Showing posts with label தமிழ் வாசல் மாத இதழில் வெளியான மே -- 2015 மாத ராசிபலன்;;;;-. Show all posts
Showing posts with label தமிழ் வாசல் மாத இதழில் வெளியான மே -- 2015 மாத ராசிபலன்;;;;-. Show all posts

Sunday, May 3, 2015

மேஷம் -முதல் கன்னிவரை. மே மாத பலன்


ஓம் ஶ்ரீ ராகவேந்த்ராய நமக


தமிழ் வாசல் மாத இதழில் வெளியான

மே -- 2015 மாத ராசிபலன்;;;;-


கேது
சூரி,செவ்
லக்//
புத
சுக்




1/05/2015
சித்திரை – 18. வெள்ளி



குரு ()





சனி ()

சந்
ராகு
                      








    
கிரக மாற்றங்கள்
ரிஷபச் செவ்வாய் – 02 – 05 – 2015 
மிதுன சுக்கிரன் –  03 – 05 – 2015. புதன் (.)
ரிஷப சூரியன் – 15 – 05 – 2015.
மேஷ  புதன் = 24 – 05 – 2015. (.நி) – குரு (.நி)
கடக சுக்கிரன் = 31 – 05 - 2015
மேஷம்
( அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1 பாதம்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய - சு, சே, சொ, , லெ, லு, லே, லோ, )
மேஷ இராசி வாசகர்களே!
       உங்கள் இராசிநாதன் செவ்வாய் அனுகூலமற்ற நிலையில் ஆரோக்கியக் குறைவையும், மனமகிழ்ச்சி இன்மையையும் தருகிறார். உங்களின், எவருக்கும் அடங்காத தன்மையால் வீண்பழியும், கவலையும் மிகும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். சுக்கிரனின் அனுகூல நிலையால் செல்வச் செழிப்பும், முன்னேற்றங்களும், சுகானுபவங்களும் மற்றும் கௌரவமும் கூடும். வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். அட்டமச்  சனி அலைச்சல்களை தேவையற்ற பயணங்களாகத் தருவார். இராகுவின் அனுகூல நிலையால் பலவழிகளிலும் பணம் வந்து குவியும். புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருமானப் பெருக்கமும் ஏற்படும். சிலருக்குத் தெலுங்கு, உருது அல்லது வேற்று மொழிப் பெண்ணின் உறவு ஏற்படலாம். விரயத்தில் அமர்ந்த கேது, ஞானமார்க்கத்தில் ஈடுபாட்டையும், தர்ம சிந்தனைகளையும், வெளிநாட்டு வாசத்தையும் அளிப்பார். ஆன்மிகப் பாதையில் முன்னேற்றத்தைத் தருவார்
       குடும்பம்  ;- மணவாழ்க்கை மகிழ்ச்சி தரும். குடும்பத்திற்குத் தேவையான வருமானங்கள் பிறர் மூலமாக வந்து சேரும். பெரியார்களின் உதவியும் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
       தொழில்  ;- கலைத்துறையினருக்குப் பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் முதலீடுகள் மூலமாக  இலாபம் அதிகரிக்கும்புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவர்
       பெண்கள் ;- பணிபுரியும் பெண்கள் தங்கள் வேலையில் முன்னேற முழு முயற்சியுடன் ஈடுபடுவர்.  உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணிகளில் இது நாள் வரை இருந்து வந்த கெடுபிடிகள் குறையும்.   
       மாணவர்கள் ;- உயர்கல்வி மாணவர்கள் படிப்பில் காட்டும் முழுக் கவனம் முன்னேற்றத்துக்கான நல்ல வழியாக அமையும். மேல் படிப்புக்கான நேர்காணலில் தங்கள் தனித்திறமைகளைக் காட்டி மாணவர்கள் அக்கறையுடன் செயல்பட்டால் இடம் கிடைக்கும்.  
       தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 05 – 05 – 2015 அதிகாலை 05 – 45 மணி முதல், 07 – 05 – 2015 பகல் 12 – 42 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
    ( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, , , , , வி, வு, வே, வோ )
இரிஷப இராசி வாசகர்களே!
       தங்கள் இராசிநாதன் தங்களை நற்செயல்களில் ஈடுபடுத்தி, மனமகிழ்ச்சியையும், அனைத்து வசதிகளையும் தந்து, நல்ல அறிவையும், நல்ல நண்பர்களையும் அளிப்பான். தனவிருத்தியும் குடும்ப நிம்மதியும் உண்டாகும். அரசு ஆதரவும், அரசாங்க விருதுகளும் கிடைக்கும். அறிவுத் திறனும் கூடும். விரயபாவ  சூரியன், தேவையற்ற வீண்செலவுகளை ஏற்படுத்துவான். தந்தையின் ஆரோக்கியம்  கவனிக்கத் தக்கதாகும். உஷ்ண சம்பந்தமான நோய்கள் வரலாம்குருவால் கௌரவ பங்கம் ஏற்படலாம். சனி குறிக்கோளற்ற பயணங்களையும், தேவையற்ற அலைச்சல்களையும் தருவான். குருவின் பார்வை சிறிது கஷ்டங்களைக் குறைக்கும். கேதுவின் அனுகூல நிலையால், மிக முக்கியமாக ஈடுபடும் செயல்பாடுகளில் வெற்றிகரமான நல்ல முடிவுகள் ஏற்படும்.  சந்தோஷம், நோயினின்று விடுதலை மற்றும் அதிகாரத்திலுள்ள நல்ல மனிதர்களின் தொடர்பு ஆகியவை ஏற்படும்.  புகழ், கௌரவம் மற்றும் உயர்பதவிகள் ஆகியவை கிடைக்கும். தன் நிலையை உணரவைத்து, தியாகம் மற்றும் தியானம் ஆகிய குணங்களை அளித்து, எதிர்கால முன்னேற்றத்திற்கு ஏணியாவான் கேது.
       குடும்பம்  ; குடும்பத்தில் பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  புதிய நுணுக்கங்களைக் கைக்கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்.   
       தொழில் ; வணிக சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும்மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் விவகாரங்களில் அனுகூல நிலை ஏற்படும்.   
       பெண்கள் ;-  வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வர். பணிபுரியும் பெண்கள்  கடமை உணர்வுடன் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.   
       மாணவர்கள்;- சில மாணவ, மாணவிகளுக்குப் பள்ளியில் படிக்கும் நல்ல நண்பர்களின் நட்பால் முன்னேற்றம் நிலவும். கல்வி அறிவு மேம்படும்சிலர்  எதிர்கால வாழ்வுக்காகத் திட்டமிட்டு பாடப் பிரிவுகளை எடுப்பது நல்லது.     
      தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 07 – 05 – 2015 பகல் 12 – 43 மணி முதல், 09 – 05 – 2015 மாலை 5 – 28 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.


மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியகா, கி, கு, , , , கே, கோ, )
மிதுன இராசி வாசகர்களே!
       விரய பாவத்தில் அனுகூலமற்ற நிலையில் அமர்ந்திருக்கும் இராசிநாதன் புதனால் எந்தவொரு காரியத்தைக் கையில் எடுத்தாலும் தடைகள் ஏற்படும். சுலபமான செயல்களையும் கூட கடின உழைப்புக்குப் பிறகே நிறைவேற்றிக் கொள்ள முடியும். பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் சிரமங்கள் ஓரளவுக்குக் குறையும். எவரை நம்பியும் ஜாமீன் கையெழுத்துப் போட்டுவிடாதீர்கள். இலக்னத்தில் இருக்கும் சுக்கிரனால் பொன் பொருள் சேரும். தாம்பத்திய இன்ப சுகம் நிறைவாகக் கிடைக்கும். கல்வியில் சிறப்பு, கணிதத் திறன் ஆகியவை மேம்படும். அனைத்து சுகங்களுடன் கூடிய இராஜயோகம் ஏற்படும். தனபாவ குருவால் அழகிய மனைவி வாய்ப்பாள். வெற்றிகளால் மகிழ்ச்சியும், புத்திர பாக்கியம்மற்றும் எல்லாவித முன்னேற்றங்களும் ஏற்படும். பெரியோர்களால் அனுகூலமும், வீட்டில் மகிழ்ச்சிக் கொண்டாட்ங்களுக்கும், வாகன யோகத்திற்கும் காரணமாகிறான், இலாப பாவ சூரியன். சனியின் அனுகூலமான பாவ அமர்வு பதவி உயர்வு, புதுவீடு கட்டுதல் போன்ற நன்மைகள் ஏற்படும்
       குடும்பம் ; அதிகமான உழைப்பின் பேரில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இறைபக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும்.
       தொழில் ; புதிய முதலீடுகளால் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு மற்றும் வங்கி உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திற்காக   புதிய பொருட்களைக் கொள்முதல் செய்வீர்கள்.                                                                                                                                                                                                                                                                                                                                
      பெண்கள்; கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நல்லுறவு அதிகரிக்கும். பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்
       மாணவர்கள்;  கல்லூரியில் சேர்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவீர்கள். அதன் காரணமாக புதிய உற்சாகம் பிறக்கும். நுழைவுத் தேர்வுகளில் சிறப்பாகச் செய்வீர்கள்.
       தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 09 – 05 – 2015 மாலை 5 – 29 மணி முதல், 11 – 05 – 2015 இரவு 08 – 37 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலனறியஹி, ஹூ, ஹே, ஹோ, , டி, டு, டே, டோ )
கடக இராசி வாசகர்களே!
       இம் மாதம் நல்ஆரோக்கியம், சந்தோஷம், தனலாபம், அனைத்திலும் வெற்றி, பலம், உயர்பதவிகள், அதிகாரங்கள், மதிப்பு மரியாதை மற்றும் குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சி என நற்பலன்கள் ஏற்படும். சிலருக்குக் கடினமான பயணங்களும், அதிக செலவினங்களும் மற்றும் சில காலம் பிரிவும் ஏற்படலாம். சிலருக்கு சொத்துக்கள் சேரும். புதிய வாகனங்கள் மற்றும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை ஏற்படும். தாயின் மூலமாக ஆதாயங்கள் கிட்டும். புதிய செயல்கள் எதுவும் தொடங்காதிருப்பது நல்லது. இருப்பதைவிட்டுப் பறப்பதைப் பிடிக்காமல், இருப்பதைக் காப்பதே பயனளிக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு இருக்காது. இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பெண்களிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். சிலருக்கு மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
       குடும்பம் ; குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம். சாமர்த்திய சாலியாகவும், சுயகாரியப் புலியாகவும் திகழ்வர். உறவுகள் கை கொடுக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும்.
       தொழில் ; தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்  கிடைப்பது தாமதப்படும். விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்
    பெண்கள்; பணிபுரியும் பெண்கள் வாகனங்களில் செல்கையில் கவனமுடன் செல்லுதல் அவசியம். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்வதில் தாமதங்கள் ஏறப்படலாம்.   
     மாணவர்கள்; மாணவர்களுக்குக் கல்வியில் உயர்வும்வெற்றிகளும் குவியும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்க்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித் தருவர்.    
      தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 11 – 05 – 2015 இரவு 08 – 38 மணிமுதல் 13 – 05 – 2015 இரவு 11 – 00  மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, மி, மு, மெ, மோ, டி, டு, டே, டோ)
சிம்மராசி வாசகர்களே !
           தங்கள் இராசிநாதன் அனுகூலமற்ற நிலையில் இருப்பதால் சுமாரான பலன்களே எதிர்பார்க்கலாம். ஆயினும் பிற்பகுதியில் வெற்றிகளையும், புகழையும், தனலாபத்தையும், பேச்சால் ஆதாயத்தையும், அனைவராலும் விரும்பப்படும் நிலையையும் தருவார். கோவில், குளம் போன்ற பல திருப்பணிகள் செய்வீர்கள். செவ்வாய் தடைகளைத் தந்தாலும்புதன் உயர்பதவிகளையும், வாக்கு வன்மையால் புகழையும் தருவார். கல்யாணம் போன்ற சுபமங்கள காரியங்கள் சிறப்பாக நடக்கும். சிலருக்கு மரியாதைக் குறைவையும், அவமானங்களையும் அளிப்பார் குரு. வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். இலாப பாவ சுக்கிரனால் திருமணமும், குழந்தை பாக்கியமும், புதிய பொறுப்புக்களும், நவீன பொருட்களின் சேர்க்கையும், முன்னேற்றமும் ஏற்படும். கல்வியில் முன்னேற்றமும், வீடு, மனை ஆகியவை கிடைக்கும். போதிய பணவரவால், பொருளாதார நிலை சீரடையும். எல்லாமே நல்லதாய் நடந்தால் இனிக்காதே வாழ்க்கை. எனவே, சனி தன் பங்குக்குக் சில கஷ்டங்களைத் தருவார்.
       குடும்பம் ; உறவினர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். இலாபகரமான சேமிப்புக்களைத் துவக்கும் எண்ணம் மேலோங்கும். குழந்தைகளுக்கான மருந்துவச் செலவு கூடும்.
       தொழில் ; தொழிலில் இருந்த வந்த மந்த நிலைகள் மாறி வேகம் பிறக்கும். சந்தை நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப வியாபார நுணுக்கங்களை மாற்றி அமைத்து அதன் மூலமாக அதிக லாபம் அடையலாம்.      
       பெண்கள்அரசுப் பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவால் ஒளிமயமான எதிர்காலம் அமையும்பிள்ளைகள் தங்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பதால் மனஅமைதி குறையும்.
       மாணவர்கள் ; தங்கள் பள்ளிக் கல்வியினை முடித்துக் கொண்டு கல்லூரிகளுக்குப் படையெடுத்து இடத்துக்காக போராட நேரும். விரும்பிய பிரிவு
கிடைக்கவில்லை என்றால் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்து முன்னேறுங்கள்.
       தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 13 – 05 – 2015 இரவு 11 – 01 மணிமுதல் 15 – 05 - 2015 இரவு 1 – 33  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியடோ, , பி, பூ, , , , பே, போ )
கன்னிராசி வாசகர்களே!
       தங்கள் இராசியதிபதி புதனின் அனுகூலமற்ற நிலையால் நிர்ணயத்திறன் குறைவதால் எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் சாதுர்யம், சாமர்த்தியம் குறையும். உழைப்பு அதிகமாகும். தங்கள் உதவிகளைப் பெற்றவர்கள் மறப்பர். முயற்சிகள் ஈடேறாது. குரு, சனியின் அனுகூலமான நிலைகள் உயர்வைத்தரும். செல்வம் சேரும். கிராம அதிகாரம் / அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பலவழிகளிலும் பணம் குவியும். மனை, வீடு ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். வங்கி இருப்பு கூடும். நல்ல சந்ததி உருவாகும். அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டும். உத்தியோகம், பதவி உயர்வு கிடைக்கும். அஷ்டலட்சுமி கடாக்ஷம் ஏற்படும். வாகன சுகம் அதிகரிக்கும். உடன்பிறப்புக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வெளிநாடு செல்பவர்களுக்கு அங்கே  பல தடங்கல்களைத் தருவான், சுக்கிரன். வெற்றிகளையும் தருவான். செவ்வாய் சிலருக்குப் பொருளாதார நிலையை உயர்த்தி, செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவால் ஆதாயம் பெறுவர்.
       குடும்பம் ; குடும்பத்தைப் பொறுத்தவரை ஆரோக்கியமும், அனைத்துவிதமான வசதி வாய்ப்புக்களும் பெருகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும்.
உறவுகள் தரும் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும்.
       தொழில்விவசாயிகள் விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு இலாபம் ஈட்டமுனைவர். பஞ்சு, கம்பளி, கேப்பை, துணிவகைகள், எண்ணை வகைகள், அவரை, பார்லி ஆகிய பொருட்களின் விளைச்சல் ஆதாயம் தரும்.           
       பெண்கள்; குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். கணவனின் ஒத்துழைப்பால் வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடும். அரசின் உதவிகள் கைகொடுக்கும்.          
       மாணவர்கள்; மாணவர்களுக்கு அறிவுத் திறனும், கல்வியிற் தேர்ச்சியும் அதிகரிக்கும். சிலர் மாநில அளவில் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.
    தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம்  15 – 05 - 2015 இரவு 1 – 34   மணிமுதல் 18 – 05 - 2015 அதிகாலை 05 – 05  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.