Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். Show all posts
Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். Show all posts

Thursday, March 30, 2017

ஹேவிளம்பி - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்



                                                                               


                                                                             
ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.

ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

2017 – 2018

        ஹேவிளம்பி வருடத்தில் 12 இலக்ன அன்பர்களுக்கும்  நல்லதே நடக்க  இனிய ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் பல.

        தமிழ்ப் புத்தாண்டான ஹேவிளம்பி  வருடம் 13/14 – 4 – 2017 – பங்குனி மாதம் 31 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 03 மணிக்கு மகர இலக்னம் துலா இராசி விசாக நட்சத்திரத்தில் பிறக்கிறது.


       பொதுவாக ஹேவிளம்பி  வருடத்தில் மழை அதிகம் இருக்காது. மழை மிதமாகவே இருக்கும். எனினும் பொருட்களின் விலை குறைவாகவே இருக்கும். மலர்கள் குறைவாகவே விளையும். போர்களால் நாடுகள்  அழிந்து மக்கள் பலர் மரணம் எய்துவர். நாட்டின், மக்களின் பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். மக்களுக்குத் தேவையான அனைத்து முக்கியப் பொருட்களும் ஓரளவே  கிடைக்கும். விலைவாசியும் ஏற்ற இறக்கமாக இருக்கும். நாட்டின் எல்லைப் பகுதியில் போர் மேகங்கள் சூழலாம். ஆனாலும், போர்களில் வெற்றி கிடைத்து, நியாயமான ஆட்சி ஏற்படும்.  மிகுந்த காற்று வீசி அழிவுகள் வரலாம். மக்களின் ஆரோக்கியம் குறைந்து நோய்நொடிகள் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகளுக்கு ஒருவித பயவுணர்வும், பெண்களுக்குத் தீமைகளும் ஏற்படும். வெப்ப சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கும். மக்களிடம் பக்தி மார்க்க ஈடுபாடு அதிகரிக்கும். நாட்டில் லஞ்ச லாவண்யம் பெருகும்கலைஞர்களுக்கு முன்னேற்றமான வருடம் ஆகும். திரைப்பட இணைத் தொழில்கள் ஏற்றமும், சிறப்பும் பெறும். துவர்பான பயிர்கள், புன்சைப் பயிர்களும்  செழிக்கும்.  கிழங்கு வகைகள், கருப்பு தானியங்கள் விளைச்சல் அதிகரிக்கும். நாட்டின் சில பகுதிகளில் வறட்சி நிலவும். தீ விபத்துக்கள் அதிகரிக்கும். அதிகரிக்கும். இறக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும். கல்வித்துறையில் முன்னேற்றங்களும், கல்வியாளர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும்.

        முக்கிய கிரக மாற்றங்கள்.
        இந்த ஆண்டு திருக் கணிதப் பஞ்சாங்கப்படி 17/18 - 08 - 2017  ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில்இராகு சிம்ம இராசியில் இருந்து கடகத்துக்கும், கேது   கும்ப இராசியில் இருந்து மகரத்துக்குமாக பெயர்ச்சி  ஆகிறார்கள்.
        இந்த ஆண்டு திருக்கணிதப் பஞ்சாங்கப் படி 12  /  09  / 2017 –   ஆவணி மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை சுமார் 06 – 50 மணி அளவில் குரு பகவான் கன்னி இராசியில் இருந்து துலா இராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.
        இதற்கிடையில் சனிபகவான்  21 /  06  /  2017 – அன்று தனுர் இராசியில் இருந்து வக்கிரம் ஆகி விருச்சிக இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
        பின்னர் 26  /  10  /  2017 - அன்று  நேர்கதியில் மீண்டும் தனுசுவுக்கு, சனி பெயர்ச்சி ஆகிறார்.



கிரக சஞ்சார நிலைகள்.
சுக்(வ)
சூரி,புத(வ)
செவ்



சூரி
சனி(வ)
இராகு,சந்
கேது
மா
13/14-04-2017
பங்குனி 31
வியாழன்
இரவு மணி.02-03
துலா-சந்



நவாம்சம்
லக்//.சு(வ)
புத(வ)
லக்//
இராகு
செவ்
குரு(வ)
சனி(வ)

சந்
குரு(வ)
கேது
மா



மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)

       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

       சூரியன்ஆனி மாதத்தில் தங்களுக்கு இதுவரை தடைக் கல்லாக விழங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும்  உருண்டோடிடும் பணம் காசு எனும் உருவமான பொருள் சேரும். ஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உலகமெங்கும் உங்கள்  புகழ் ஒளி பரவும். புரட்டாசி மாதத்தில் வியாபாரத்திற்கான வங்கிக் கடன்கள், அரசு தொழில் துறை மூலமாக எளிதாகக் கிடைக்கும். கடன்களும் கட்டுக்குள் இருக்கும். அரசுத் துறையால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உடனடியாக அரசில் புதிய வேலை கிடைக்கும். தை மாதத்தில் தந்தையுடனான உறவில் விரிசல்கள் விழலாம். மாசி மாதத்தில் தொழிலில் இதுவரை எவராலும் அடைய முடியாத இலாபங்களை சம்பாதித்து, புதிய புதிய சாதனைகளைப் படைத்து அரசின் கௌரவம் பெறுவீர்கள்.

       செவ்வாய்ஆனி மாதத்தில் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டும்.  புதிய ஆடைகள் மற்றும் ஆபரண சேர்க்கையும் ஏற்படும். உடன்பிறப்புக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். வீடு, மனை போன்ற புதிய சொத்துக்கள் வாங்கலாம். அதற்குப் பின் வரும் காலங்களில் வாழ்க்கையில் புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும்.

      புதன்புரட்டாசி  மாதத்தில் பலவகையிலும் தனவரவுகள் அதிகரிக்கும். மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கார்த்திகை, மாசி, பங்குனி மாதங்களில் வீட்டில் சுப காரியங்கள் நடந்து மகிழ்ச்சியும், செலவும் அதிகரிக்கும். மக்கள் மத்தியில் கௌரவம், புகழ் கூடும். தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவைகளும் ஏற்படும்.

      சுக்கிரன்புரட்டாசி, ஐப்பசி, மாசி ஆகிய மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் தாய், காதலி, மனைவி, சகோதரி போன்ற நெருங்கிய பெண் உறவுகளால் நன்மைகள் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர சாதனங்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். சுற்றுலா, புனித யாத்திரைகள் போன்ற வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமையும்.   நெருங்கிய உறவினர் வகையில் சுபகாரியங்கள் நடக்கும்.

      குருஆவணி 27 இல் 7 ஆம் இடத்திற்கு மாறும் குருவால் வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். உயர்ரக வாகன வசதிகள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்யலாம். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும்.

      சனிஹேவிளம்பி வருடத்தில் தங்கள் இராசிக்கு 3, 6 மற்றும் 11 ஆம் இடங்களிலிருந்து சனி பகவான் நன்மை அளிக்கவில்லை என்றாலும், பாக்கிய பாவ சனியாக உலாவருவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இராஜயோகம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய பெண்கள் தொடர்பு உண்டாகும்.  ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பார். கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும். கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரை வணங்கி, சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட தீமைகள் குறையும். திருநள்ளாறு சென்று வரவும் தீமைகள் குறையும். மொத்தத்தில் இவ்வருடம் 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.


ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

    களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே

தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்  பார்ப்போம்.

       சூரியன் --  ஆடி மாதத்தில் பணம் காசு சேர்ந்து செல்வ நிலை உயரும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி தடையின்றி நிறைவேறும். மற்றவர்களின் விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது. புத்திர பாக்கியம் ஏற்படும். ஐப்பசி மாதத்தில் ஆரோக்கியம் பெருகும். நோயற்ற வாழ்வு மலரும். ஞானம் மேலிடும். மாசி மாதத்தில் தொழிலில் புதிய விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும், அரசுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுகள் ஏற்படும். புதிய உயர்ரக வாகன சுகங்கள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் அரசியல் பிரபலங்களின் ஆதரவுகிட்டும். பொது ஜன சேவைகளால்  மதிப்பு மரியாதை கூடும். புகழும் ஓங்கும்.

       செவ்வாய் ; அரசுத் துறையால் இலாபம் ஏற்படும். வீட்டில் பயிர், மனை, பால் மாடுகள் ஆகியவற்றின் மூலமாக ஆதாயம் பெருகும். நவீன வீட்டு உபயோக சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்எதாவது ஒரு வகையில் ஆண்டு முழுவதும்  பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். நவநாகரிக ஆடை அணிகலன்கள் சேரும்.
   
       புதன் --  ஐப்பசி, மார்கழி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் தன தான்ய விருத்தியும், உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றில் அதிகம் முன்னேற்றம் ஏற்படும். மற்ற மாதங்கள் சுமாரானதாகவே அமையும். அதற்குப் பிறகு  நிம்மதியும் சுகமும் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி அடைவர். பயணங்களால் இலாபம் ஏற்படும். வங்கி, கணக்கு போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்.

      சுக்கிரன்ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களைத் தவிர மற்ற மாதங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஆண்டு முழுவதும்  பொன்பொருள் சேரும். ஆடை, அலங்காரப் பொருட்கள் மற்றும் சுகந்த பரிமள வாசனாதி திரவியங்கள் ஆகிய எல்லாமே ஒரு சேரக் கிடைக்கும். கோவில்களில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு  இறையருளால் வசதி வாய்ப்புக்கள் பெருகும்.

       குருஆவணி 27 க்கு முன் புத்திர பாவத்திலும், பின்னர் ருண பாவத்திலும்  சஞ்சரிக்கும் குருமுற்பகுதி வரையிலான காலத்தில் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழவைப்பார். செல்வந்தர்களின் நட்பு ஏற்படும். கீர்த்தி பெருகும். அரசாங்க உத்தியோகம் ஏற்படும். கௌரவமும், அந்தஸ்தும் உயரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். பிற்பகுதியில் ஆரோக்கியக் குறைவைத் தந்தாலும் அதற்குப் பிறகு தொழில் துறையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்களைத் தரலாம். எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடாதிருப்பது நல்லது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். வேலை இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவி கிடைக்கும்.
    சனி --  அஷ்டமச் சனி காலத்தில்  அந்தஸ்து, பதவி, கௌரவம் ஆகியவைக்கு பங்கம் ஏற்படலாம். வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கம் மற்றும் இன்ப துன்பம் என மாறித்தானே வரும். சிலருக்கு வெளி நாட்டு வாசமும், குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்படும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. அட்டமச் சனியாக இருப்பதால் கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரை வணங்கி, சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட இன்னல்கள் குறையும். திருநள்ளாறு சென்று வரவும் தீமைகள் குறையும். மொத்தத்தில் இவ்வருடம் 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.



மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

    கல்விக் காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

    சூரியன்ஆவணி மாதத்தில் தானதருமங்கள் செய்யும் அளவுக்குச் செல்வநிலை உயரும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என பாடும் நிலைக்கு உயர்வீர்கள். எனவே, எந்த முயற்சியிலும் துணிந்து இறங்கி முன்னேற்றம் காணலாம். கார்த்திகை மாதத்தில் அரசுத் துறையால் இலாபம் அல்லது அரசில் வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படலாம். பங்குனி மாதத்தில் பணம் காசு சேரும். எவரும் சாதிக்க முடியாத சாதனைகளைப் புரிவார். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சித்திரை மாதத்தில் சிறந்த வாகனயோகம் ஏற்படும்வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.

      செவ்வாய்ஆவணி, கார்த்திகை, மாதங்களில் சுப பலன்களை எதிர்பார்க்கலாம்சகோதரரால் நன்மைகள் ஏற்படும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். சிலருக்கு  வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் சிறு விபத்துக்கள் ஏற்படலாம். சின்ன விஷயங்களுக்காக அதிகக் கோபம் கொண்டால்  டென்ஷனால் ஆரோக்கியக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

      புதன்கார்த்திகை, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் சுப பலன்களைத் தருகிறார். இம்மாதங்களில் பலவகையான யோகங்கள் ஏற்பட்டு ஜாதகர் அரசனுக்கு நிகராக வாழ்வார். சேவை செய்ய பணியாட்கள், பணிப்பெண்கள் அமைவர். சந்ததி விருத்தி ஏற்படும். பூமி, மனை, வீடுகள் ஆகியவற்றால் இலாபம் ஏற்படும். பங்குச் சந்தையில் அதிக இலாபங்களை எதிர் பார்க்கலாம்.  அரசு வேலை கிடைக்கலாம்.  

       சுக்கிரன் --  மார்கழி, தை, பங்குனி ஆகிய மூன்று மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் சுப பலன்களைக் கொடுக்க வல்லவர் சுக்கிரன்.   ஆரம்பத்தில் உயர்ந்த செல்வந்தர்களின் நட்புக் கிடைக்கும். முகத்தில் அறிவுச் சுடரொளி வீசும்தனக்கென அழகிய தனிவீடு அமையும். நல்ல குழந்தை பிறக்கும். மனைவிக்கு வயதானாலும் எழில் நிறைந்தவளாய் இருப்பாள். நல்ல குரு அமைவார். அவரால் வாழ்வில் ஒளியும் முன்னேற்றமும் பெருகும்.

       குருஆவணி 27 இல் துலாத்துக்கு  மாறும் தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கெடுத்தாலும் புத்திர பாவமேறி, வனவாசமாய் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார்இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

       சனி --  இந்த வருடம் கண்டச் சனியாகி குறிக் கோளற்ற பயணங்களைத் தரும். சிலருக்கு வெளிநாட்டு வாசம் ஏற்படும். ஆடியில் ருண பாவம் அமர்ந்து சுப பலனைத் தருகிறார். புதுவீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாக நடக்கும்பதவி உயர்வு, வேலையற்றவர்களுக்கு வேலை கிடைத்தல், சுவை மிக்க இராஜ உணவு கிடைத்தல். என இராஜபோக வாழ்க்கை அமையும். இதுநாள் வரை இருந்துவந்த இக்கட்டான நிலைகள் இருந்த இடம் தெரியாமல் போய் பொன்னும் பொருளும் சேரும். மார்கழி முதல் ஆண்டு முடிவு வரை அசுப பலன்களைத் தருவார். மொத்தத்தில் இவ்வருடம் 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.