Showing posts with label ஜெயமுண்டு பயமில்லை. Show all posts
Showing posts with label ஜெயமுண்டு பயமில்லை. Show all posts

Tuesday, October 9, 2012

ஜெயமுண்டு பயமில்லை !





ஜெயமுண்டு பயமில்லை !



ஸ்ரீராம ஜெயராம எனப்பாடு மனமே  !                                   ஜெயமுண்டு பயமில்லை நம் வாழ்வில் தினமே ,

                                    ( ஸ்ரீராம )

அருளுண்டு,அன்புண்டு, அவன் நாமங் கூறும் ,
அடியார்க்குப் பொருளுண்டு, புகழ்வந்து சேரும் ;
இருளில்லை, யொளியுண்டு யினி வாழ்வு மாறும் ,
முடியாத செயல்யாவும் முடிந் தின்பஞ் சேரும் ;

                                    ( ஸ்ரீராம )

துயரில்லை,துணையுண்டு,அவன் பேரைப் பாடி
துதிப்போர்க்கு, நலம்யாவும் நாடி வரும் தேடி ;
இணையில்லை யீடில்லை,யெம் தேவன் கருணை
நிதியாக நிற்கின்றான் நீ யென்று மவனை ;
  
                                    ( ஸ்ரீராம )