Showing posts with label மன்மத வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - ஜோதிடவாசல் வெளியானது.. Show all posts
Showing posts with label மன்மத வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - ஜோதிடவாசல் வெளியானது.. Show all posts

Sunday, April 5, 2015

மகரம் முதல் - மீனம் வரை





மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
    கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
       சூரியன்ஆனி மாதத்தில் நல்ஆரோக்கியம், சந்தோஷம், மனஅமைதி, இலாபம் ஆகியவை ஏற்படும். ஐப்பசி மாதத்தில் எதிர்பாராத வெற்றிகள் கிடைத்து உள்ளம் மகிழும்.  செல்வநிலை உயரும். நோயிலிருந்து விடுதலை பெற்று சுகம் பெறுவீர்கள். கார்த்திகை மாதத்தில் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகள் எதிர்பார்ப்புக்கு மேலான வெற்றிகளைத் தரும்.. பொதுச்சேவை செய்பவர்களுக்குச் சுற்று வட்டாரத்தில் புகழ் பரவும். பங்குனி மாதத்தில் அரசுப் பணிகளில் புதிய பதவி உயர்வு மற்றும் அந்தஸ்து கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
       செவ்வாய்வருட ஆரம்பத்தில் பொருளாதார இலாபம் ஏற்படும். தனியார், அரசுப் பணியாளர்களுக்குத் தங்கள் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். பூமிலாபம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் நவநாகரீக, நவீன சுக சாதனங்களோடு வீடு நிறைந்திருக்கும். பின்னர் உணர்ச்சி மிகுதல், பெண்களால் தொல்லை, அதிக வெப்பத்தால் வரும் வியாதிகள் ஆகியவை ஏற்பட்டு சிறிது இன்னல் தரும். வழக்குகளில் வெற்றி, காரிய வெற்றி, கட்டுப்பாடற்ற சுதந்திர சுகமும் உண்டாகும்.
       புதன்வருட ஆரம்பத்தில் நிதானமாகப் பொழியும் மழை போலப் பொருளாதார நிலை சீராக இருக்கும். மேலாளர் போன்ற உயர் அதிகாரிகளிடம், உங்கள் சிறந்த உழைப்புக்கான பாராட்டு மழையில் நனைவீர்கள். அன்புப் பெற்றோர்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். சிலருக்கு அவப்பெயர் உண்டாகலாம். பின் வரும் காலத்தில் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும், கௌரவம் ஓங்கும். அழகிய மனைவி அமைவாள். பலவகை யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும். கௌரவப் பட்டங்கள் தேடிவரும்.
       சுக்கிரன்வருட ஆரம்பத்தில் பொதுச் சேவையால் மதிப்பும், மரியாதையும் கூடி ஏழைப் பங்காளன் என்று பெயர் எடுப்பீர்கள். செல்வம் கொழிக்கும், தானியவகைகள் குவியும். அரசு ஆதரவு கிடைக்கும். அரசாங்க விருதுகள் கிடைக்கும். கண்கள் புத்தொளி பெறும், முகப் பொலிவும், கவர்ச்சியும் உண்டாகும். பின்னர் வரும் காலத்தில் மனம் நிலைகொள்ளாமல் தவிக்க நேரும். கண்டபடி வேண்டாத  அலைச்சல்கள் ஏற்படும். வெளிநாட்டுப் பயணவாய்ப்புகளால் ஆதாயம் ஏற்படும். இந்திரன், ருத்திரன் போன்று உயர்ந்த வாழ்க்கைத் தரம் அமையும்.
       குருஆனி 20 க்கு அட்டமத்தில் அமரும்  குரு அதற்கு முன் உள்ள நாட்களில் இராசியைப் பார்ப்பதால் தெய்வகாரிய ஈடுபாடுகளால் எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமைந்திருக்கும். பின்னர் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். கையிலுள்ள பணமெல்லாம் விரயத்தால் கரையும். உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும்.
      சனிஇலாபத்தில் அமரும் சனியின் பார்வை 1, 5, 8 ஆம் இடங்களில் விழுவதால் இதுநாள் வரை குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள், குறைபாடுகள், வேண்டாத வெறுப்புகள், தடைகள் அனைத்தும் விலகி முன்னேற்றம் வரும் காரம் ஆகும். இனி கலகலப்புக்குக் குறைவிருக்காது. சாமர்த்தியமும், சாதுர்யமும் கூடிய செயல்பாடுகளால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர்கொள்வீர்கள்.   பொருளாதாரத்தில் ஒரு புதிய எழுச்சியும், நல்ல வளர்ச்சியும் ஏற்படுவதால் உள்ளம் மகிழ்வீர்கள்.  புதிதாக சொத்துக்கள் சேரும். தனலாபங்கள் அதிகரிக்கும். புகழ், கௌரவம் உயருதல், பதவி உயர்வு, அனைவரும் சாதகமாக நடப்பர். அரசாங்கத்திதமிருந்து பரிசுகள் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
       கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
       சூரியன்சித்திரை மாதத்தில் காரியங்கள் யாவும் வெற்றியின் திக்கை நோக்கியே செல்லுவதால், அச்சமின்றி அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடலாம். வங்கிக் கடன் வாங்கி வீடு, நிலம் வாங்கும் பாக்கியம் ஏற்படும். படிப்பில் அதிக அக்கறை தேவை. ஆடி மாதத்தில் வெகுதூரப்பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் விருத்தி உண்டு. கார்த்திகை மாதத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவைமார்கழி மாதத்தில் தெய்வ வழிபாடுகள் மனநிம்மதி தரும்.
       செவ்வாய்வருட ஆரம்பத்தில் தொழில் முன்னேற்றங்களால் பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும். வசதிகள் அனைத்தும் நிரம்பிய அழகிய வீடு அமையும். புத்திர பாக்கியம் ஏற்பட்டு மனமகிழ்ச்சியும் ஏற்படும்.  தீயவர்கள் தரும் தொல்லைகள் ஒரு முடிவுக்கு வரும். பின்னர் வரும் காலத்தில் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தமான வேலைகள் அனைத்தும் தாமதமின்றி நிறைவேறும். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்பட்டு, ஆனந்தம் பொங்கும். அந்தஸ்து புகழ் ஓங்கும்.
       புதன்மேற்படிப்புப் படிக்கும் மாணவர்கள் மெத்தனமாக இராமல், கவனமாக படித்தால் நன்றாக மிளிரலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்கான நல்ல தருணங்கள் அமையும். உறவினர், நண்பர்களின் வரவு உற்சாகம் தரும். கலைஞர்களின் கௌரவமும், புகழும் கூடும். உயர் அதிகாரிகளோடு ஒத்துப் போகமுடியாத நிலையால், வரவேண்டிய பதவி உயர்வுகளில் இடைஞ்சல்கள் ஏற்படும். பின் வரும் காலத்தில் பேச்சாளர்களுக்கு தங்கள் வாக்குவன்மையால் வருமானம் பெருகும். அரசியல் வெற்றிகளால் ஏற்படும் மகிழ்ச்சி நிரந்தரமாய் இருக்காது. புத்தி கூர்மை, பலம் மற்றும் திறமை ஆகியவை அதிகரிக்கும்.
       சுக்கிரன்.— கடினமான காரியங்கள் என நினைத்த காரியங்களைக் கூட எளிதில் முடித்து உங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டிப் பாராட்டுப் பெறுவீர்கள். புதிய இடமாற்றங்கள் நன்மை அளிக்கும். சேமித்து வைத்த மற்றும் வங்கிக் கடன்கள் மூலமாகக் கிடைத்த பணத்தால் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.  மிடுக்காக நல்ல உடைகள் அணிந்து அனைவரையும் கவர்வீர்கள்.  வாஸனாதி திரவியங்கள் மீதான விருப்பம். மிகவும் அனுபவித்து உணரும் மனமகிழ்ச்சி, திருமணம், உயர் கல்வியில் தேர்ச்சி மற்றும் வெற்றி ஆகியவை ஏற்படும்
      குருஆனி 20 க்குப் பிறகு ஏழாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப் பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும்  புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும்.  நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும்.
      சனிகர்ம பாவத்தில் இந்த வருடம் நிலைத்திருக்கும் சனி தன் பார்வைகளை 4, 7, 12 ஆம் இடங்களின் மீது வீசுகிறார். இதன் காரணமாக செல்வநிலை சிக்கலின்றி சீராக உயரும். ஸ்திரச் சொத்துக்கள் சேரும். தொழிலில் புதிய விரிவாக்கத் திட்டங்கள் அதிக வருமானம் பெற கைகொடுக்கும். குடும்பத்தினரிடையே ஏற்படும் குழப்பங்கள் பெரியவர்களின் தலையீட்டால் நேர்படும். புதிய ஒப்பந்தங்களில் எதிர்பார்த்ததை விட இலாபம் கிடைக்கும். 3, 6 மற்றும் 11 ஆம் இடங்களில் மட்டுமே சாதகமான மற்றும் அனுகூலமான பலன்களைத் தரும் ரவிபுத்திரன் தங்களுக்கு அனுகூலமற்ற பலன்களையே தருவான். ஆயினும் குருவின் பார்வையின் மகிமையால் குறையும் இன்னல்கள். காரியத்தடைகள், மனமகிழ்ச்சியின்மை, வழக்குகள் மற்றும் அதற்கான தண்டனைகள் என சாதகமற்ற நிலையே நிலவுவதால் புனித யாத்திரையாகத் திருநள்ளாறு சென்று சனிபகவானை சேவித்து வந்தால், பகலவனைக் கண்ட பனிபோல் பறந்து மறைந்துவிடும் துன்பங்கள். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

மீனம்

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
       தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
       சூரியன்வைகாசி மாதத்தில்  உடல் ஆரோக்கியம் உன்னதமாக இருக்கும். தொழில் நிலைகள் மேம்படும். மனைவியால் குடும்ப சுகம் அதிகரிக்கும். எதிலும் துணிந்து இறங்கும் மனோதைரியம் கூடும். அரசு மற்றும் மீடியாக்கள் மூலமாக சிறந்த சேவைக்காக சிறப்பான கௌரவங்கள் வந்து  சேரும். ஆவணி மாதத்தில் பகைவர்களை வெல்வீர்கள். நோய்கள் குறைந்து ஆரோக்கியம் பெருகும். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மார்கழி மாதத்தில் வெற்றி மேல் வெற்றிகள் குவியும், எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே முடியும். நல்ல தோழமை கிடைக்கும். தை மாதத்தில் சூரியன் புதிய பதவி, கௌரவம் மற்றும் அதனால் ஏற்படும் சந்தோஷம் ஆகியவற்றைக் குறிக்கும்.
       செவ்வாய்புதிய முயற்சிகள் மற்றும் விஐ.பி களின் ஆதரவால், எதிர்காலத் திட்டம் எனும் காய் கனிந்து, சுவைதரும் காலம் கண்ணுக்குத் தெரியும். சரியற்ற உணவுப் பழக்க வழக்கங்களால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். சிலர் தேவையற்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர். பொருளாதார உயர்வு ஏற்படும். பூமி போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும். அதன் பிறகு தனதான்ய விருத்தி ஏற்படும். எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும். பகைவரால் ஏற்பட்டு வந்த அச்சங்கள் நீங்கும். தகராறுகள், வழக்குகள் எல்லாம் தங்களுக்குச் சாதகமாகவே முடியும்.
       புதன்நீண்ட தூரப் பயணங்களால்  நன்மை ஏற்படும். புத்தாடை, புது ஆபரணங்கள் சேர்க்கைஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும். அழகிய மக்கட்பேறு உருவாகும். அதன் பிறகு பிறருக்கு தான தருமம் செய்கிற புண்ணியம் கிடைக்கும். விவசாய உற்பத்திகள் பெருகி ஆதாயமும் பெருகும். சிலருக்குப் தகாத ஆசைகளும், கெட்ட சவகாசங்களும் ஏற்படும். எனவே, எச்சரிக்கை தேவை.
    சுக்கிரன்புத்தி கூர்மையினால் கல்வியில் சிறப்பான பலன்கள் ஏற்படும். தாயாரின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். பள்ளி நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் கலைத்திறன் வெளிப்பட்டு, அவர்களால் உங்களுக்குப் பெருமை சேரும்தொழிலில் உபரி வருமானத்திற்கான வழிகள் ஏற்படும். உங்கள் கடமை தவறாத உணர்வால், உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்உயர் வாகனாதிகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். சுப காரியச்செலவுகள் கூடும். அச் சுப காரியங்களால் வீட்டில் மகிழ்ச்சியும் கூடும். அதன் பின்னர்  வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் அனுகூலமாக அமையும். புண்ணிய யாத்திரைகள் மனஅமைதி தரும். புதிய இடமாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
    குருஆனி 20 ஆம் நாள் ருணபாவத்திற்கு இடம் பெயரும் குருவால் மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும். பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.  வியாபாரத்தில்  எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதற்குப் பின் வரும் காலங்களில் மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும்வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
    சனிபாக்கியத்தில் உள்ள சனிபகவான் ஓய்வற்ற நிலையைத் தருகிறார். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்குக் கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரலாம். கடின உழைப்புக்கு எப்போதும் கட்டாயம் பலன் உண்டு. தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கு ஒப்பற்ற உயர்வு உண்டு.  திருநள்ளாறு திருத்தலம் சென்று மந்தனை மனதார வேண்டி வந்தால் ஓரளவு துன்பங்கள் குறையும். ஆயினும் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க எடுத்ததுதானே இந்த மனிதப்பிறவி. புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பிரபலமாகி, முக்கிய நபர் என்று பெயர் எடுப்பார். உயரிய பதவிகள் தேடிவரும். மிகுந்த செல்வங்கள் சேரும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.