Showing posts with label செப்டம்பர் -- 2014 மாத ராசிபலன்;;;;. Show all posts
Showing posts with label செப்டம்பர் -- 2014 மாத ராசிபலன்;;;;. Show all posts

Thursday, September 4, 2014

செப்டம்பர் -- 2014 மாத ராசிபலன்;;;;


ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.
செப்டம்பர் -- 2014 மாத ராசிபலன்;;;;
கேது




1-செப்டம்பர் – 2014
ஆவணி-16
திங்கள்



குரு
சுக்

சூரி



சந்
செவ்
சனி ()
புத
இராகு
                      







    
கிரக மாற்றங்கள்
செவ்வாய் – விருச்சிகம்  – 2 – 9 – 2014.
சூரியன் – கன்னி – 17 – 9 – 2014.
சுக்கிரன் – சிம்மம் – 1 – 9 – 2014 ( இரவு - 10 மணி ) மற்றும் கன்னி 26 – 9 - 2014
சனி – வக்ர நிவர்த்தி – 9 – 9 - 2014
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய - சுசேசொலெலுலேலோ, )
         ஆசைதைரியம்பிடிவாதம்சாமர்த்தியம் உடைய மேஷராசி வாசகர்களே!
      உங்கள் இராசிநாதன் செவ்வாய் நல்ஆரோக்கியத்தையும்மனமகிழ்ச்சியையும்பகைகளை வெல்லும் திறனையும்,  அளிக்க வல்லவன் அல்லன் அதுவே ருண பாவ புதனால்செல்வச் செழிப்பையும்முன்னேற்றங்களையும்சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் தருகிறான்தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்சூரியனால் முற்பகுதியில்நண்பர்களால் தொல்லையும் பிற்பகுதியில் தன விருத்தியும் ஏற்படும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும்சிலருக்கு குருவால் மனநிம்மதி கெடலாம். சுக்கிரன் வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்களை அளிக்கும் நிலையில் இல்லை.   சனி பயணங்களைத் தருவார்அப்போது விபத்து பயம் ஏற்படும்எச்சரிக்கை தேவைபல வகையிலும் செல்வத்தையும்வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், இராகு அளிக்கிறார்வியபாவ கேது, ஞான மார்க்கத்தில் ஆர்வத்தையும்ஆன்மிக சிந்தனைகளையும் அளிப்பார்.  பொதுவாக மேஷ இராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
       குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ; பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பர்குழந்தைகளின் முன்னேற்றங் கண்டு வாழ்க்கையில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்தெய்வப் பிரார்த்தனைகளால் வேண்டியது நிறைவேறும்நண்பர்களின் உதவி கிடைக்கும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ; புதிய திட்டங்கள், புதிய நுணுக்கங்களைக் கைக் கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்சிலருக்கு வங்கி சம்பந்தமான கடன் விவகாரங்களில் அனுகூலம் ஏற்படலாம்பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்அரசுப் பணியாளர்களுக்கு ஆதாயம் பெருகும்உண்மையான உழைப்பே உயர்வுதரும்விவசாய விளைபொருட்களால் நல்ல ஆதாயம் கிட்டும்வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.  
       பெண்கள் ;- திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் நடக்கும்பணிபுரியும் பெண்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றிட  உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்,  செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்த ஓளிமயமான வாழ்வு அமையும்சுயதொழில் புரியும் பெண்கள் தங்கள் தொழிலில் புதிய பரிமாணங்களை சுலபமாக எட்டுவர்.
    மாணவர்கள்;- மாணவமாணவிகள் பள்ளியில் படிக்கும் பாடங்களை வீட்டில் திரும்பத் திரும்பப் படித்து மனதில் பதியவைத்துவிளையாட்டுத்தனமாக இருக்காமல் கவனமாகப் படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.  விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றுபள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.
    சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 1 – 9 –2014 காலை 09 – 02 மணி முதல், 03 – 9 – 2014 பகல் 1 – 55 மற்றும் 28 – 9 – 2014 மாலை 4 – 39 மணி முதல் 30- 9 - 2014 மணிவரையாகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்ட எண்கள்;- 1 மற்றும் 9 ஆகும்கவரும் எண்கள் 4 மற்றும் 8 ஆகும்சாதகமான எண்கள் 2, 3, 5 ஆகும்அனுகூலமற்ற எண்கள் 6 மற்றும் 7 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- சிகப்புமஞ்சள்செம்பு மற்றும் தங்க நிறமாகும் ஆகும்தவிர்க்க வேண்டிய நிறம் கருப்பு ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;- செம்பவழம் செம்பில் அல்லது வெள்ளியில் பதித்து வியாழக் கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாத – இராசி – விருச்சிகம்மாதம் – கார்த்திகைகிழமை – ஞாயிறுநட்சத்திரம் -- ஹஸ்தம்திதிகள் – பிரதமைசஷ்டி மற்றும் ஏகாதசி ஆகும்யோகம் -- விஷ்கம்பம்கரணம் -- பவம்  ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்வெள்ளை உடையும்வைரமும் அணியவும்வெள்ளி அல்லது மொச்சை தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.                                 
ரிஷபம்
கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – விவுவேவோ )
       உறுதியான செயலும்உயர்பதவிக்கான ஆளுமைத் தகுதிகளும் உடைய ரிஷபராசி வாசகர்களே !
       தங்கள் இராசிநாதன் தங்களை நற்செயல்களில் ஈடுபடுத்திமனமகிழ்ச்சியையும்அனைத்து வசதிகளையும் தந்துநல்ல அறிவையும்நல்ல நண்பர்களையும் அளிப்பான் சூரியனால் சிந்தனா சக்தி மற்றும் நிர்ணயத் திறன்கள் குறையும். 6 இல் உள்ள செவ்வாய்மிக முக்கியமாக ஈடுபடும் செயல்பாடுகளில் வெற்றிகரமான நல்ல முடிவுகளை மற்றும் இலாபங்களை அளிக்கிறான்சந்தோஷம்நோயினின்று விடுதலை மற்றும் அதிகாரத்திலுள்ள நல்ல மனிதர்களின் தொடர்பையும் ஏற்படுத்துகிறான்சிலருக்குத் தேவையற்ற அலைச்சல்களைத் தருவான் புதன்,  குருவோ தன் பங்குக்குத் தடைகளையும்பணி மாற்றங்களையும் தரலாம்தனக்கென ஒரு தனி வீடு தருவான் சுக்கிரன்திருமணம்புத்திர பாக்கியம் ஆகியவற்றையும் அளிக்கிறான்எதிலும் வெற்றியையும்எல்லாவற்றிலும் முன்னேற்றத்தையும் தரும் சனிதசாபுத்தி சாதகமானால்இராஜயோகத்தையும் அளிக்கிறான்பஞ்சம இராகு குழந்தைகளால் தொல்லைகளை ஏற்படுத்துவான். இலாப பாவக் கேதுவால் பயிர் விளைச்சல் அதிகரிக்கும்நீதித் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான காலம்உத்தியோக உயர்வு மற்றும் வருமான உயர்வு உண்டுமூத்த சகோதரருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம் மொத்தத்தில் ரிஷபராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்பட, உங்கள் காட்டில் மழைதான்.
       குடும்பம் மற்றும் ஆரோக்கியம்;  இறைபக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும்கோவில் திருப்பணிகள் செய்வர்வாகனயோகம் ஏற்படும்பெரியோரின் ஆசிகள் கிடைக்கும்வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும்.
       தொழில் மற்றும் வியாபாரம்பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும்விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்சுயதொழில் புரிபவர்கள், பணியாட்களின் பூரண ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகி இலாபம் அதிகரிக்கும்பொருளாதாரம் மிக உயர்ந்த நிலையடையும்எதிரிகளின் செல்வம் வந்து சேரும்.
       பெண்கள்உறவுகளிடையே நல்லுறவு அதிகரிக்கும்சுயதொழில் புரியும் பெண்களுக்குப் புதிய ஆர்டர்கள் மூலமாக ஆதாயம் பெருகும்பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்உயர் பதவிகள்பாராட்டுக்கள் கிடைக்கும்.
       மாணவர்கள்மாணவர்களுக்குக் கல்வியில் உயர்வும்விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகிட்டும் வாய்ப்புகள் உருவாகும்வீணாகப் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம்பணிக்காக போட்டித்தேர்வு எழுதுபவர்கள், வெற்றி பெற்று முன்னேற்றமடைவர்.

       சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 03 – 9 – 2014 பகல் 1 - 56 மணி முதல், 05 – 9 – 2014 மாலை 05 – 09 மணிவரையாகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
       அதிர்ஷ்ட எண்கள்;- 2 மற்றும் 8 ஆகும்கவரும் எண்கள் 7 மற்றும் 9 ஆகும்சாதகமான எண்கள் 1, 3, 4 மற்றும் 6 ஆகும்அனுகூலமற்ற எண் 5 ஆகும்.
       அதிர்ஷ்ட நிறம்;- பிங்க்பச்சைவெள்ளை ஆகும்தவிர்க்க வேண்டிய நிறம் சிகப்பு ஆகும்.
       அதிர்ஷ்டக் கற்கள்;- வைரத்தைத் தங்கத்தில் பதித்து வெள்ளிக் கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.
       ஆகாத – இராசி – சிம்மம்மாதம் – மார்கழிகிழமை – சனிநட்சத்திரம் -- ஹஸ்தம்திதிகள் – பஞ்சமிதசமி மற்றும் பெளர்ணமி ஆகும்யோகம் -- சுக்கிலம்கரணம் -- சகுனி  ஆகும்.
       பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்வெள்ளை உடையும்வைரமும் அணியவும்வெள்ளி அல்லது மொச்சை தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.                                 
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்திருவாதிரை-1,2,3,4 பாதங்கள்புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – காகிகுகேகோ )
       வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும்,  மாற்றங்களை விரும்புவர்களுமான மிதுனராசி வாசகர்களே !
       அனுகூலமான நிலையில் அமர்ந்திருக்கும் இராசிநாதன் புதனால் புத்தி தெளிவு பெறும்கல்வியில் வெற்றி கிட்டும்கௌரவம்சாமர்த்தியம் ஆகியவை உயரும்தன பாவ குருவால் அழகிய மனைவி அமைவாள்செல்வம் சேரும்வெற்றிகளால் மகிழ்ச்சியும்புத்திர பாக்கியமும் ஏற்படும்வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்முற்பகுதியில் சுய சம்பாத்தியத்தால்  செல்வத்தைத் தருகிறான்சூரியன்பிற்பகுதியில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தலாம்அதிகாரம் செய்யும் முக்கிய பதவிஅந்தஸ்துமரியாதை ஆகியவை சுக்கிரனின் தயவால் கூடும்.  நல்ல நண்பர்களையும் அளிக்கிறான்.   சனியோவீண் செலவுகளையும்குழப்பங்களையும் தருகிறான்.  இராகுஉறவுகளுக்கிடையே இடியாப்பச் சிக்கல்களை உருவாக்கிவிடுகிறான்புண்ணியத்தல யாத்திரைகள்மடாதிபதிகள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் ஆகியவற்றைக் கேது அளிப்பார்.  மொத்தத்தில் மிதுன இராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
       குடும்பம் மற்றும் ஆரோக்கியம்ஆரோக்கியம் பெருகும்.  எவரும் சாதிக்க முடியாத சாதனைகளைச் செய்து முடிப்பர்திருக்கோவில் திருப்பணிகள் செய்வர்வீட்டில் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நிகழும்வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும்திருமணம் மற்றும் வம்ச விருத்தி ஏற்படும்.
       தொழில் மற்றும் வியாபாரம்தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு  வங்கிக் கடன்களும்அரசு உதவிகளும் மிகுந்த சிரமத்துக்கிடையே கிடைக்கும்விவசாயப் பணிகள் சுமாராக நடந்துஓரளவு ஆதாயம் பெருகும்அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்தீவிர பரிசீலனைக்குப் பிறகு பங்குச் சந்தையில் முதலீடுகள் செய்யலாம்பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலை உருவாகும்கலைத் துறையினருக்கு பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.
      பெண்கள்பணிபுரியும் பெண்களுக்குப் புதிய வாகனயோகம் ஏற்படும்அதிகாரிகளின் ஆதரவு பணி உயர்வுக்கு வழிவகுக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்குப் பணியாளர்களின் ஒத்துழைப்புப் பெருகிஉற்பத்திப் பெருக்கத்தால்ஆதாயமும் பெருகும்கணவன் மற்றும் உறவுகளின் உதவிகளும் கிடைக்கும்கலைத் துறையினருக்கு பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்
      மாணவர்கள்கல்வியில் உயர்வும்விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமும் ஏற்பட்டுவெற்றிகளும் குவியும்நல்ல முன்னேற்றங்கண்டு பெற்றோர்க்கும்ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் பெருமை தேடித்தருவர். தேர்வுகள்  மாணவர்கள் தேவையற்ற வேலைகளில் ஈடுபடாமல்படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.  
      சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 05 – 9 – 2014 மாலை 05-10 மணி முதல், 07 – 9 – 2014 இரவு 07 – 34 மணிவரையாகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
     அதிர்ஷ்ட எண்கள்;- 7 மற்றும் 3 ஆகும்கவரும் எண்கள் 5 , 6 மற்றும் 9 ஆகும்சாதகமான எண்கள் 1 மற்றும் 2 ஆகும்அனுகூலமற்ற எண்கள் 4 மற்றும் 8 ஆகும்.
     அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள்பர்ப்பிள்பச்சைநீலம் மற்றும் பிங்க் ஆகும்தவிர்க்க வேண்டிய நிறங்கள் கருப்பு மற்றும் சிகப்பு ஆகும்.
     அதிர்ஷ்டக் கற்கள்;- மரகதம்மஞ்சள் புஷ்பராகம் 3, 5, 7 அல்லது 10 கிராம் தங்கத்தில் பதித்து புதன் கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.
     ஆகாத – இராசி – மகரம்மாதம் – ஆடிகிழமை – திங்கள்நட்சத்திரம் -- ஸ்வாதிதிதிகள் – பிரதமைசப்தமி மற்றும் துவாதசி ஆகும்யோகம் -- பரிகம்கரணம் -- கெளலவம்  ஆகும்.
     பரிகாரம்;- தொடர்ந்து பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்பச்சைப் பட்டாடையும்மரகதமும் அணிந்தாலும்ஸ்வர்ணதானம் அல்லது பாசிப்பயிறு தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.                                 
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம்பூசம்-1,2,3,4 பாதங்கள்ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
இராசி  அறியாதவர்கள் பலனறிய – ஹிஹூஹேஹோடிடுடேடோ )
    வல்லவரும்அடிக்கடி மாற்றங்களையும் பயணங்களையும் விரும்பக் கூடிய கடக இராசி வாசகர்களே!
    இம் மாதம் நல்ஆரோக்கியம்சந்தோஷம்தனலாபம்அனைத்திலும் வெற்றிபலம்உயர்பதவிகள்அதிகாரங்கள்மதிப்பு மரியாதை மற்றும் குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சி என நற்பலன்கள் ஏற்படும் முற்பகுதியில் கோபம் அதிகரிக்கும்பிற்பகுதியில்  சொத்துக்கள் சேரும்தான தர்மத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்பிள்ளைகள் மூலமாக கஷ்டமும்சுகமும் மாறிமாறி வரும்சிலருக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும்தைரியக் குறைவு ஏற்படும்கலைத் துறையில் உள்ளவர்களுக்குப் பரிசுகளும்பாராட்டுக்களும் குவியும்சிலருக்கு அரசாங்கக் கெடுபிடிகள் அதிகரிக்கும்நிம்மதி இன்மையால் தூக்கம் கெடும்.  புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும்சகோதரர்களால்  ஆதாயங்கள் கிட்டும்புதிய செயல்கள் எதுவும் தொடங்காது இருப்பது நல்லதுஇருப்பதைவிட்டுப் பறப்பதைப் பிடிக்காமல்இருப்பதைக் காப்பதே பயனளிக்கும்இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பெண்களிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம்சிலருக்கு மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்மொத்தத்தில் கடகராசி அன்பர்களுக்கு 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
     குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ; திறமை மிக்கவராக விளங்குவார்பயணங்களும் அதனால் லாபமும் ஏற்படும்குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானம்கடின உழைப்புக்குப் பின் கிடைக்கும்.  பக்தி மார்க்கத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும்சிலர் பிறரால் ஏமாற்றப்படலாம்கவனம் தேவை
     தொழில் மற்றும் வியாபாரம்அரசுப்பணி புரிபவர்களுக்கு எதிர்பாராதவிதமாக திடீரென இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்விவசாயிகள் விவசாயத்தில் புதிய முறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்க முனைவர்பஞ்சுகம்பளிதுணிவகைகள்எண்ணவகைகள்அவரைபார்லி ஆகிய பொருட்களின் விளைச்சல் ஆதாயம் தரும்புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்புதிய தொழில்கள்  மூலமாக பணவரத்து அதிகரித்து உயர்வும் ஏற்படும்.
    பெண்கள்பணியிடங்களில் அனுகூலமான சூழல் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்குடும்பத்தார் ஒத்துழைப்பால் வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டொடும்கடின பிரயாசைக்குப் பிறகே அரசின் உதவிகள் கைக்குக் கிடைக்கும்  எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தல் வேண்டும்இல்லையெனில் கவனக்குறைவால் காரியங்களில் தடைகள் ஏற்படும்அரசில் பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் நன்மைபயக்கும்.
    மாணவர்கள்மாணவர்களுக்கு அறிவுத்திறனும்கல்வியிற் தேர்ச்சியும் அதிகரிக்க படிப்பில் அதிக கவனம் தேவைவாகனங்களில் வேகத்தைக் குறைத்து விவேகமாகச் சென்றால் விபத்தைத் தவிர்க்கலாம்கவனம் தேவைதேர்வுகள் நெருங்குவதால் மிகுந்த அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்மாணவர்கள் தங்கள் நினைவாற்றல் பெருகவும்கல்வித்திறன் அதிகரிக்கவும் ‘ ஹைக்ரீவர் ஸ்லோகத்தை தினமும் சொல்லுதல் வேண்டும்.
     சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 07 – 9 - 2014 இரவு 7 – 35 மணிமுதல் 09 – 09 – 2014 இரவு 10 – 04  மணிவரையாகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்ட எண்கள்;- 4 மற்றும் 6 ஆகும்கவரும் எண்கள் 8 மற்றும் 1 ஆகும்சாதகமான எண்கள் 2, 7 மற்றும் 9 ஆகும்அனுகூலமற்ற எண்கள் 3 மற்றும் 5 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- வெள்ளைக்ரீம்சிகப்புமற்றும் மஞ்சள் ஆகும்தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம் மற்றும் பச்சை ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;- வெள்ளியில் பதிக்கப்பட்ட முத்து மோதிரத்தைத் தங்கத்தில் பதித்து திங்கள் கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாத – இராசி – சிம்மம்மாதம் – மாசிகிழமை – புதன்நட்சத்திரம் -- அனுஷம்திதிகள் – துவிதியைசப்தமி மற்றும் துவாதசி ஆகும்யோகம் -- வியாகதம்கரணம் -- நாகவம்  ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து சிவபெருமானுக்கு  நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்வெண்மையான ஆடையணியவும்வெண்மையான மலர்களை அர்ச்சித்தலும்சங்குதானம் அல்லது பச்சரிசி தானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.                                 
சிம்மம்
மகம்-1,2,3,4 பாதங்கள்பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – மிமுமெமோடிடுடேடோ )
       திறமை மிக்கவரும் மற்றும் அறிவுத்திறன் மிக்கவருமான சிம்மராசி வாசகர்களே !   
       தங்கள் இராசிநாதன் சூரியன் முற்பகுதியில் தனு பாவத்தில் அமர்ந்து மகிழ்ச்சிக் குறைவைத் தந்தாலும் பிற்பகுதியில் செல்வச் சேர்க்கைபுத்திரபாக்கியம்வெற்றிபுகழ்பேச்சால் ஆதாயத்தையும்அனைவராலும் விரும்பப்படும் நிலையையும் தருவார்புதன்சிலருக்குக் குடும்பத்தில் குழப்பம்அவப்பெயர் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்விரய பாவ குருவால் சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.    சுக்கிரன்புதிய பதவி,  புதிய பொறுப்புநவீன பொருட்களின் சேர்க்கைவாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவற்றைத் தருவார்சகோதர பாவச் செவ்வாய்திருமணம்பயிர்மனைசகோதரரால் நன்மை ஆகியவற்றைத் தருவார்இனிய விழாக்களும்,  பதவிகளும்எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றியும் சனியால் கிடைக்கும்.  கல்வியில் முன்னேற்றமும்இளைய சகோதரர்களால் மற்றும்  சிறுபயணங்களால் ஆதாயமும் கிடைக்கும்எழுத்து மற்றும் பதிப்பித்தல் துறையில் முன்னேற்றமும் ஏற்படும்மொத்தத்தில் சிம்மராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
     குடும்பம் மற்றும் ஆரோக்கியம்ஆரோக்கியமும்அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளும் பெருகும்நல்ல பணியாளர்கள் அமைவர்மனைவியின் ஒத்துழைப்பால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்வியாபாரத்திற்காகச் செல்லும் வெளிநாட்டுப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும்திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்நல்ல சந்ததிகள் உருவாகும்.
    தொழில் மற்றும் வியாபாரம்;  தொழிலில் இருந்தவந்த மந்த நிலைகள் மாறி தொழில் சூடுபிடிக்கும்.  வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைப் புகுத்தி அதன் மூலமாக அதிக லாபமடையலாம்தாதுப் பொருட்கள்உதிரிப்பாகங்கள் அல்லது மென்பொருள் துறைகளில் விற்பனை சூடுபிடிக்கும்அதிக விளைச்சல் காரணமாக விவசாயிகளுக்கு இலாபம் அதிகரிக்கும்தேங்கிக்கிடந்த பொருட்கள் விற்பனையாகி இலாபம் பெருகும்.
        பெண்கள் ;  பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகளால் நல்ல எதிர்காலம் அமையும்.  திட்டமிடப்படி புனிதப் பயணங்கள் மகிழ்ச்சிகரமாகவும்வெற்றிகரமாகவும்  அமையும்பொறுப்பற்ற பிள்ளைகளால் மனஅமைதி குறையும்சிலர் தங்கள் பணிகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தங்கள் சாமர்த்தியத்தால் முறியடித்து முன்னேறுவர்.
    மாணவர்கள் ; மாணவர்கள் நன்கு படித்து தேர்வுகளில் வெற்றிபெற முடியும்.  கருத்துடன்கவனமாகப் படித்தல் அவசியம்.  எந்தக் ஒரு காரியத்தையும் நாளைக்கென்று ஒத்திப் போடாமல் இன்றே செய்து முன்னேற முயலவேண்டும்விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் வெற்றிகளைக் குவிப்பர்
     சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 09 – 09 - 2014 இரவு 10 – 05 மணிமுதல் 11 – 09 - 2014 இரவு 1 – 30  மணி வரை ஆகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்டக் எண்கள்;- 1, 4, 5, 6 மற்றும் 9 ஆகும்சாதகமான எண் 3 ஆகும்அனுகூலமற்ற எண்கள் 2, 7 மற்றும் 8 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்சுசிகப்பு மற்றும் பச்சைக்ரீம்ஆகும்தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம்வெள்ளை மற்றும் கருப்பு ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;- தங்கத்தில்  பதிக்கப்பட்ட மாணிக்கம் அல்லது மரகத மோதிரத்தைத் தங்கத்தில் பதித்து ஞாயிற்றுக் கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாத – இராசி – மீனம்மாதம் – ஆடிகிழமை – புதன்நட்சத்திரம் -- மூலம்திதிகள் – திருதியைஅஷ்டமி மற்றும் திரயோதசி ஆகும்யோகம் --  திருதிகரணம் -- பவம்  ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து அர்த்தநாரீஸ்வர்ரை  நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்சூரிய நமஸ்காரம் செய்தல்,சிகப்பு ஆடையணியவும்சிகப்பு மலர்களால் அர்ச்சித்தலும்கோதுமைதானம் அல்லது சிகப்புப் பசு தானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்
கன்னி
உத்திரம் – 2, 3, 4-பாதங்கள்ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள்சித்திரை – 1,2 பாதங்கள்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – டோபிபூபேபோ )
     மாறக்கூடிய மனமுடையவரும்,  எதையும் ஒழுங்காகத் திட்டமிட்டுச் செய்பவருமான கன்னிராசி வாசகர்களே!
    தங்கள் இராசியதிபதி புதன் கல்வியில் தடையும்சகோதர விரோதமும் ஏற்படும்ஆயினும் இலாபத்தில் குரு இருப்பதால் செல்வம் சேரும்அரசியல் அதிகாரம் உண்டாகும்உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்பெரும் புள்ளிகளின் நட்பின் காரணமாக முன்னேற்றம் அடைவர்நல்ல சந்ததி ஏற்படும்பணம் பல வழியிலும் பணம் குவியும்வெளிநாட்டுப் பயணம் ஏற்படும்சிலருக்கு வீண் செலவுகளும்தந்தைக்கு உடல் பாதிப்பு ஏற்படும்சுக்கிரன், மணவாழ்க்கையில் மகிழ்ச்சியையும்செல்வாக்கையும்கௌரவத்தையும் தருவார்.  தங்களுக்கு உதவிகரமான நண்பர்களையும்நல்ல செயல்பாடுகளைச் செய்யும் நிலையையும்புகழையும் தருவார்.  எடுத்த காரியங்களில் வெற்றிகளையும் தருகிறான்செவ்வாய் சிலருக்கு மனநிம்மதியைக் குறைக்கலாம். கேதுவின் அமர்வு சிலருக்கு முறைமீறிய காதலைத் தந்துகட்டாயத் திருமணத்தில் முடியலாம்.   வேண்டாத விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் வாழ்க்கையில்  எச்சரிக்கையுடன் நடப்பது நல்லது. மொத்தத்தில் கன்னிராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ; குடும்பத்தில் சுகசௌகரியங்கள் பெருகும்பணவரவு அதிகரிக்கும், புதிய நண்பர்களால் சந்தோஷம் கூடும்இனிய பயணங்களால் இன்பம் சேரும்நல்ல செய்திகள் வந்து சேரும்செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
    தொழில் மற்றும் வியாபாரம் ; கடன் தொல்லைகள் தலைதூக்கினாலும்பிற்பகுதியில் நிலைமை சீரடையும்அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு பதவிமாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம்வியாபாரத்தை அதிகரிக்கப் புதிய யுக்திகளைக் கையாள்தல் அவசியம்.
    பெண்கள் ;-  பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் பணிகளில் முழுத் திருப்தி ஏற்படும். உயர் அதிகாரிகளின் உதவியால் மன உழைச்சல்கள் குறையும்தேவையற்ற செலவுகளைக் குறைத்தால்கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.  புதிய சொத்துக்கள் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்.  அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும்  சரிபார்த்துப் பத்திரப் பதிவு செய்தால் ஏமாறும் வாய்ப்பு குறையும்.
    மாணவர்கள் ;- மாணவர்கள்  மிகுந்த அக்கறையுடன் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி நடந்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்சுயமுயற்சியும்தன்நம்பிக்கையுமே மாணவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்தங்களின் கடின உழைப்பால்விளையாட்டுத் துறையில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் இதுவரை எட்டியிராத உயரத்தினை எட்டுவர்.                                                                                                                                                   
    சந்திராஷட்டமம்ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 11 – 09 - 2014 இரவு 1 - 31 மணிமுதல் 14 – 09 - 2014 காலை 6 – 44  மணி வரை ஆகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்ட எண்கள்;- 2, 3, 5, 6 மற்றும் 7 ஆகும்சாதகமான எண்கள் 4 மற்றும் 9 ஆகும்அனுகூலமற்ற எண்கள் 1 மற்றும் 8 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள்வெள்ளை மற்றும் பச்சை ஆகும்தவிர்க்க வேண்டிய நிறங்கள் சிகப்புவெள்ளை மற்றும் கருப்பு ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகம்முத்துபச்சைவைரம்மரகதம் இவற்றிலொன்றை தங்கத்தில்  பதித்த மோதிரத்தைத் புதன் கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாத – இராசி – சிம்மம்மாதம் – புரட்டாசிகிழமை – சனிநட்சத்திரம் -- திருவோணம்திதிகள் – பஞ்சமிதசமி மற்றும் பௌர்ணமி அல்லது அமாவாசை ஆகும்யோகம் --  சுக்கிலம்கரணம் -- கௌலவம்  ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ மஹாலட்சுமியை  நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்சூரிய நமஸ்காரம் செய்தல், பச்சை வண்ண ஆடையணியவும் மலர்களால் அர்ச்சித்தலும்ஸ்வர்ணதானம் அல்லது துவரைதானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.
துலாம்
சித்திரை-3,4 பாதங்கள்சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – ரிருரேரோதிதுதே )
      துலாக்கோல் போல் சமமான நிலையுடையவரும்சமுதாயத்தை சீர்திருத்தப் பிறந்தவருமான துலாராசி வாசகர்களே !
    தங்கள் இராசிநாதன் இலாப பாவத்தில் அமர்ந்து  சுகத்தையும்தனலாபத்தையும்புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷத்தையும் தருவார்இனிய பயணங்களால் இன்பம் சேரும்நல்ல செய்திகள் வந்து சேரும்செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லதுஉறவுகளுக்கு உயர்வைத்தரும் புதன்பலரின் நட்பு மற்றும் உதவி இருந்தும் காரியத் தடைகளைத் தருவான்முற்பகுதியில் சூரியன்பலவழிகளிலும் பணவரவையும்அரசு மூலம் ஆதாயத்தையும்மகிழ்ச்சிஉயர்கின்ற அந்தஸ்துபிறர் காட்டும் மரியாதை அனைத்தும் கூடும்பிற்பகுதியில் குடும்ப ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பை  ஏற்படுத்தலாம்சிலருக்குச் செவ்வாய் மனவருத்தத்தையும்சனி பிரிவையும்குரு இடமாற்றத்தையும் தந்தாலும்கேது வித்வத்துவத்தையும்வாக்கு வன்மையையும் தருவார்ஞான முயற்சியும்நற்சிந்தனையும் உயர்வைத்தரும்உங்கள் திறமைகளைக் காட்டும் சுயமுயற்சிகளைதன்னம்பிக்கையைக் கூட்டி தைரியத்தையும் அளிப்பார்ஒருவர் நன்மை தந்தால் மற்றவர் தீமை செய்வதுதானே கிரகங்களின் இயல்புஎனவே,  கவலை வேண்டாம்மொத்தத்தில் துலாராசி அன்பர்களுக்கு 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- அன்பாலும்பாசத்தாலும் குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் சீராகும்பொறுமையுடன் வாழ்ந்தால் பெருமை சேரும்எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே வீட்டுத் தேவைகளுக்குப் பணவரவு போதுமானதாக அமையும்எதிரிகள் அடங்குவர்கஷ்டங்களும்கவலைகளும் மறைந்துதெளிவும்தெம்பும் அதிகரிக்கும்.
    தொழில் மற்றும் வியாபாரம் ;- புதிய தொழில் நுட்பங்களால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால்  தொழில் அபிவிருத்தியடையும்விவசாயிகளுக்குத்  தேவையான கடனுதவிகள் விரைந்து கிடைக்கும்விளைச்சல் பெருகி இலாபமும் அதிகரிக்கும்கடுகுஉளுந்து மற்றும் கோதுமை ஆகியவற்றின் விற்பனை அதிகரிக்கும். பிறருக்குக் கொடுக்கப்பட்டநெடுநாளையக் கடன்கள் வசூலாகும்.
    பெண்கள் ;- மேலதிகாரிகளின் மேன்மையான ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது மேன்மையைத் தரும்சிலரின் காதல் விவகாரங்களில் ஏமாற்றங்கள் தலை தூக்கலாம்விரும்பியபடி வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்பட்டு அதனால் ஆதாயம் பெருகும்வீட்டில் விருந்தினர் வருகையால் வீட்டுப் பெண்களுக்கு வேலைப்பளு கூடும்.
    மாணவர்கள் ;- காலம் பொன் போன்றது எனவேமாணவர்கள் முகநூல் மற்றும் வலைத் தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி  அதிக மதிப்பெண்கள் பெற முயலவேண்டும்பெற்றோர்களின் கஷ்டங்களை உணர்ந்தாலன்றி வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் அடையமுடியாதுவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர் சிலர்.
    சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 14 – 09 - 2014 காலை 6 - 45 மணிமுதல் 16 – 09 - 2014 பகல் 2 – 23  மணி வரை ஆகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்ட எண்கள்;- 1, 2, 4,  மற்றும் 7 ஆகும்சாதகமான எண் 8 ஆகும்அனுகூலமற்ற எண்கள் 5, 6, 3 மற்றும் 9 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச்வெள்ளை மற்றும் சிகப்பு ஆகும்தவிர்க்க வேண்டிய நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;-   வைரத்தை,  தங்கத்தில் அல்லது பிளாட்டினத்தில் பதித்த மோதிரத்தைத் வெள்ளிக் கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாத – இராசி – கன்னிமாதம் – தைகிழமை – வியாழன்நட்சத்திரம் -- சதயம்திதிகள் – சதுர்த்திநவமி மற்றும் சதுர்த்தசி அல்லது அமாவாசை ஆகும்யோகம் --  சுக்கிலம்கரணம் -- தைதுலம்  ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ இராமபிரானை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்சூரிய நமஸ்காரம் செய்தல், வெள்ளை வண்ண ஆடையணியவும் வெள்ளை மலர்களால் அர்ச்சித்தலும்வெள்ளிதானம் அல்லது மொச்சையைத் தானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.
விருச்சிகம்
விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – தோநிநுநேநோயு )
    உண்மையான,  நம்பத்தகுந்த விருச்சிகராசி வாசகர்களே !
     தங்கள் இராசிநாதன் செவ்வாய் பொருளாதார முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அளிக்கிறார்பூமிலாபம்ஆண்வாரிசு உருவாகுதல்இன்பம்சந்தோஷம்மணவாழ்வில் மகிழ்ச்சிநவீன மற்றும் சுகபோகத்திற்கான சாதனங்கள் கிடைத்தல் ஆகிய நன்மைகளையும் தருகிறார்புதன் சிறு சங்கடங்களைந் தந்தாலும்சுக்கிரன் நண்பர்களின் மூலமாக உதவிகளையும்ஆதாயங்களையும்பதவிகளையும் அளிக்கிறார்அலைசல்கள் அதிகரிக்கும்சிலருக்குப் பயணத்தின்போது  விபத்துக்கள் ஏற்படலாம்பணியாட்களால் உதவி கிடைக்கும்சிலர் ரகசிய வேலைகளில் ஈடுபடுவர்மொத்தத்தில் விருச்சிகராசி அன்பர்களுக்கு 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.  
     குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- மணவாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  பழைய பகைகள் நட்பாக மலரும்தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம்.  சந்ததி விருத்தி ஏற்படும்செயல்திறன் கூடும்அதிகப் புகழும்மனை மூலம் இலாபமும் ஏற்படும்தெய்வபக்தி பெருகும்பல புண்ணியத்தல யாத்திரைகள் மேற்கொள்வர்.
    தொழில் மற்றும் வியாபாரம் ;-  தொழில் மற்றும் வியாபார சம்பந்தமாக தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும்தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம்.  கூட்டாளிகளை நம்பி புதிய திட்டங்களில் முதலீடு செய்யாதிருப்பது நல்லதுகடன் கொடுத்தவர்கள் கெடுபிடி செய்வர்கரும்புஉலோகங்கள் மற்றும் கம்பளிப் பொருட்கள் வியாபாரம் அதிக ஆதாயம் தரும்.
    பொருளாதாரத்தில் திருப்தியற்ற நிலை ஏற்படும்.  வங்கி மூலம் எதிர்பார்த்த வியாபாரத்திற்கான கடன்கள் தடை தாமதிற்குப் பிறகு கிடைக்கும்பங்குச்சந்தையில் யோசித்து முதலீடு செய்வது நல்லதுநிரந்தர சேமிப்புக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் பயன் தரும். தேவையற்ற சாதனங்களை வாங்க சேமிப்புப் பணத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
    பெண்கள் ;- பணிபுரியும் பெண்கள்  முழுமனதோடு பணியில் ஈடுபட்ட முடியாதபடி இடைஞ்சல்கள் ஏற்படும்அதன் காரணமாக  எதிர்பார்த்த பதவி உயர்வுகள் மற்றும் முன்னேற்றங்களில் தடைகள் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்றம் மனமகிழ்ச்சியை அளிக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் தங்கள்  பணியாளர்களிடம் சுமுகமாக இருப்பது உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.  இலாபமும் அதிகரிக்கும்.
    மாணவர்கள் ;-  ஆராய்ச்சி அல்லது விளையாட்டு சம்பந்தமான சுற்றுலாப் பயணங்கள் பயனுள்ளதாக அமையும்.  மாணவர்கள் கவனமாகப் படித்து முன்னேறும் ஆர்வம் கூடும்போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சில தடைகளை எதிர்கொள்வர்காதல் விவகாரங்கள் ஆரம்பத்தில் சில சிக்கல்களைத் தந்தாலும்முடிவில் சாதகமாக அமையும்.
    சந்திராஷ்டமம்ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 16 – 09 - 2014 பகல்   6 - 24 மணிமுதல் 18 – 09 - 2014 இரவு 12 – 22  மணி வரை ஆகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்ட எண்கள்;- 3, 9, 2, 4, 1 மற்றும் 7 ஆகும்அனுகூலமற்ற எண்கள் 5, 6,  மற்றும் 8 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச்மஞ்சள்க்ரீம் மற்றும் சிகப்பு ஆகும்தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம்வெள்ளை மற்றும் பச்சை ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;-   மஞ்சள் புஷ்பராகத்தை அல்லது செம்பவளத்தை  தங்கத்தில் அல்லது செம்பில் பதித்த மோதிரத்தை செவ்வாய்க் கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை நாலாவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாத – இராசி – மிதுனம்மாதம் - அய்ப்பசிகிழமை – வெள்ளிநட்சத்திரம் -- ரேவதிதிதிகள் – பிரதமைசஷ்டி மற்றும் ஏகாதசி  ஆகும்யோகம் --  வியாதீபாதம்கரணம் -- கரஜை  ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து துர்க்கையை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்சூரிய நமஸ்காரம் செய்தல், சிவப்பு வண்ண ஆடையணியவும் வெள்ளை மலர்களால் அர்ச்சித்தலும்பவளம் அணியவும் அல்லது சிகப்புக் காளை தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.

தனுசு
 ( மூலம்-1,2,3,4 பாதங்கள்பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – யேயோபீபூடாபே )
     கடவுளுக்குப் பயந்தவரும்அதிகச் செலவாளியும்நேர்மையானவரும்,  தனுர் ராசி வாசகர்களே!
    தங்கள் இராசிநாதன் குருஆயுள் பாவத்தில் அமர்ந்து அனுகூலமற்ற நிலைகளைத் தந்தாலும்இலாபத்தில் உள்ள செவ்வாய் மற்றும் சனியால் எல்லாமே சுப பலனாகவே நடக்கும் என நம்பலாம்பூமிவீடுபயிர் இவற்றால் அதிக தனலாபம் அடைவர்சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இனிய பயணங்களைத் தருவார்புத்திர பாக்கியம்திருமணம் மற்றும் செல்வ வளத்தைப் பெருக்குவார்மனைவி மூலம் பூர்ண சுகமும் கிடைக்கும்.  அதனால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும்புண்ணியத்தல யாத்திரைகள் செல்வீர்கள்புதிய பதவிகள்அந்தஸ்து உயர்வுநல்லாரோக்கியம்அதிகாரிகளின் அங்கீகாரம்நல்லவர்களின் நட்புசிறப்பு கௌரவங்கள் அனைத்தும் ஏற்படும்சிலர் தவறான வழிகளில் ஈடுபடுவர்பாக்கிய பாவச் சுக்கிரன்விரும்பிய பொருட்களெல்லாம் கிடைக்கும்கல்வியும் புகழும் ஓங்கும்.முற்பகுதியில் தந்தையுடன் சுமுக உறவு இருக்காதுபிற்பகுதியில் சூரியன் உயர்தர வாகனங்களையும்புகழையும் தருவார்பொன்பொருள் சேரும்சிலருக்கு வழக்குகளில் வெற்றி இன்மைஈடுபடும் காரியங்களில் தோல்வி ஆகியவை ஏற்படலாம்..  மொத்தத்தில் தனுசு இராசி அன்பர்களுக்கு  75 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
         குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- புதிய ஆபரணங்களை மனதுக்குப் பிடித்தபடி வாங்குவர்மனைவீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்கும்குழந்தைகள்  மூலமாக மகிழ்ச்சி பெருகும்மனைவியின் மீது பாசம் கூடும்தெய்வபக்தியும்தர்மசிந்தனையும் ஏற்படும்வேண்டுதல்களை நிறைவேற்றப் பல புண்ணியத்தல யாத்திரைகள் மேற்கோள்வர்.
    தொழில் மற்றும் வியாபாரம் ;- பொருளாதார உயர்வு காரணமாக சந்தோஷம்,  பெருகும்அனைத்து வளமும் பெருகிதொழில் மற்றும் வியாபாரத்தில் புதுத் தெம்பும்உற்சாகமும் கூடும்அரசு அதிகாரிகள் தங்கள்  பதவி உயர்வுக்காகப் போராடும் நிலை ஏற்படும்நகரச் சந்தை நிலவரங்களை அறிந்து செய்யும் வியாபாரம் ஆதாயம் தரும். கடல்  வாணிபம் பெருகி இலாபம் கிடைக்கும். இசை மற்றும் சினிமாக் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதார உயர்வு அடைவர்சிலருக்கு அரசுப் பணிகள் கிடைக்கும்.
        பெண்கள் ;- பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுசரணையால் உற்சாகம் பொங்கி மனநிறைவுடன் பணிபுரிவர்திருமணமாகாத பெண்களுக்குத் திருமணமாகி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்குடும்பப் பொறுப்பு காரணமாக வேலையை விடவேண்டிய சூழல் உருவாகும்நண்பர்கள் மூலம் பல உதவிகள் கிடைக்கும்சுயதொழில் புரிவோர் தங்கள் பணிகளைத் திறம்படச் செய்வர்.
    மாணவர்கள் ;- மாணவர்களின் கல்வித்தரம் உயர  ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் உதவிகரமாக இருக்கும்வீணாகப் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் முன்னேற ஆர்வம் காட்டவேண்டும்சில வீரவீராங்கனைகள் தடகளப் போட்டிகளில்  பங்கு பெற்று தேசிய அளவில் பரிசுகளையும்பதக்கங்களையும் வெல்வர்.
    சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 18 – 09 - 2014 இரவு   12 - 23 மணிமுதல் 21 –19 - 2014 பகல் 11 – 52  மணி வரை ஆகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்ட எண்கள்;- 6, 3, 5,  மற்றும் 8 ஆகும்சாதகமான எண்கள் 1 மற்றும் 4 ஆகும்அனுகூலமற்ற எண்கள் 2, 7,  மற்றும் 9 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச்பச்சைக்ரீம்வெள்ளை மற்றும் வெளிர் நீலமாகும்.   தவிர்க்க வேண்டிய நிறங்கள் சிகப்பு  மற்றும் கருப்பு ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகத்தை தங்கத்தில்  பதித்த மோதிரத்தை வியாழக் கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாத – இராசி – மீனம்மாதம் - ஆடிகிழமை – வெள்ளிநட்சத்திரம் -- பரணிதிதிகள் – திருதியைஅஷ்டமி மற்றும் திரயோதசி  ஆகும்யோகம் --  வஜ்ரம்கரணம் -- தைதுலை  ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ கிருஷ்ணரை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்சூரிய நமஸ்காரம் செய்தல், மஞ்சள் வண்ண ஆடையணியவும் மஞ்சள் மலர்களால் அர்ச்சித்தலும்புஷ்பராக்கல் அணியவும் அல்லது கொண்டைக்கடலை தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.
மகரம்
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – போஜிஜூஜேஜோகாகீ )
    தியாக குணம் பொருந்தியபேரறிவு பெற்ற,  மகரராசி வாசகர்களே !
    தங்கள் இராசிநாதன் கர்ம பாவத்தில் அமர்ந்து பயனற்ற வேலைகளில் ஈடுபடுத்துவான்வீண்செலவுக்கும் வித்திடுவான்இணைந்திருக்கும் செவ்வாய் காரியத்தடைகளையும்வெளிநாட்டுப் பயணங்களையும்கடின உழைப்பின் பேரில் முயற்சிகளில் வெற்றி தருவான்ஆயினும்களத்திர பாவத்தில் உள்ள குருவால் செல்வம் செழிக்கும்குடும்பத்தில் குதூகலமும்அனைத்துவகை இன்பமும்நல்லுணவும்நிம்மதியான தூக்கமும்வஸ்திர லாபமும் கிடைக்கும்பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.  நறுமணப் பொருட்களும்ஆடம்பர சாதனங்களும்திருமணமும்மணவாழ்க்கையில் மகிழ்ச்சியும்கல்வியிற் தேர்ச்சியும்புத்திர பாக்கியமும்புதிய பதவிகளும் மற்றும் கௌரவம் ஆகிய அனைத்தையும் தருவான் சுக்கிரன்சிலருக்குக் காயங்கள் ஏற்படலாம்சொத்துச் சேர்க்கையும்எல்லா நிலையிலும் முன்னேற்றங்களும்வியாபாரத்தில் வெற்றியும் ஏற்படும்சிலருக்கு மனக்குழப்பங்களும் ஏற்படலாம்மொத்தத்தில் மகரராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- குடும்ப நிகழ்வுகள் கணவன்மனைவிக்குள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும்மனைவி  சொல் கேட்டுக் கணவன் நடப்பான்குழந்தைகளின் சுகவாழ்வுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள்சொல் வாக்கால்செல்வாக்குப் பெறுவீர்கள்பள்ளிக்கான செலவுகள் அதிகரிக்கும்.
    தொழில் மற்றும் வியாபாரம் ;-  வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி தரும்தொழிலில் முன்னேற்றங்காண புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தும் சூழ்நிலை உருவாகும்கார் போன்ற சொகுசு வகனங்கள் கிடைக்கும்சிலருக்குப் பணியில் அலைச்சல்கள் அதிகமாகும்பதவிப் பிரச்சனைகளும் ஏற்படலாம்ஓயாத உழைப்பு களைப்பை அதிகரிக்கும்பங்குச்சந்தை விவகாரங்களில் யோசித்து இறங்கினால்  பொருள் இழப்பைத் தவிர்க்கலாம்.
    பெண்கள் ;- அரசுப் பணிபுரியும் பெண்கள்தாங்கள் கேட்ட இடத்திற்க்கு இடமாற்றம் கிடைக்கும்வீட்டு மனைவிகள் தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை கவனிப்பதால் ஓய்வின்றி இருப்பர்குழந்தைகளின் போக்கு கவலையளிக்கும்குடும்பத்துடன் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் செலவீர்கள்மகளிர் குழுக்களில் உள்ள பெண்களுக்குப் புதிய கடன்கள் கிடைக்கும்.
    மாணவர்கள் ;- தங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டிப் படிக்க வேண்டிய மிக முக்கியமான  காலமாகும்கவனமாகப் படித்தால் மட்டுமே  அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்விளையாட்டு வீரர்கள் பல போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்நல்ல நண்பர்களோடு பழகுதல் நலம்இல்லையெனில் தீயவழிகளில் சென்று முன்னேற்றம் தடைப்பட நேரும்.
     சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 21 – 09 - 2014 பகல் 11 - 53   மணிமுதல் 23 – 09 - 2014 இரவு 11 – 20  மணி வரை ஆகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்ட எண்கள்;- 6, 9 மற்றும் 8 ஆகும்அனுகூலமற்ற எண் 3 ஆகும்மற்ற எண்கள் அனுகூலமானவையாகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- நீலம்சிகப்புகருப்பு மற்றும் வெள்ளை ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் மஞ்சள்  மற்றும் க்ரீம் ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;- நீலக்கல்லை தங்கத்தில் அல்லது பஞ்சலோகத்தில் பதித்து மோதிரத்தை சனிக் கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை இரண்டாவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாத – இராசி – சிம்மம்மாதம் - ஆவணிகிழமை – செவ்வாய்நட்சத்திரம் -- ரோஹிணிதிதிகள் – சதுர்த்திநவமி மற்றும் சதுர்த்தசி  ஆகும்யோகம் --  வைதிருதிகரணம் -- சகுனி  ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயரை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்சூரிய நமஸ்காரம் செய்தல், கரிய வண்ண ஆடையணியவும் நீல மலர்களால் அர்ச்சித்தலும்இந்திரநீலக்கல் அணியவும் கருப்புப் பசு அல்லது எள்ளுத்தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.

கும்பம்
அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – குகூகோஸீஸூஸே,ஸோதா )
     எதையும் சரியென்றுநியாயம் என்று பட்டால் மட்டுமே செய்யக்கூடிய கும்பராசி வாசகர்களே!
     தங்கள் இராசிநாதன் சனியால் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும்கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும்செல்வம் சேரும்நல்ல பணியாட்கள் அமைவர்இணைந்திருக்கும் செவ்வாய் திருமணம்மக்கட்பேறுகால்நடைச் செல்வம் மற்றும் பால்வளம் ஆகியவற்றைத் தருவான்புதன் பிறரைக் கவரும் பொலிவும்அழகும் தருவார்அரசுப் பணி மற்றும் அரசு ஆதரவு கிடைக்கும்சூரியன்காரியத் தடைகளைத் தரலாம்சுக்கிரன்மனதிற்குப் பிடித்தபடி எல்லாம் நடக்க அருள்புரிவான்பலவீடுகளும்பணக்கார மனைவியும் அமைவாள்குருவால் பங்காளிகள் கை ஓங்கும்அட்டம இராகு சிலருக்கு இனம்புரியாத பயத்தைத் தரலாம்.   பயணங்களையும் அதனால் செலவுகளையும் ஏற்படுத்துவார்சிலருக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படலாம்மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.  கோவில்குளம் என புனித யாத்திரைகள் மேற்கொள்வர்மதசம்பந்தமான மற்றும் தத்துவ விஷயங்களைப் பற்றிப் பேசுவர்நல்ல நண்பர்கள் கிடைப்பர்அரசால் அனுகூலங்கள் கிடைக்கும்அறிவு விருத்தியாகும்உயர்பதவிகளில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும்.  மொத்தத்தில் கும்பராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்,   
     குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;-   குடும்பத்தில் உடன்பிறப்புக்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.  பேச்சில் கவனம் தேவைகணவன் மனைவி உறவு நல்ல விதமாக அமையும்நீண்ட காலமாக வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்சொன்ன சொல் கேட்காத பிள்ளைகளால் சோர்வு ஏற்படும்.
    தொழில் மற்றும் ஆரோக்கியம் ;-  தொழில் மூலம் கைநிறையச் சம்பாதிக்கும் பெண்கள் புதிய பொன்நகைகள் வாங்குவார்கள்தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள்நண்பர்களால் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்.  வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்க கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
    பெண்கள் ;- நன்றாக உழைத்துத் தங்கள் பணிகளில் வெற்றி மேல்  வெற்றியடைவர்.  பணியிடங்களில் பிரச்சனை எழாமல் இருக்க தேவையற்ற பேச்சுக்களைக் குறைப்பது நல்லதுவெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்புண்டுசிலர் தனிக்குடித்தனம் செல்ல முற்படுவர்பெரியவர்களை அனுசரித்து நடந்தால் பெருமை சேரும்.
    மாணவர்கள் ;- மாணவமாணவிகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  தேவையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபடாமல் சிரத்தையுடன் படித்தால் தேர்வுகளில் வெற்றி நிச்சியம்வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்லுவதால் விபத்தைத் தவிர்க்கலாம்விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.
   சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 23 – 09 - 2014 இரவு 11 - 20  மணிமுதல் 26 – 09 - 2014 காலை 09 – 12  மணி வரை ஆகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்ட எண்கள்;- 3, 9, 2 மற்றும் 7 ஆகும்அனுகூலமற்ற எண்கள் 1, 4, 5, மற்றும் 8 ஆகும்.  அனுகூலமான எண் 6 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், சிகப்புவெள்ளை மற்றும் க்ரீம்  ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் பச்சை  மற்றும் நீலம் ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;- நீலக்கல்லை தங்கத்தில் அல்லது பஞ்சலோகத்தில் பதித்து மோதிரத்தை சனிக் கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை இரண்டாவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாத – இராசி – மகரம்மாதம் - வைகாசிகிழமை – வியாழன்நட்சத்திரம் -- திருவாதிரைதிதிகள் – திருதியைஅஷ்டமி மற்றும் திரோயதசி  ஆகும்யோகம் --  கண்டகரணம் -- கிம்ஸ்துக்னம்  ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ சாஸ்தாவை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்சூரிய நமஸ்காரம் செய்தல், கரிய வண்ண ஆடையணியவும் நீல மலர்களால் அர்ச்சித்தலும்இந்திரநீலக்கல் அணியவும் கருப்புப் பசு அல்லது எள்ளுத்தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.

மீனம்
பூரட்டாதி – 4 ஆம் பாதம்உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
இராசி  அறியாதவர்கள் பலன் அறிய – தீதுஶ்ரீதே,தோச்சசீ )
     ஓய்வு அற்றவரும்மனிதாபிமானம் உடையவரும்பிறருக்கு உதவுபவருமான மீன இராசி வாசகர்களே !
    தங்கள் இராசிநாதன் குரு மனதில் சந்தோஷத்தையும்நல்ல நண்பர்களின் அருகாமையையும்புத்திர பாக்கியத்தையும்பகை வெல்லுதலையும்அரசு அனுகூலங்களையும்அதிக சொத்து சேர்க்கையையும்அறிவு விருத்தியையும்அதிக இலாபங்களையும்எதிலும் வெற்றியையும்உயர் அதிகாரிகளின் உதவிகளையும் அள்ளித் தருவார்ருண பாவத்தில் உள்ள சுக்கிரன் வயிற்றுவலி போன்ற உபாதைகளைத் தருவார்முற்பகுதியில் சூரியன் தன விருத்தி தருவார்வங்கிக் கணக்கில் ரொக்க இருப்பு கூடும்நெடுந்தூரப் பயணங்கள் இலாபம் தரும்பயிர் விளைச்சல்கள் கூடும்இல்லறத்திலும் மகிழ்ச்சியையும்தனலாபத்தையும்அதிக வருமானத்தையும் அள்ளி வழங்குகிறார்.  பிற்பகுதியில் வீண் பயணங்களும்வீண் அலைச்சல்களும் ஏற்படும்அட்டமச் சனி கடின உழைப்பைத் தரும்ஞானம் அல்லது பக்தி மார்க்கத்தில் மனம் செல்லும்மொத்தத்தில் மீனராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- சிலருக்கு குடும்பச் சொத்து கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்மனைவியின் ஒத்துழைப்பின்மை மன அமைதியைக் குறைக்கும் . எனினும் குழந்தைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும்உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்கோவில் திருப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும்.
    தொழில் மற்றும் வியாபாரம் ;- தொழிலில் புதிய யுக்திகளால்  இலாபம் அதிகரிக்கும்தொழிற்சாலையில் புதிய விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைப் படுத்தலாம்தீயணைக்கும் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லதுஅரசுப் பணியாளர்களுக்குத் தங்கள் உயர் அதிகாரிகளின் நெருக்கத்தால் பதவி உயர்வும்இடமாற்றமும் சுலபமாகக் கிடைக்கும்.
    பெண்கள் ;- பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் சகாயத்தால் துறை ரீதியாகத் தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர்தகுந்த முடிவுகள் எடுத்தால் மட்டுமே புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியும்.  கணவனைப் புரிந்துகொண்டு அவன் போக்கில் விட்டுப்பிடிப்பது நல்லது.
    மாணவர்கள் ;- உயர்கல்வி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும்இதுவே   நல்ல மதிப்பெண் பெற சரியான வழியாகும்முகநூல் மற்றும் ட்வீட்டர் போன்ற  பொழுதுபோக்குகள் மற்றும் தேவையற்ற இன்பப் பயணங்கள் சிலரின் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றி விடக் கூடும்எனவேவெற்றிகளைக் குவிக்க விழிப்புடன் செயல்பட்டால் இலக்குகளை எளிதில் எட்டலாம்
                                                                                                                                         சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்.  இக் காலத்தில் சிக்கல்களும்சிரமங்களும் ஏற்படலாம்தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 26 – 09 - 2014 காலை   9  - 13 மணிமுதல் 28 – 09 - 2014 மாலை 04 – 38  மணி வரை ஆகும்இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்ட எண்கள்;- 1, 4, 3 மற்றும் 9 ஆகும்அனுகூலமற்ற எண் 8 ஆகும்.  அனுகூலமான எண்கள் 2, 5, 6 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், சிகப்புரோஸ் மற்றும் ஆரஞ்ச்  ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் நீலம் ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகக்கல்லை தங்கத்தில்  பதித்து மோதிரத்தை வியாழக்கிழமையன்றுபூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாத – இராசி – கும்பம்மாதம் - பங்குனிகிழமை – வெள்ளிநட்சத்திரம் -- ஆயில்யம்திதிகள் – பஞ்சமிதசமிஅம்மாவசை மற்றும் பௌர்ணமி  ஆகும்யோகம் --  வஜ்ரம்கரணம் -- சதுஷ்பாதம் ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவரதுன்பங்கள் தூர விலகும்சூரிய நமஸ்காரம் செய்தல், மஞ்சள் வண்ண ஆடையணியவும் மஞ்சள் மலர்களால் அர்ச்சித்தலும்புஷ்பராகக்கல் அணியவும் கொண்டைக் கடலைதானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.