Showing posts with label இளமெழில் முருகா. Show all posts
Showing posts with label இளமெழில் முருகா. Show all posts

Sunday, September 23, 2012

இளமெழில் முருகா



இளமெழில் முருகா 





உளமுருகாதா யிள மெழில் முருகா !
வளம் பெருகாதா  வடிவே லழகா !
                                     
                                ( உளமுருகாதா )


பழம் நீயென்றே , பழனியில் நின்றே ,
தொழுகின்ற பக்தர் குறை தீர்க்க – உன்
                                      
                                     ( உளமுருகாதா )


கோடிக்கோடியாய் யுந்தன் கோவிலிற், 
                 பக்தர் வந்துனைப்பணிந்தும் ,
பாடிப்பாடியே,   பக்தி மேலிட,  
                 நெற்றியிற்   திருநீரணிந்தும் ;
ஆடி ஆடியே , அழகுக்காவடி , 
                 தூக்கி, நன்நடம்  புரிந்தும்>
கூடிக்கூடியே, குமரா யெனுமவர்,
                                     குறைகளுனுக்குத் தெரிந்தும்.
                                        
                                                                           ( உளமுருகாதா )