ், சந்தோஷம் மற்றும் செல்வச் சேர்க்கை, சொத்துச் சேர்க்கை ஆகியவை ஏற்படும்.

புதன் புக்தி - 2- 3 - மா 6- நாட்கள்.

பெண்களால் தொல்லை, சூதாடுதல், குடித்தல்,நோய் ஆகியவை ஏற்படும் என சில முனிவர்கள் அபிப்பிராயப்பட்டாலும், மற்றவர்கள் கடவுளைத் தொழுவதின் மூலமாகவும் புனிதத் தலங்களுக்குச் செல்வதன் மூலமும் பலன்கள் நன்யாகவே இருக்கும் எனக் கருதுகின்றனர். ஜாதகர் கலை ஆர்வம் மிக்கவராக இருப்பார். குழந்தைப் பிறப்பு, செல்வ சேர்க்கை, சந்தோஷம் ஆகியவை ஏற்படும். உயர்அதிகாரிகளின் அனுகூலம், அரசாள்பவரின் ஆதரவு, வசதி வாய்ப்புகள் பெருகுதல், வணிகம் மற்றும் வியாபாரத்தில் இலாபம் ஆகிய பலன்கள் நடக்கும்.

கேது புக்தி – 11 மாதம் 6 நாட்கள்

ஆயுதத்தால் ஏற்படும் காயங்கள், வேலைக்காரர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படுதல், உறவுகள் மற்றும் நண்பர்களை விட்டுப் பிரிதல், மனக்கவலை அதிகரித்தல், மனைவி, குழந்தைகளால் தொல்லைகள் ஏற்படுதல், புனித பயணங்கள் செல்லுதல், வீடு மாற்றம், சொத்துச் சேர்க்கை ஏற்படுதல், கூட்டுத்தொழிலில் கூட்டாளியிடம் இருந்து விலகல் ஆகியவை ஏற்படும்.

சுக்கிர புக்தி – 2 – 8 மாதங்கள்.

பல்வேறு பொருட்களை அடைதல், நல்லுணவு கிடைத்தல், பெண்களிடம் இணைவான தொடர்பு ஏற்படுதல், மதவுணர்வு கொள்ளுதல், சொத்துச் சேர்க்கை ஏற்படுதல், கௌரவம், மரியாதை கூடுதல்மகன்களின் முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியான மண வாழ்க்கை ஏற்படுதல், கோசார சுக்கிரன் ரிஷபம் அல்லது துலாம்  இராசிகயைக் கடக்கும் போது பூமிலாபம் மற்றும் வாகன யோகம் ஏற்படும். சந்தோஷம், குடும்பத்துடன் ஒன்று சேருதல் ஆனால் மதிப்புக் குறைதல். ஆகிய பலன்கள் சுக்கிர புக்தியில் ஏற்படும்.

சூரிய புக்தி – 9 மாதம் 18 நாட்கள்.

அரசு மற்றும் அதிகாரிகள் மூலமான அனுகூலங்களை  அனுபவித்தல், புகழ் அடைதல், இனிய சுபாவம், வாகனயோகம் மற்றும் வாழ்க்கையில் அதிகபட்சமான முன்னேற்றங்களை எட்டுதல், பூமிலாபம், எதிரிகளை வெல்லுதல், நல்ல செயல்பாடுகள் ஏற்படுதல், ஆனால் உடலில் சக்தியை இழத்தல் ஆகியவை சூரிய புக்தியில் ஏற்படும் பலன்கள் ஆகும்.

சந்திர புக்தி – 1 – 4 மாதங்கள்.

முன்னேற்றம் அதிகரிப்பு, அதிகமான கன்னிப் பெண்களுடன் பழக்கம், எதிரிகளை அழித்தல்., தனலாபம், விவசாயத்தில் இலாபம் அதிகரிப்பு, மிக உயர்ந்த புகழ் அடைதல். கடவுளின் மீதான அதீத பக்தி ஏற்படுதல், சொத்துக்கள் சேருதல், நல்ல உலோகங்களைப் பெறுதல், பெண் குழந்தை பிறத்தல், குடும்பத்தில் உள்ள ஆணுக்குத் திருமணம் நடத்தல், குழந்தைகள் மூலமான ஆதாயம் ஆகியவை சந்திர புக்தியில் ஏற்படும்.

செவ்வாய் புக்தி – 11 மாதம் – 6 நாட்கள்.

எதிரிகள் மூலமாக சொத்துச் சேர்க்கை, பூமிலாபம், முக்கிய நபராக உருவெடுத்தல் அல்லது பலம் பெறுதல், புனித பயணங்கள் செல்லுதல், செல்வமும் புகழும் சேருதல், சாதனை புரிதல் மற்றும் உறவுகளிடையே நல்லுறவு ஏற்படுதல் ஆகியவை பலம் மிக்க செவ்வாய் புக்தியில் ஏற்படும்.
செவ்வாய் பாதிப்பு அடைந்து இருந்தால் ஏமாற்றகளையும் கஷ்டங்களையும் எதிர் கொள்ள நேரும். பொருட்கள் திருடு போதல், விடுமுறை அல்லது இடமாற்றம் ஏற்படுதல், நம்பிக்கைகளும், வியாபாரத்திலும் தோல்வி அடைதல், அலைந்து திரிதல், அதிகமான ஜூரம், மூத்த சகோதரனையோ நண்பனையோ இழத்தல், இரணம், காயம், கட்டி போன்ற வியாதிகள் ஏற்படுதல், மன அழுத்தம் ஏற்படல், அபாயகரமான காரியங்களை துணிந்து செய்தல், இழப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்ட செவ்வாய் தனது புக்தியில் ஏற்படுத்தும்.

இராகு புக்தி – 2 – – 4 – மாதம் – 24 நாட்கள்..

கீழான மக்கள் மூலமாக வருமானம் அடைதல், உறவுகள் மூலமாக துன்பங்கள் அடைதல், அதிகப்படியாக மனக்கவலை கொள்ளுதல், நோய் ஏற்படுதல், திருடர்கள் மூலமாக அபாயங்கள் ஏற்படுதல், குடும்பத்தில் உள்ள இளையவர்களுக்கு அல்லது மூத்தவர்களுக்கு நோய் ஏற்படுதல், அரசாங்கத்தின் மூலமாகவும், உயர் அதிகாரிகள் மூலமாகவும் தொல்லைகள் ஏற்படுதல் ஆகியவையே குரு திசை / இராகு புக்தியில் ஏற்படும் பலன்கள் ஆகும்.