Tuesday, July 11, 2017



இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்.
மேஷம் முதல் மிதுனம் வரை

நிழல் கிரகங்களான இராகுகேது உருவான கதை.
       புராண காலத்தில் பாற்கடலைக் கடைந்து இறவாவரம் தரும் இன்னமுதை அருந்த தேவரும், அசுரரும் போட்டி போட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு கடைய முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை அருந்திய சிவபெருமான் நீலகண்டரானார். இறுதியாக அமிர்தமும் வந்தது. அமிர்தத்தைப் பெற தேவரும், அசுரருக்கும் இடையே சமாதானப்படுத்த மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். இரு வரிசையாக நின்றவர்களிடையே அமுதத்தை பகிர்ந்து அளித்த போது தேவர்கள் வரிசையில், தேவர் போல் உருமாறிய காசிப முனிவரின் பேரனும், விப்ரசித்து, கிம்ஹிகை தம்பதியரின் மகனுமான ஸ்வர்பானு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே அமர்ந்திருந்தான். அவனுக்கு ஓர் அகப்பை  அமுது அளித்த மோகினியிடம்  சூரிய, சந்திரர்கள் அவனைக் காட்டிகொடுத்தனர்.
       கோபமுற்ற கோபாலன் கையிலிருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையைத் தாக்கி துண்டித்தார். தலை வேறு, உடல் வேறான சுவர்பானு அமிர்தத்தை உண்டதால் உயிர் பிரியவில்லை. பிரம்மனிடம் வேண்டிய சுவர்பானுவின் வெட்டப்பட்ட தலையுடன் பாம்பின் உடலையும்,   பாம்பின் தலையுடன் உடலை இணைத்து முறையே இராகுகேது எனப் பெயர் கொடுத்து ஒருவருக்கொருவர் இணை பிரியாது, எதிர், எதிராக நின்று நவகிரக அந்தஸ்தையும் கொடுத்து அருள்பாலித்தார். நிழல் கிரகங்களான இருவருக்கும் நிரந்தர இராசியின்றி, அவர்கள் நிற்கும் இராசியின் பலத்தையே அடைய அவர்களுக்கு வழிகாட்டினார். இராகு மகர இராசியில் அமர்ந்து அதர்வண வேதத்தைக் கற்றுணர்ந்து ஞானகாரகன் என்றும், கடகத்தில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேத்த்தைக் கற்றுணர்ந்து மோட்ச காரகன் என்றும் அழைக்கப்பட்டனர். பாவ புண்ணியத்துக்குத் தக்கவாறு பலன்களை அளிக்கவல்ல இவர்கள் அம்மாவாசை, பௌர்ணமி காலங்களில் முறையே சூரிய சந்திரர்களைப் பீடித்து கிரகணமாக்கி பழி தீர்த்துக் கொள்கிறார்கள். இதுவே இராகு கேது உருவான கதையாகும். இராசி மண்டலத்தின் வடதுருவப் புள்ளி இராகு என்றும், தென்துருவப் புள்ளி கேது எனவும் வழங்கப்படுகின்றன. மேற்கத்திய ஜோதிடத்தில் இராகு "டிராகன்ஸ் ஹெட்" என்றும், கேது "டிராகன்ஸ் டெயில்" என்றும் குறிப்பிடப்படுகின்றன.
       ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், இராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும் பாம்பு என அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவர்.  இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை பாதிப்பு அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் பாதிப்பு ஏற்படும்.
       மனிதத் தலையும் பாம்பு உடலையும் கொண்ட இராகு கருமை நிறத்தவர், நீண்டு நெடியவர். குரூரமான குணம் உடையவர். அற்புதமான செயல்களை உருவாக்கிக் காட்டக் கூடிய ஆற்றல் மிக்கவர் இராகு ஆவார். திருநாகேஸ்வரத்தில்  இராகு தனது இரு தேவியர்களான நாகவல்லி, நாக்கன்னி சமேதராய், உள்பிரகாரத்தில் கோவில் கொண்டு அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார். இத் திருத்தலமே இராகு பரிகாரத்திற்கு முதலிடமாகவும், சிறந்த இடமாகவும் கருதப்படுகிறது.
       நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான இராகு – கேதுவுக்கு என தனியாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டு அதிபதியின் குணத்தை கிரகித்துக் கொள்வர்.   இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே இராசி மண்டலத்தை வலம் வரக் கூடியவர்கள்.
       மத, தெய்வ வழிபாடுகள் அனைத்தும் நம்பிக்கையின் பாற்பட்டவை. இந்த நம்பிக்கைகள்தான்  மக்களின் வாழ்வை நெறிப்படுத்தவும், வளப்படுத்தவும் உதவுவன ஆகும். மனிதனின் துன்பத்தையும், துயரங்களையும், கஷ்டங்களையும் இந்த நன்நம்பிக்கைகள்தான் களைகின்றன என்றால் மிகையாகாது. மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், ஆறுதலையும் விளைவிக்கின்ற வழிபாட்டு முறைகள் புதுப் புது  வகைகளில் தோன்றக் காரணம் ஆகின்றன. அந்த எதிர்பார்ப்பின் விளைவே இராகுகால பூஜை ஆகும். செவ்வாய்க் கிழமை அன்று துர்க்கைக்குச் செய்யப்படும் இராகு கால பூஜை உடனடி பலன் கிடைப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இராகு காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தமிழ் நாட்டில் எவரும் செய்வதில்லை. ஆனால், பிற மாநில மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இராகு காலத்தில் திருமணம் கூட செய்கிறார்கள்.                                                                                                                                                                                                                          



சந்
சுக்,லக்//

சனி(வ)
சூரி,ராகு
சுக்

கேது
ஆவணி-1/ஆக-17
    வியாழன்
2-33 இ – இராகு-கட, கே-மக. 11-55 ப – மிது சந்
செவ்
செவ்


   நவாம்சம்


சூரி,ராகு,
புத(வ)


புத(வ)
குரு

சனி(வ)

குரு
சந்
லக்//

கேது


       இந்த ஆண்டு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில்சாய கிரகமான இராகு சிம்ம இராசியில் இருந்து கடகத்துக்கும், கேது   கும்ப இராசியில் இருந்து மகரத்துக்குமாக பெயர்ச்சி  ஆகிறார்கள்.
இராகு காயத்ரி –  "ஓம் நகத்வஜாய வித்மஹே
                   பத்ம ஹஸ்தாய தீமஹி
                   தந்நோ ராஹூ ப்ரச்சோதயாத்"
கேது காயத்ரி – "ஓம் அச்வத்ஜாய வித்மஹே
                 சூல ஹஸ்தாய தீமஹி
                 தந்நோ கேது; பிரச்சோதயாத்

வ.எண்
இராசி
இராகுவின் நிலை
இராகு பார்க்கும் இடம்.
1
மேஷம்

4 ஆம் இடம்
6, 10, 2
2
ரிஷபம்
3 ஆம் இடம்
5, 9, 1
3
மிதுனம்
2 ஆம் இடம்
4, 8, 12
4
கடகம்
1 ஆம்
இடம்
3, 7, 11
5
சிம்மம்
12 ஆம் இடம்
2, 6, 10
6
கன்னி
11 ஆம் இடம்
1, 5, 9
7
துலாம்
10 ஆம் இடம்
12, 4, 8
8
விருச்சிகம்
9 ஆம் இடம்
11, 3, 7
9
தனுசு
8 ஆம் இடம்
10, 2, 6
10
மகரம்
7 ஆம் இடம்
9, 1, 5
11
கும்பம்
6 ஆம் இடம்
8, 12, 4
12
மீனம்
5 ஆம் இடம்
7, 11, 3

வ.எண்
இராசி
கேதுவின் நிலை
கேது பார்க்கும் இடம்.
1
மேஷம்

10 ஆம் இடம்
12, 4, 8
2
ரிஷபம்
9 ஆம் இடம்
11, 3, 7
3
மிதுனம்
8 ஆம் இடம்
10, 2, 6
4
கடகம்
7 ஆம்
இடம்
9, 1, 5
5
சிம்மம்
6 ஆம் இடம்
8, 12, 4
6
கன்னி
5 ஆம் இடம்
7, 11, 3
7
துலாம்
4 ஆம் இடம்
6, 10, 2
8
விருச்சிகம்
3 ஆம் இடம்
5, 9, 1
9
தனுசு
2 ஆம் இடம்
4, 8, 12
10
மகரம்
1 ஆம்
இடம்
3, 7, 11
11
கும்பம்
12 ஆம் இடம்
2, 6, 10
12
மீனம்
11 ஆம் இடம்
1, 5, 9

இராகுவால் சுப பலன்கள் அடையும் இராசிகள் ரிஷபம், கும்பம், கன்னி.
எல்லா இராசிகளுக்குமான இராகுவுக்கான பொதுவான பரிகாரங்கள். –        
      செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சிவன் கோவில் பிரார்த்தனை நல்லது. திருநாகேஸ்வரம், சங்கரன் கோவில் ஆகிய திருத்தல வழிபாடுகள் சிறப்பு. புற்று உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் எலுமிச்சை விளக்கேற்றி, பால், முட்டை வைத்தல் நல்லது. இராகு காயத்ரி பாராயணம் செய்க. மேற்கூறிய பரிகாரங்களை இராகுவுக்குச் செய்வது நலம் பயக்கும்.

எல்லா இராசிகளுக்குமான கேதுவுக்கான பொதுவான பரிகாரங்கள்.-
       ஞாயிறு தோறும் அருகம் புல் மாலை சாத்தி கணபதி வழிபாடு. சனி தோறும் பெருமாள் கோவிலில் துளசி மாலை சாத்தி பிரார்த்தனை செய்தல். அதே நாள் – ஹனுமனுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல் ஒருமுறையேனும் கீழப்பெரும்பள்ளம் சென்று வருதல் ஆகிய பரிகாரங்கள் கேதுவுக்குச் செய்வது நலம் பயக்கும்.
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு புத்திர ஸ்தானத்திலும்  கேது – இலாப ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சம்பலன்களை அள்ளி வழங்கி வந்தனர். தொழிலில் முன்னேற்றமும், அதிக இலாபங்களையும் வழங்கினாலும், தடங்கல்களையும், தொழிலில் போட்டி பொறாமைகளையும் ஏற்படுத்தி வந்தனர். பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகளையும், பொது வாழ்வில் அவமானங்களையும் கொடுத்துவந்தார். தற்சமயம்  ஆவணி 1 முதல் கடக இராசியான 4 ஆம் இடத்துக்கு இராகுவும், மகர இராசியான 10 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர்.

       இவை சாதகாமான அமைப்பு அல்ல. இதன் காரணமாக சுக பாவ இராகுவால் மனைவி வழியிலும், சகோதர வழியிலும் வெட்டிச் செலவுகளும், தாயாரின் உடல் நிலை  பாதிப்பு, வாகன விபத்துகள் அல்லது வாகனத்தில் ஏற்படும் பழுதுகளைச் சீர் செய்ய வேண்டிய  வகையில் பராமரிப்புச் செலவுகள், கால்நடைகளுக்குச் சேதாரங்கள் ஆகியவைகளும் ஏற்படலாம். வீண் அலைச்சல்களைத் தவிர்க்கவும். சொத்து பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். உயர்கல்வி பயில்பவர்கள் வேண்டாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் எச்சரிக்கையாக இருந்தால் தேறலாம். மருத்துவரின் கவனக் குறைவால் வேண்டாத பிரச்சனைகள் எழலாம். நண்பர்களும் பகைவராவர். யாத்திரையின் போது எச்சரிக்கை தேவை. இத்தகைய பிரச்சனைகளால் தூக்கம் குறையும் கவலைகள் அதிகரிக்கும். வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை வாங்கும் முன் தரகர்களை நம்பாமல் அவற்றின் தஸ்தாவேஜூகளை அலசி, ஆராய்ந்து முடித்துக் கொள்வது நல்லது.
       கர்ம பாவக்  கேதுவால் நற்பலன்கள் உண்டாகும். பணவரவும், இலாபமும் அதிகம் இருந்த போதும், சூதாட்டம் போன்ற முறையற்ற வழிகளில் ஈடுபடுவதனால் அவற்றை இழக்க நேரும். இதுவரை இழுபறியாய் இருந்த காரியங்கள் வெற்றி அடையும். புதிய முன்னேற்றத்துக்கான பாதைகள் வகுக்கப்படும். தொழிலில் இலாபமும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் உத்தியோக உயர்வும் ஏற்படும். சிலர் போலித் துறவியாகும் சூழ்நிலை உருவாகலாம். இராகுவை விட கேது இவ்விடத்தில் அசுப பலனைக் குறைவாகவே தருவார் என்பதே ஓர் ஆறுதல். வேள்வி, யாகாதி காரியங்கள், புண்ணயத்தல யாத்திரைகள் ஆகியவை ஏற்படும். சிலருக்கு மடாதிபதிகள், மதத் தலைமை ஏற்று நடத்துதல் போன்ற முக்கிய பொறுப்புகள் தேடி வரும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் – கணவன் மனைவிடையே ஒற்றுமை பலப்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். பொன், பொருள் சேரும். அசையும், அசையாச் சொத்துக்களால் வீண்செலவுகள் ஏற்படும். தேவைக்கேற்ற பணவரவுகள் தேடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்களுக்குப் பிறகு வெற்றி ஏற்படும். கொடுக்கல் – வாங்கலில் சரளமானநிலை ஏற்பட்டாலும், பெரிய தொகைகளைக் கையாளும் போது எச்சரிக்கை தேவை.

       தொழில் மற்றும் வியாபாரம் – தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குச் சிறப்பான காலம். இலாபம் அதிகரிக்கும். போட்டி, பொறாமைகாரணமாக, எதிராளிகள் தரும் இன்னல்களை எப்பாடுபட்டாவது சமாளித்து விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைத்து தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் நிலை ஏற்படும். அலைச்சல்களைத் தவிர்க்க பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.

       உத்தியோகஸ்தர்களுக்கு – அரசுப் பணியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கினை, உதவியாளர்களின் உதவியோடு சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பர். திறமைக்கு ஏற்ப பாரட்டுக்களும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு, குடும்பத்தினரைப் பிரிய நேரலாம்.

       பெண்களுக்கு – அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புப்புடன் செயல்பட்டாலும், சிறுசிறு பிரச்சனைகள் எழலாம். புதிய முயற்சிகள் மிகுந்த பிரயாசைக்குப் பிறகே கூடிவரும். மணமாகாதவர்களுக்கு அவர்கள் எண்ணப்படி நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும். நினைத்தபடி நினைத்த காரியங்கள் நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு காரணமாக போதுமான அளவு ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.

      அரசியல்வாதிகளுக்கு – பொருளாதார நிலை சீராக இருக்கும். இதுநாள்வரை இருந்துவந்த சிக்கல்கள், குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சுமுக நிலை உருவாகும். தொண்டர்களின் ஆதரவு பெருகினாலும், கட்சிப் பணிக்கான செலவுகள் எகிறும். பொதுமக்களின் ஆதரவு குறையும். பொதுமக்களுக்கு அரசு மானியங்கள், உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.

       மாணவர்களுக்கு – கல்வியில் இடர்பாடுகளைக் களைய மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளாவிடில் பின்னர் வருத்தப்பட நேரும். எனவே, பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தகவல் தொழில் நுட்ப அமைப்புகளில் நேரத்தை வீண்டிக்காது இருப்பது நல்லது. நல்ல நண்பர்களின் நெருக்கம் மகிழ்ச்சி அளிக்கும். கல்விச் சுற்றுலாக்களின் மூலமாக அறிவு விருத்திக்கான சூழல் மாணவர்களுக்கு ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் வெற்றிக்கான பதக்கங்களும், பட்டயங்களும் கிடைத்துப் பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.

       கலைஞர்களுக்கு – புதிய தொடர்புகள் மகிழ்ச்சி அளிக்கும். நல்லமுறையில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கை கொடுக்கும். தேவைக்கு அதிகமான வருமானம் வருவதால் மகிழ்ச்சி பொங்கும். ஆயினும், வருமானவரித்துறையின் கெடுபிடிகள் தொல்லை தரலாம். முதன்மை நிலைக்கான போட்டிகளால் கலைத்துறை சூடு பிடிக்கும். புகழ் மிக்கவர்களின் பெயர் கெடும் வகையில் கிசு கிசுகள் மீடியாக்களில் வைரலாகும்.  

       பரிகாரங்கள் – சண்டிகேஸ்வர்ரை திங்கள் தோறும் வழிபடுங்கள். எந்த காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னும், விக்ன விநாயகரை வணங்குதல் நலம். சங்கடஹரசதுர்த்தி அன்று விரதம் இருப்பது நல்லது. ஒருமுறை கீழப் பெரும்பள்ளம் சென்று வழிபடுதல் சிறப்பு.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
    களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப்  பார்ப்போம்.

       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு சுக ஸ்தானத்திலும்  கேது – கர்ம ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சம்பலன்களை அள்ளி வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான 3 ஆம் இடத்துக்கு இராகுவும், மகர இராசியான 9 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர்.
       இவை சாதகாமான அமைப்பு ஆகும். இதன் காரணமாக தைரிய பாவ இராகுவால் செல்வந்தர்களின் நட்பு ஏற்படும். கீர்த்தி பெருகும். புத்தி சாதுர்யமும், அறிவுத் திறனும் கூடும். அரசாங்க உத்தியோகம் ஏற்படும. சந்ததி உருவாகும். பொன்னும் பொருளும் சேரும். கௌரவமும், அந்தஸ்தும் உயரும். பேரும், புகழும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். என எல்லா வகையிலும் நல்ல பலன்களே உண்டாகும். பல முகாந்திரங்களில் தனவரவும் இலாபமும் குறைவின்றிக் கிடைக்கும். மனோதைரியம் ஓங்கும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். வேற்றுப் பெண் உறவு ஏற்படலாம். நல்ல ருசியான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். சங்கடங்கள் நேரும் காலத்தில் சகோதரர்களின் உதவிகள் தடங்கல் ஏதுமின்றி கிடைக்கும். மனைவி மக்கள் உடல் நலம்பெற்று செழித்து விளங்குவர். அரசுப் பணியாளர்களுக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருமானப் பெருக்கமும் ஏற்படும். பாகு, தேன், பாற்சோறு ஆகியவை கிட்டும். எதிரிகளின் பணமும் வந்து சேரும். கடன் தீரும். நேர்த்திக் கடன் செலுத்த புனித யாத்திரை செல்வர். வெளிவட்டாரப் பழக்கம் நன்மை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
       கேதுவின் பாக்ய பாவ அமர்வால் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். எனவே, அடக்கி வாசிப்பது நல்லது. எல்லா வழிகளிலும் இவருக்குப் பிறரால் அவமானங்கள்  உண்டாகும். பிறர் கபட நாடகம் ஆடி இவரை ஏமாற்ற முற்படுவர். சிலர் ஊரை ஏமாற்றும் கபட சன்யாசியாக உருவெடுக்க நேரலாம். பலவகை வழக்குகள் ஏற்பட்டாலும், அவற்றிலெல்லாம் வெற்றி பெற்று விடுவர். பெற்றொரின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் ஞெலவுகள் ஏற்படும். இவரின் முன் கோபத்தால் பல காரியங்களும் கெடும். ஆயினும் ஞானத்திலும், தவத்திலும் நாட்டமும், நல்ல குரு வாழ்க்கப் பெற்று அதனால் ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவும் ஏற்படும்.  சொன்ன சொல் தவறமாட்டார்கள். வேலை இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். சிலருக்குக் குறிக்கோளற்ற அலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் - சொத்துக்கள் சேரும், தான தர்மத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத் துறையில் உள்ளவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.  உயர்ரக வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும்.  வெற்றிகள் குவியும். உற்றார் உறவினரின் உதவிகள் கிடைக்கும். சிலர் புதுவீடு கட்டுவர்.

       தொழில் மற்றும் வியாபாரம் – பழைய தொழிலை விரிவாக்கம் செய்யத் தேவையான கடன் உதவிகள் வங்கி மூலமாகச் சுலபமாக்க் கிடைக்கும். செய்தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். சிலருக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். சகோதரர்கள், கூட்டாளிகளுடன் செய்யும் தொழில்களில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலருக்குக் கடன் தீரும். அதிக லாபங்களும் ஏற்படும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். நிலபுலன், வாகனம், கால்நடைகள் செழிக்கும்.

       உத்தியோகஸ்தர்களுக்கு – தாங்கள் எதிர்பார்த்தபடி உத்தியோக உயர்வும், அதற்குரிய சம்பள உயர்வுகளும் கண்டிப்பாகக் கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்வர். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மை தரும்.  அரசாங்க அதிகாரிகளின் ஆதரவும் கிட்டும்.

       பெண்களுக்கு – பணிபுரியும் பெண்கள் வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து கவனமுடன் செல்லுதல் அவசியம். சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம். கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உடையதாய் இருக்கும். பெற்றோர்களின் ஆதரவு இருந்தாலும், உடன் பிறப்புக்களிடையே ஒற்றுமையின்மை தலை தூக்கும். பெண் உறவுகளின் உறவு சீரடையும். தெய்வ வழிபாடுகள், தீர்த்த யாத்திரை செல்லுதல் போன்ற ஆன்மீக காரியங்கள் சிறப்புற நடக்கும்.

      அரசியல்வாதிகளுக்கு – வரவுகள் குறைந்தாலும், பேரும் புகழும் கூடும். சுய ஆதாயத்துக்காக, அனைவரிடமும் எளிமையாகப் பழகும் எண்ணம் தலைதூக்கும். அதேபோல் உங்களிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து எப்போதும் ஒரு கூட்டம் உங்களையே சுற்றிச்சுற்றி வரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொண்டு உதவுவர்.

       மாணவர்களுக்கு – பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைத்து உயர் கல்வியைத் தொடர்வர். வேலைக்கான நேர்காணலில் வெற்றி கிட்டும். நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரும். காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம்கல்வியில் உயர்வும்,  போட்டிகளில் வெற்றிகளும் குவியும். கல்வி ஸ்தாபனத்துக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்ப்பர்.

       கலைஞர்களுக்கு – தேடி வரும் வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவது உங்கள் கையில்தான் உள்ளது. குடுப்பத்திலும், வெளிவட்டாரத்திலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும்.

       பரிகாரங்கள் – திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசித்து ஒன்பது நபர்களுக்கு உளுந்து தானம் செய்யலாம்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
       கல்விக் காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.
      
       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு தைரிய ஸ்தானத்திலும்  கேது – பாக்கிய ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சமபலன்களை அள்ளி வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான 2 ஆம் இடத்துக்கு இராகுவும், மகர இராசியான 8 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியானது அத்தனை நலம் தருவதல்ல.

       இதன் காரணமாக தனபாவத்தில் அமர்ந்த இராகு பிள்ளைகளால் அதிக செலவினங்களைத் தருவார். திடீர் விபத்துக்கள் ஏற்படலாம். மிகுந்த கவனம் தேவை. உணவில் ஏற்படும் நச்சுத்தன்மையால் பலவகையான, சீரணக் கோளாறுகளும் ஏற்படும். வயிற்று உபாதைகளும் ஏற்படலாம். எனவே, எச்சரிக்கையுடன் உணவருந்துவது அவசியம். சிலர் சேமித்து வைத்த பணம் அழியும். குடும்பத்தில் குழப்பம், தீயசூழ்ச்சிகள், ஒரு விதவைப் பெண்ணால் கலகம், ஏவல் செய்வினை போன்ற தொல்லைகள் நேரும். மனைவி குழந்தைகளுக்கு அரிஷ்டம் நேரலாம். நோய்கள் ஏற்படலாம். சிலருக்கு நிம்மதி, சுகத்தைக் கெடுத்தாலும் வனவாசமாய் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார்இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு. பதவி, அந்தஸ்து உயரும்

       ஜென்மத்திற்கு எட்டில் கேது நின்றால் எதெற்கெடுத்தாலும, பயமும், தீராத சங்கடங்களும் ஏற்படும். உடலில் ஏதாவது பிணி வாட்டிக் கொண்டே இருக்கும். பொன் பொருட்கள் நஷ்டமாகும்.  கண்ணில் நோய் காணும். ஆசாரக் குறைவாக நடப்பார். சிந்தை தெளிவின்றி குழம்பிய நிலையில் இருப்பார். பாம்பு தீண்டும் பயமும் உண்டு. இதுசமயம் அனுகூலமாக நடந்து கொள்வாள். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.


       குடும்பம் மற்றும் பொருளாதாரம் - சகோதர நன்மை, வெற்றி மற்றும் சந்தோஷமும் உண்டாகும். சிலருக்குப் பிரிவும், வீண் செலவுகளும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. சாமர்த்திய சாலியாக விளங்குவார். தனவிருத்தியில் தடைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் அதிகத் தொல்லைகள் எழலாம்.
      
. கொடுத்த வாக்கும், நாணயம் தவறுதலும் ஏற்படும்.      தொழில் மற்றும் வியாபாரம் – எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும். முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்  சுலபமாகக் கிடைக்கும். ஆயினும் அதிகமாக்க் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது. அரசின் உதவிகள் கைகொடுக்கும்எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்வியாபாரத்துக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது நல்லது. சிலருக்குக் கடன் கொடுத்தவர்களால் பிரச்சனைகள் எழலாம்
    
      உத்தியோகஸ்தர்களுக்கு – அரசுப் பணியாற்றுபவர்களுக்கு வேலையில் உயர் அதிகாரிகளால் பிரச்சனைகள் எழலாம். சில நேரம் அவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர். நண்பர்களிடம் அடிக்கடி கைமாத்து, கடன் வாங்குவீர்கள். அதுபோல் தேவையற்ற வகையில் அடிக்கடி விடுமுறை எடுப்பீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்காது. ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். 
       பெண்களுக்கு ; யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குத் தாங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
       மாணவர்களுக்கு ; மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவேண்டும்.  கிரிக்கெட் ஆட்டங்களைக் கண்டால், கல்வியும் ஆட்டங்காணும். அவர்களின் கவனம் இன்ப நுகர்விலும், விளையாட்டுத் தனங்களிலும் ஈடுபட்டால் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் குறையும்ஒரு சிலர் படிப்பை ஏதாவது காரணத்தால் விட்டுவிட நேரும்.

       அரசியல்வாதிகளுக்கு  - அரசியலில் செல்வாக்குக் குறையும். சிறிது காலம் பொறுமையுடன் காத்திருந்து செல்வாக்கை உயர்த்த வேண்டிய வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தொண்டர்களின் மனம் அறிந்து அவர்களுக்கு ஆதரவு அளித்தால் உங்கள் புகழ் ஓங்கும். தேவையற்ற விவகாரங்களில் பணத்தைச் செலவிடாது இருந்தால் பண இழப்பைத் தவிர்க்கலாம்.

       கலைஞர்களுக்கு – உங்களுக்குப் பின்னர் வந்த, உங்களைவிட அனுபவத்தில் குறைந்தவர்களெல்லாம் அதிகம் சம்பாதிப்பார்கள். அதைக் கண்டு மனம் வருந்த நேரும். அதனால் கடனகளும் வாங்க நேரும். சிலருக்கு அவர்கள் பேரில் வலம் வரும் கிசுகிசுக்களால் அவமானப்பட நேரும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் போது மனதில் மகிழ்ச்சி நிலவும்.  

       பரிகாரங்கள் – செவ்வாய் கிழமை தோறும் இராகு காலத்தில் துர்கையை வழிபடுதல் சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசித்து ஒன்பது நபர்களுக்கு உளுந்து தானம் செய்யலாம்.

No comments:

Post a Comment