Friday, May 18, 2018

horoscope 10 and 11 - NADI


                        horoscope 10 and 11 - NADI
                                                  



ஜாதகம் – 10
         இந்த ஜாதகத்தில் (10) குரு நீசம். ஆனாலும் சனியுடனான கிரக பரிவர்த்தனை காரணமாக குருவின் பாதிப்பு பாதியாகக் குறைவதோடு, நீசமும் பங்கமாகிறது. சூரியன் நீசம் பெற்றுள்ளான். சூரியனுக்கு சுக்கிரனுடனான கிரக பரிவர்த்தனை சூரியனின் பாதிப்பை குறைப்பதோடு, நீசமும் பங்கமாகிறது. இதே போன்று சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை நீச சந்திரன், நீச செவ்வாய் ஆகிய இருவரின் பாதிப்பைக் குறைத்து, நீசமும் பங்கமாகிறது. இது ஒரு சிறப்பு நிலை. இங்கு இவ்விரு கிரகங்களுமே தங்கள் சுயவீடுகளிலேயே இருப்பதாகக் கொள்ளலாம்.






உ. ஜா. 10
செவ்
குரு
சுக்

சனி
சந்
சூரி
புத

ஜாதகம் - 11
புத





உ. ஜா. 11
இராகு
செவ்,சுக்
கேது




சனி


      இந்த ஜாதகத்தில் (11) நீச புதன் குருவின் பரிவர்த்தனையால் உச்ச பலனைப் பெறுகிறது. பரஸ்பர பரிவர்த்தனையால் நீச கிரகம் உச்ச நிலை பெறுவது ஒரு சிறப்பு நிலையாகும். சனி உச்சம் பெற்றுள்ளது. சுக்கிரனுடனனா பரிவர்த்தனை முன்னர் குறிப்பிட்ட பரிவர்த்தனையான கிரகங்களைப் போல் உச்சம் அடைவதில்லை. மாறாக ஆட்சி பலம் மட்டுமே அடைகிறது. ஏனெனில், சனி தனது தீவிர பகை கிரகங்களான செவ்வாய் மற்றும் இராகு உடன் இருப்பதே காரணமாகும். இதன் காரணமாக சனி பலம் இழக்கிறது. அதுவும் நீச நிலைக்கும் கீழாக பலம் இழக்கிறது. இந்த கிரக நிலைகளின் காரணமாக ஜாதகர் மதிப்புமிக்க வேலையில் சேர்ந்து, அங்கே தனது செல்வாக்கை பயன்படுத்தி நினைத்த போதெல்லாம் தனக்கு சாதகமான இடத்திற்கு பணிமாற்றம் பெற்றுக் கொள்வார். அதுவும் தன் இருப்பிடத்திற்கு மிக அருகிலுள்ள இடத்திற்கோ அல்லது மாமனார் வீட்டுக்கு அருகிலோ மாற்றல் வாங்கிக் கொள்வார். மாற்றல் காரணமாக தங்கள் உறவுகளுடன் மகிழலாம், சொத்துக்களுக்கு மிக அருகில் இருக்கலாம், குடும்பத்தார், நண்பர்கள் ஆகியோருடன் சந்தோஷமாக காலத்தைக் களிக்கலாம் என்று நினைத்துக்கொள்வர். ஆனால், பல நேரங்களில் மாற்றலாகி ஏன் வந்தோம் ? – என்று வருத்தப்படும் அளவுக்கு அங்கே கஷ்டப்பட வேண்டியதிருக்கும். கர்மகாரகன் சனியின் பலம் இழந்த நிலையே இதற்குக் காரணம்.  உச்ச சனி மதிப்பு மிக்க பணியைத் தந்தாலும் பரிவர்த்தனை பலன் தராத நிலை, பகை கிரக தொடர்பு என்ற நிலையால் வேலையில் அதிக கஷ்டங்களை அனுபவிப்பார். அவர் நினைத்தபடி சுகமாயிருக்கும் என நினைத்த இடமாற்றம் தொல்லையாகிவிடும். எனவே, உச்சம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றாலும், அது தனது சொந்த வீட்டில் பகை கிரகங்களுடன் இணையும் போது பலன் மாறும் அசாதாரண நிலை ஏற்படுகிறது.

Tuesday, May 15, 2018

நாடியில் ஜாதக ஆய்வு -3

நாடியில் ஜாதக ஆய்வு -3




ஜாதகம் – 8
         இந்த ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் இராகுவின் பிடியில் பரிவர்த்தனை பெற்றுள்ளன. இதன் காரணமாக ஜாதகரின் பெற்றோர் நீர் மற்றும் வாகன விபத்தை எதிர்கொண்டு மீண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும், சுக்கிரன் வக்ரமாகி உள்ளதால், ஜாதகரின் சகோதரி, பெற்றோர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் ஆபத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் கடைசி (நீச சுக்கிரன்) மூச்சை இழுத்தாள்.  இந்த நீச சுக்கிரனால் ஜாதகர் தனக்கு சேர வேண்டிய பரம்பரை சொத்துக்கள் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டார். மேலும், இவரது மனைவி முறையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபட்டார்.
         முதலில், சனிக்கு 2 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் மலை போன்ற துன்பங்களை மனிதருக்கு தந்தது. செவ்வாய் கும்பத்திற்கு சென்று திரும்ப வந்த போது மீண்டும் எதிரிகளின் தொந்திரவு ஆரம்பமானது.
        





செவ்(வ)
உ. ஜா. 8
சூரி
சனி
இராகு
சந்திரன்



சுக் (வ)

         இது நமக்கு வக்ர கிரக நிலையில் உள்ள கிரகங்களின் மீதான துல்லிய ஆராய்ச்சியின் மூலமாகவே ஜாதக நிலைகள் ஆராயப்படவேண்டும் என்பதை அருதியிட்டுக் கூறுகிறது.
சோதனை அடிப்படையில், உச்ச கிரகங்களால் ஏற்படும் விசேஷமான தாக்கங்கள்.
         பிரபஞ்ச காப்பாளர் மகாவிஷ்ணுவின் அவதார ஜாதகம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜாதகத்தில், (9) ஜோதிடத்தில் நாடி விதிப்படி குரு இருக்கும் இடத்திற்கு 12 இல் குருவை வைத்தோமானால் இங்கு மிதுன இராசி ஜாதகரின் முந்தைய அவதாரத்தை குறிகாட்டும். புதனின் ஆட்சி வீடான மிதுனம், ஜீவன் காரகன் குரு விஷ்ணவின் அடையாளத்தைப் பெறுகிறார். ஏனெனில், புதன் விஷ்ணுவைக் குறிகாட்டுகிறது. இந்து பாரம்பரிய கதைகள் மூலமாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக இருக்கிறார். குருவை மிதுனத்தில் வைக்கும் போது மீனத்திலுள்ள புதனுடன் கிரக பரிவர்த்தனை பெறுகிறது. அங்கு சுக்கிரன் உச்சமாதலால் அங்கு மகாலட்சுமி வடிவில் ஶ்ரீ தேவியை அடைகிறார். புதன் பூமியைக் குறிகாட்டுவதால் பூதேவியை இணைகிறார்.

புத,சுக்

சூரி


கேது
உ. ஜா. 9
லக்// சந்
குரு
செவ்
இராகு



சனி


         ஶ்ரீதேவியைக் குறிப்பதாக சுக்கிரனை எங்ஙனம் கருதுவது ? கும்பத்திலுள்ள கேது கிரகங்களுக்கு உரிய வேராகக் கருதப்படுகிறது. மீனமும், கடகமும் வடக்கு திசையையும், கடக சந்திரன் நீரையும், மீன புதன் இலையையும், சுக்கிரன் தாமரையையும் குறிகாட்டுகின்றன. இந்த சின்னங்களை ஒருங்கிணைக்கும் போது கேது (வேர்கள்)+ சந்திரன்(நீர்)+ மீனம்(திருமகளின் இருப்பிடம் அல்லது தேவலோகம்)+ மீன புதன் (இலை) + சுக்கிரன் (மலரக் கூடிய தாமரை மொட்டு)  எனக் கொள்ளலாம்.
         மற்றுமொரு பூராண கதைப்படி மேஷம் காலபுருஷ தத்துவத்தின்- படைப்புக் கடவுளின் தலைப் பகுதி ஆகும். மீனம் பாதப் பகுதியாகும். மகாலட்சுமி விஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்து சேவை செய்வதை இது குறிகாட்டுகிறது. இலட்சுமியும் ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆகிறார். அதனாலேயே, மகாலட்சுமியை உச்ச சுக்கிரன் குறிகாட்டுகிறார். குரு ஜீவன் காரகர் ஆகிறார். கிழக்கே உதிக்கும் சூரியன்  தலைமையைக் குறிக்கிறார்.
          இராமா அவதாரத்தில் இராமன் மும்மூர்த்திகளின் ஸ்வருபமாக விளங்குகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்கின்றனர். பிரம்மாவை குரு, கேது மற்றும் சுக்கிரன் குறிகாட்டுகின்றனர். படைப்பவன் பிரம்மா வலது கரத்தில் வேதப் புத்தகத்துடன் தாமரை மலரில் வீற்று, தியான ஜெபமாலையுடனும், அழிவற்ற அமுத நீரூற்றுடனும் காட்சி அளிக்கிறார்.
         இதையே வேறுவிதமாக பார்க்கும் போது கடகம் மற்றும் மீனம் வடக்கு திசையயை ஆள்கின்றனர். மீனம் தேவலோகம் ஆகும். குரு மீன இராசியின் பார்வையை பெறுகிறார். அங்கே புதன் தியான அறிவுக்கான புத்தகத்தை குறிகாட்டுகிறார். அதற்கு 12 ஆம் பாவமான கும்பத்தில் கேது தியானத்தையும், வாழ்க்கையில் இருந்து விடுபடுதலையும் குறிகாட்டுகிறார். சுக்கிரன் தெய்வீக தாமரை மலரைக் குறிகாட்டி, பிரம்மாவை நினைவுறுத்துகிறார்.
          புதனுடன் இணைந்த ஜீவன் குரு வட திசை இராசிக்கு உரியவர் பூதேவியை குறிகாட்டுகிறார். இது பிரபஞ்ச காப்பாளர் மகாவிஷ்ணுவையும் குறிபாட்டுகிறது.
          கடகத்தில் உள்ள குரு சந்திரனுடன் இணைந்து பார்வதியை குறிகாட்டுகிறார். அதற்கு 7 ஆம் பாவமான மகரத்தில் உள்ள செவ்வாய் ருத்திரன் ஆகிய மகேஸ்வரனைக் குறிகாட்டுகிறார்.
         இராமாவதாரத்தில் இராகு ஆகிய அரக்கர்களின் தலைவன் மகா துவாராதிபதியை (தலைவாசல் காவலன்) குரு, செவ்வாயின் (ஈஸ்வரன்) உதவியுடன் அழித்தான்.  இங்கு, இராமரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள், அவர் தனது வாழ்க்கையின் குறிக்கோள்களை அடைய எவ்வளவு தூரம் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருந்தது என்பதைக் காட்டுகின்றன.
         தொழிலுக்கான குறிகாட்டி சனி துலாத்தில் உச்சம் பெற்று, தந்தைக்கு காரகம் பெற்ற சூரியன் அதற்கு 7 ஆம் இடமான மேஷத்தில் உச்சம் பெற்று உள்ளார். சனிக்கு திரிகோணத்தில் கும்பத்தில் கேது ( மேற்கு திசை இராசிகள் துலாம் மற்றும் கும்பம்) இது வாழ்க்கையின் குறிக்கோளான பிறப்பிலிருந்து இறப்புவரையான வட்டத்தில் மனித விடுதலையைக் குறிகாட்டுகிறது. சனிக்கு அடுத்து உள்ள உச்ச செவ்வாய் உச்ச குருவால் பார்க்கப்படுகிறது. இங்கு செவ்வாய் பகவான் இராவணன், கும்பகர்ணன் போன்ற அரக்கர்களிடம் இருந்தும் சுக்ரீவன் போன்ற நல்லவர்களைக் காக்கவும் இராமனால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதங்களான வில்லும் அம்பையும் குறிகாட்டுகிறது. அடுத்து உச்ச சுக்கிரன் இராவணனிடம் இருந்து சீதாதேவியை விடுதலை செய்து காத்ததையும் குறிக்கிறது. முடிவில் உச்ச சூரியன் இராமனுக்கு அயோத்தி சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்துவைத்ததை குறிகாட்டுகிறது.
         இராவணன் சீதாதேவியை இலங்கைக்குக் கடத்திச் சென்று, சிறை வைத்ததற்கு அவளையே குற்றம்சாட்ட வேண்டும் எனக் குறிப்பிடபட்டு உள்ளது. இராமாயணத்தில், இராவணன் சீதையை பலவந்தமாக கடத்தி சென்று இலங்கையில் சிறைவைத்தததாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் சீதாதேவி, மகாலட்சுமியின் மனிதப்பிறப்பே ஆகும்.  இராவணன் பலவந்தமாகக் கடத்தியது மகாலட்சுமியின் மறு அவதாரமான மனிதப் பிறவி சீதாவையே கடவுள் மகாலட்சுமியை அல்ல  என்பது சில மிக புலமை வாய்ந்த நூல் ஆசிரியர்களின் கருத்து ஆகும்.
         இதற்கான விளக்கம் – சிம்ம இராசி அரசர்களின் மாளிகை ஆகும் இந்த மாளிகை வாசலின் வாயில் காப்போன் இராகு ஆவான். இந்த நிழல் கிரகம் அரக்கன் இராவணனையும் குறிகாட்டுகிறது. இடப் புறமாகச் சுற்றும் இராகுவுக்கு இரண்டாவது இராசி கடகம் ஆகும். இதன் அதிபதி சந்திரன் களங்கத்திற்கும், தோஷத்திற்கும், கெட்ட பெயர் எடுப்பதற்கும் காரகம் பெறுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி கடகமும், மீனமும் ஒரே வடதிசை இராசிகளாகும். எனவே, சந்திரன் ஒருதிசை கிரகங்களான மீனத்திலுள்ள சுக்கிரன், புதனுடன் தொடர்பு கொள்கிறது. இந்த சந்திரன், சுக்கிரன் தொடர்பே சீதா தேவிக்கு(சுக்கிரன்) ஏற்பட்ட களங்கத்திற்கு, கெட்ட பெயருக்கு (சந்திரன்) காரணமாகிறது.
         இராமனின் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன், புதன், சந்திரன் இணைவு இராகுவின் பாதிப்பு மற்றும் பார்வையால் இராமன் சந்தேகப்பட்டு சீதாவை குற்றம் சாட்டியதற்குக் காரணமானதோடு மட்டுமல்லாமல், அரக்கர்களால் சீதாவுக்கு ஏற்பட்ட தொல்லைகள், துயரங்களுக்கும் காரணமாயிற்று. குரு உச்சமாகி சந்திரனுடன் இணைந்து, பரிவர்த்தனை காரணமாக சுக்கிரன், புதன் தொடர்பால் மூன்று பெண் கிரகங்கள் குருவின் பலத்தைக் குறைத்துவிடுகின்றன. இராமனின் ஜாதகத்தை அலசினால் இன்னொரு இதிகாசம் எழுத வேண்டியதிருக்கும் ஆதலால் நாடியில் சில விதிகளுக்கு விளக்கத்தை மட்டுமே சொல்லியுள்ளோம்.








ஜாதகம் – 8
         இந்த ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் இராகுவின் பிடியில் பரிவர்த்தனை பெற்றுள்ளன. இதன் காரணமாக ஜாதகரின் பெற்றோர் நீர் மற்றும் வாகன விபத்தை எதிர்கொண்டு மீண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும், சுக்கிரன் வக்ரமாகி உள்ளதால், ஜாதகரின் சகோதரி, பெற்றோர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் ஆபத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் கடைசி (நீச சுக்கிரன்) மூச்சை இழுத்தாள்.  இந்த நீச சுக்கிரனால் ஜாதகர் தனக்கு சேர வேண்டிய பரம்பரை சொத்துக்கள் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டார். மேலும், இவரது மனைவி முறையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபட்டார்.
         முதலில், சனிக்கு 2 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் மலை போன்ற துன்பங்களை மனிதருக்கு தந்தது. செவ்வாய் கும்பத்திற்கு சென்று திரும்ப வந்த போது மீண்டும் எதிரிகளின் தொந்திரவு ஆரம்பமானது.
        





செவ்(வ)
உ. ஜா. 8
சூரி
சனி
இராகு
சந்திரன்



சுக் (வ)

         இது நமக்கு வக்ர கிரக நிலையில் உள்ள கிரகங்களின் மீதான துல்லிய ஆராய்ச்சியின் மூலமாகவே ஜாதக நிலைகள் ஆராயப்படவேண்டும் என்பதை அருதியிட்டுக் கூறுகிறது.
சோதனை அடிப்படையில், உச்ச கிரகங்களால் ஏற்படும் விசேஷமான தாக்கங்கள்.
         பிரபஞ்ச காப்பாளர் மகாவிஷ்ணுவின் அவதார ஜாதகம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜாதகத்தில், (9) ஜோதிடத்தில் நாடி விதிப்படி குரு இருக்கும் இடத்திற்கு 12 இல் குருவை வைத்தோமானால் இங்கு மிதுன இராசி ஜாதகரின் முந்தைய அவதாரத்தை குறிகாட்டும். புதனின் ஆட்சி வீடான மிதுனம், ஜீவன் காரகன் குரு விஷ்ணவின் அடையாளத்தைப் பெறுகிறார். ஏனெனில், புதன் விஷ்ணுவைக் குறிகாட்டுகிறது. இந்து பாரம்பரிய கதைகள் மூலமாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக இருக்கிறார். குருவை மிதுனத்தில் வைக்கும் போது மீனத்திலுள்ள புதனுடன் கிரக பரிவர்த்தனை பெறுகிறது. அங்கு சுக்கிரன் உச்சமாதலால் அங்கு மகாலட்சுமி வடிவில் ஶ்ரீ தேவியை அடைகிறார். புதன் பூமியைக் குறிகாட்டுவதால் பூதேவியை இணைகிறார்.

புத,சுக்

சூரி


கேது
உ. ஜா. 9
லக்// சந்
குரு
செவ்
இராகு



சனி


         ஶ்ரீதேவியைக் குறிப்பதாக சுக்கிரனை எங்ஙனம் கருதுவது ? கும்பத்திலுள்ள கேது கிரகங்களுக்கு உரிய வேராகக் கருதப்படுகிறது. மீனமும், கடகமும் வடக்கு திசையையும், கடக சந்திரன் நீரையும், மீன புதன் இலையையும், சுக்கிரன் தாமரையையும் குறிகாட்டுகின்றன. இந்த சின்னங்களை ஒருங்கிணைக்கும் போது கேது (வேர்கள்)+ சந்திரன்(நீர்)+ மீனம்(திருமகளின் இருப்பிடம் அல்லது தேவலோகம்)+ மீன புதன் (இலை) + சுக்கிரன் (மலரக் கூடிய தாமரை மொட்டு)  எனக் கொள்ளலாம்.
         மற்றுமொரு பூராண கதைப்படி மேஷம் காலபுருஷ தத்துவத்தின்- படைப்புக் கடவுளின் தலைப் பகுதி ஆகும். மீனம் பாதப் பகுதியாகும். மகாலட்சுமி விஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்து சேவை செய்வதை இது குறிகாட்டுகிறது. இலட்சுமியும் ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆகிறார். அதனாலேயே, மகாலட்சுமியை உச்ச சுக்கிரன் குறிகாட்டுகிறார். குரு ஜீவன் காரகர் ஆகிறார். கிழக்கே உதிக்கும் சூரியன்  தலைமையைக் குறிக்கிறார்.
          இராமா அவதாரத்தில் இராமன் மும்மூர்த்திகளின் ஸ்வருபமாக விளங்குகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்கின்றனர். பிரம்மாவை குரு, கேது மற்றும் சுக்கிரன் குறிகாட்டுகின்றனர். படைப்பவன் பிரம்மா வலது கரத்தில் வேதப் புத்தகத்துடன் தாமரை மலரில் வீற்று, தியான ஜெபமாலையுடனும், அழிவற்ற அமுத நீரூற்றுடனும் காட்சி அளிக்கிறார்.
         இதையே வேறுவிதமாக பார்க்கும் போது கடகம் மற்றும் மீனம் வடக்கு திசையயை ஆள்கின்றனர். மீனம் தேவலோகம் ஆகும். குரு மீன இராசியின் பார்வையை பெறுகிறார். அங்கே புதன் தியான அறிவுக்கான புத்தகத்தை குறிகாட்டுகிறார். அதற்கு 12 ஆம் பாவமான கும்பத்தில் கேது தியானத்தையும், வாழ்க்கையில் இருந்து விடுபடுதலையும் குறிகாட்டுகிறார். சுக்கிரன் தெய்வீக தாமரை மலரைக் குறிகாட்டி, பிரம்மாவை நினைவுறுத்துகிறார்.
          புதனுடன் இணைந்த ஜீவன் குரு வட திசை இராசிக்கு உரியவர் பூதேவியை குறிகாட்டுகிறார். இது பிரபஞ்ச காப்பாளர் மகாவிஷ்ணுவையும் குறிபாட்டுகிறது.
          கடகத்தில் உள்ள குரு சந்திரனுடன் இணைந்து பார்வதியை குறிகாட்டுகிறார். அதற்கு 7 ஆம் பாவமான மகரத்தில் உள்ள செவ்வாய் ருத்திரன் ஆகிய மகேஸ்வரனைக் குறிகாட்டுகிறார்.
         இராமாவதாரத்தில் இராகு ஆகிய அரக்கர்களின் தலைவன் மகா துவாராதிபதியை (தலைவாசல் காவலன்) குரு, செவ்வாயின் (ஈஸ்வரன்) உதவியுடன் அழித்தான்.  இங்கு, இராமரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள், அவர் தனது வாழ்க்கையின் குறிக்கோள்களை அடைய எவ்வளவு தூரம் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருந்தது என்பதைக் காட்டுகின்றன.
         தொழிலுக்கான குறிகாட்டி சனி துலாத்தில் உச்சம் பெற்று, தந்தைக்கு காரகம் பெற்ற சூரியன் அதற்கு 7 ஆம் இடமான மேஷத்தில் உச்சம் பெற்று உள்ளார். சனிக்கு திரிகோணத்தில் கும்பத்தில் கேது ( மேற்கு திசை இராசிகள் துலாம் மற்றும் கும்பம்) இது வாழ்க்கையின் குறிக்கோளான பிறப்பிலிருந்து இறப்புவரையான வட்டத்தில் மனித விடுதலையைக் குறிகாட்டுகிறது. சனிக்கு அடுத்து உள்ள உச்ச செவ்வாய் உச்ச குருவால் பார்க்கப்படுகிறது. இங்கு செவ்வாய் பகவான் இராவணன், கும்பகர்ணன் போன்ற அரக்கர்களிடம் இருந்தும் சுக்ரீவன் போன்ற நல்லவர்களைக் காக்கவும் இராமனால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதங்களான வில்லும் அம்பையும் குறிகாட்டுகிறது. அடுத்து உச்ச சுக்கிரன் இராவணனிடம் இருந்து சீதாதேவியை விடுதலை செய்து காத்ததையும் குறிக்கிறது. முடிவில் உச்ச சூரியன் இராமனுக்கு அயோத்தி சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்துவைத்ததை குறிகாட்டுகிறது.
         இராவணன் சீதாதேவியை இலங்கைக்குக் கடத்திச் சென்று, சிறை வைத்ததற்கு அவளையே குற்றம்சாட்ட வேண்டும் எனக் குறிப்பிடபட்டு உள்ளது. இராமாயணத்தில், இராவணன் சீதையை பலவந்தமாக கடத்தி சென்று இலங்கையில் சிறைவைத்தததாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் சீதாதேவி, மகாலட்சுமியின் மனிதப்பிறப்பே ஆகும்.  இராவணன் பலவந்தமாகக் கடத்தியது மகாலட்சுமியின் மறு அவதாரமான மனிதப் பிறவி சீதாவையே கடவுள் மகாலட்சுமியை அல்ல  என்பது சில மிக புலமை வாய்ந்த நூல் ஆசிரியர்களின் கருத்து ஆகும்.
         இதற்கான விளக்கம் – சிம்ம இராசி அரசர்களின் மாளிகை ஆகும் இந்த மாளிகை வாசலின் வாயில் காப்போன் இராகு ஆவான். இந்த நிழல் கிரகம் அரக்கன் இராவணனையும் குறிகாட்டுகிறது. இடப் புறமாகச் சுற்றும் இராகுவுக்கு இரண்டாவது இராசி கடகம் ஆகும். இதன் அதிபதி சந்திரன் களங்கத்திற்கும், தோஷத்திற்கும், கெட்ட பெயர் எடுப்பதற்கும் காரகம் பெறுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி கடகமும், மீனமும் ஒரே வடதிசை இராசிகளாகும். எனவே, சந்திரன் ஒருதிசை கிரகங்களான மீனத்திலுள்ள சுக்கிரன், புதனுடன் தொடர்பு கொள்கிறது. இந்த சந்திரன், சுக்கிரன் தொடர்பே சீதா தேவிக்கு(சுக்கிரன்) ஏற்பட்ட களங்கத்திற்கு, கெட்ட பெயருக்கு (சந்திரன்) காரணமாகிறது.
         இராமனின் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன், புதன், சந்திரன் இணைவு இராகுவின் பாதிப்பு மற்றும் பார்வையால் இராமன் சந்தேகப்பட்டு சீதாவை குற்றம் சாட்டியதற்குக் காரணமானதோடு மட்டுமல்லாமல், அரக்கர்களால் சீதாவுக்கு ஏற்பட்ட தொல்லைகள், துயரங்களுக்கும் காரணமாயிற்று. குரு உச்சமாகி சந்திரனுடன் இணைந்து, பரிவர்த்தனை காரணமாக சுக்கிரன், புதன் தொடர்பால் மூன்று பெண் கிரகங்கள் குருவின் பலத்தைக் குறைத்துவிடுகின்றன. இராமனின் ஜாதகத்தை அலசினால் இன்னொரு இதிகாசம் எழுத வேண்டியதிருக்கும் ஆதலால் நாடியில் சில விதிகளுக்கு விளக்கத்தை மட்டுமே சொல்லியுள்ளோம்.

Monday, May 14, 2018

நாடியில் ஜாதக ஆய்வு


நாடியில் ஜாதக ஆய்வு




ஜாதகம் – 5



சுக்
சூரி,புத

உ. ஜா. 5
செவ்



சந், குரு



         இந்த ஜாதகத்தில் (5) கடகத்தில் நீச செவ்வாய் உள்ளார். அவர் விருச்சிகத்திலுள் சந்திரனோடு பரிவர்த்தனை பெறுகிறார். எனவே, தனது சுய வீட்டில், தெய்வீக குருவுடன் இணைந்துள்ளார். இந்த புனித ஆசிரியர் குருவின் தொடர்பால் செவ்வாயும் முருகனின் தெய்வ காடாக்ஷம் பெற்று விருச்சிகத்தில்  “கார்த்திகேய குரு” ஆகிறார். இந்த வித்தியாசமான குரு, செவ்வாய் இணைவு பரிவர்த்தனையால் (சந்,செவ்) ஏற்பட்டதன் விழைவாக ஜாதகருக்கு நம்பத்தாகாத குணமுள்ள கீழ்த்தரமான மக்களின் ஒத்துழைப்போடு சமூகத்தில் மதிப்பு மிக்க, கொரவமான நிலையை அடைகிறார்.
    ஜாதகம் – 6


செவ்

சனி

உ. ஜா. 6
குரு, சூரி
இராகு
கேது
லக்//
புத,சுக்

சந்



         ஜாதகம் 6 – ஒரு மகர இலக்கின, பெண்ணின் ஜாதகம். பாகை வரிசையில் கிரகங்களை இலக்னத்தில் இருந்து கேது+ செவ்+ சனி+ குரு+ சூரி+ இராகு+ புத+ சுக்+ சந் என வரிசைப் படுத்தலாம். உச்ச குரு ஆத்மகாரகன் சூரியனுடன் இணைந்திருப்பது ஒரு விசேஷமான இணைவாகும். ஆனால் இங்கு உள்ள மறைமுக ஆபத்து இராகுவின் இணைவு ஆகும். இராகுவின் வக்கிர நகர்வால் முதலில் சூரியனும் பிறகு குருவும் அதன் பிடியில் வருகிறது. எனவே, இவ்விரு கிரகங்களும் அதன் பலத்தை இழக்கின்றன.  இந்த சூரியன், குரு இணைவு ஜாதகரின் தந்தை இறைவனை சிந்திக்க வைக்கும். இந்த இரு கிரகங்களின் இராகுவுடனான அருகாமை தந்தையின் ஆயுள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, அவர் குறைந்த வயதிலேயே இறந்துவிட்டார். இது பெண்ணின் ஜாதகமாதலால் ஜீவன் காரகன் சுக்கிரன் ஆவான். எனவே, ஜாதகி தன் கணவனை (செவ்வாய்) சந்திப்பது மிகவும் கஷ்டமாகிவிடும்.
         இப்போது சுக்கிரன் + நீச சந்திரன் + மோட்ச காரகன் கேது ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு மேஷத்தில் உள்ள செவ்வாய் கணவனைக் குறிகாட்டுபவர். இவருக்கு 2, 12, 7 இல் கிரகங்கள் இல்லை. எனவே அவள் ஒரு சன்யாச அல்லது துறவு வாழ்க்கை வாழ வேண்டியதாயிற்று. மேலும் சகோதர குறிகாட்டி செவ்வாய், இராகு-கேதுவால் அமைந்த அரை வட்டத்துக்கு வெளியே இருப்பதால் ஜாதகியுடைய சகோதரன் தூர தேசத்தில் இருக்கிறான். செவ்வாய்க்கு 5 இல் சுக்கிரன் இருக்கிறார். இந்த இடமே பூர்வ புண்ணியத்தால் பெற்ற தகுதியை, யோக்கியதையைக் குறிக்கும். இது ஒரு அனுகூலமான நிலையாகும். ஆனால், சுக்கிரன், செவ்வாய், புதன் என்கிற இரு தீவிர எதிரிகளோடு இருப்பதால் அவை மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு பங்கம் ஏற்படுத்தின. கணவன் காரகன் செவ்வாய் பலம் இழந்து காணப்படுவதால் ஜாதகிக்கு 50 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை.
         இங்கு வாழ்க்கையை குறிகாட்டும் கிரகங்கள் குருவும், சுக்கிரனும் ஆகும். குரு ஆண் ஜாதகருக்கு வாழ்க்கை குறிகாட்டி, ஆனால் பெண்ணுக்கு சுக்கிரன் வாழ்க்கை குறிகாட்டி ஆவான். இங்கு படைத்தவனால் படைக்கப்பட்ட ஆணுப் பெண்ணும் ஒன்றுதானே ? – என்ற கேள்வி எழலாம். பண்டைய இந்து புராணக் கதைகளின்படி ஒரே மாதிரியான தெய்வீகப் படைப்பின் மீது இருவேறு மாறுபட்ட பார்வைகள் உள்ளன. ஒன்றன் பெயர் இயற்கை எனும் பிரபஞ்ச பெண் மூலம் மற்றொன்று  புருஷன் எனும்  பிரபஞ்ச ஆண் மூலம் ஆகும். இந்த மூலகங்கள் இரண்டின் இணைவே இந்த மேதினியில் வாழ்க்கையின் நீடித்தலுக்கு பொறுப்பாகின்றன. பிரபஞ்சத்தில் காக்கும் கடவுளின் படைப்பில், பார்வையில் இரண்டுப் ஒன்றாகினும், இங்கு சுக்கிரன் பெண்ணின் வாழ்க்கையையும், குரு ஆணின் வாழ்க்கையையும் குறிகாட்டுகின்றன. இந்து கைரேகைக் கலையில் மூக்கால் சுவாசிக்கும் ஜீவன் காரகன் குரு. உடற்கூறில் மூக்கைக் குறிப்பவன் குரு ஆவான். இந்தியப் பெண்களின் மூக்கில் அணிகின்ற வைரமூக்குத்தியில் வைரத்தைக் குறிப்பவன் சுக்கிரன் ஆவான்.
ஜாதகம் - 7
   
சுக்(வ)
புத

சூரி,
செவ்
குரு
சந்


உ. ஜா. 7
கேது
இராகு
லக்//



சனி(வ)


        சுக்கிரன், சூரியன், சந்திரன், மற்றும் சனி ஆகிய 4 கிரகங்கள் உச்சம் பெற்ற மகர இலக்ன ஜாதகியின் ஜாதகம். ஆனால் இவரது வாழ்க்கை அமைதியற்ற, சந்தோஷமற்ற வாழ்க்கையானது. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், இரண்டு கணவன்மார்களின் இறப்பு, மூன்று திருமணங்கள், கடைசியில் அவளது வாழ்க்கையின் முடிவு என இலக்னத்தில் இருந்து கிரகங்களை பாகை முறையில் வரிசைப்படுத்தி பார்க்கலாம்.   இராகு+ புதன்+ சுக்கிரன்+ சூரியன்+ செவ்வாய்+ குரு+ சந்திரன்+ கேது+ சனி என்ற வரிசையில் வருகிறது. இங்கு சூரியன் உச்சம் பெற்றிருந்தாலும், பகை கிரகமான சனி 7 இல் உள்ளார். சனியின் பரம எதிரி செவ்வாய், சூரியனுடன் உள்ளார். இது ஜாதகியின் தந்தை உணர்ச்சி வசப்படுபவர். பகைவர்களால் அதிக தொல்லைகளை அனுபவிப்பவர்.
         ஜாதகியின் வாழ்க்கையைக் குறிகாட்டும் உச்ச, வக்ர, சுக்கிரன், தனது நெருங்கிய நண்பரான நீச புதனை பின் பார்வையால் நோக்குகிறார். ஏனெனில் வக்ர சுக்கிரன் மீனத்தில் புதனுக்கு அடுத்து இருப்பதே ஆகும். அவருடையே நண்பரே அவருக்குக் கணவரானார் என்பதை இது குறிகாட்டுகிறது. சுக்கிரனும் குருவும் பரிவர்த்தனை. பரிவர்தனையால் சுக்கிரன் ரிஷபத்துக்கும், குரு தனது சுய வீடான மீனத்துக்கு வருவதால் சுக்கிரனின் வக்ர பின் பார்வையால் செவ்வாய், சூரியன் பார்க்கப்படுகிறார்கள். இது அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை குறிகாட்டுகிறது.  ஆனால், சுக்கிரன் ரிஷபத்தில் இணைந்துள்ளது அதன் சக்தியைக் குறைக்கிறது. ஆகையால், கௌரவம் (உச்ச சூரியன்) மிக்க குடும்பத்தில் அழகிய இளமையான இளைஞனை மணந்து கொண்டாள். ஆனால் பலமிழந்த செவ்வாயால் (கணவன்) அந்த இளைஞன் இறந்தான்.
         மேஷத்துக்கு அடுத்த ரிஷப 2 ஆம் வீட்டில் சுக்கிரன். ஆணின் விந்து, பெண்ணின் சுரோனிதம் மிக அருகில் இருப்பது போல் உச்ச சூரியன், செவ்வாய் மேஷத்தில் இருக்கின்றனர். எனவே, இவள் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்கிறாள், முடிவாக மரணம் எய்துகிறாள்.
         குருவிடம் சிஷ்யனின் கேள்வி- குருவே ! எங்ஙனம் இப் பெண் நீதிமன்றம் மூலமாக இரண்டு கணவர்களிடம் இருந்து தொடர்ந்து விவாகரத்து பெற்றாள்.        
        குரு – மீன இராசி வடக்கு திசை, கடகமும் வடக்கு திசையே குறிக்கிறது. எனவே, கேது (வழக்கு விவகாரங்கள், சட்ட நுணுக்கங்கள்) சுக்கிரனுக்கும் புதனுக்கும் நடுவே சிக்கிக் கொண்டார். இதுவே முதல் விவாகரத்துக்குக்கான காரணம். பின்னர் குரு மீனத்துக்கு சுக்கிரனுடனான பரிவர்த்தனையில் வருகிறார். மேலே சொன்னபடி பிரிவினைக் கிரகமான கேது (வழக்கு விவகாரங்கள், சட்ட நுணுக்கங்கள்) சுக்கிரன், குருவுக்கு  நடுவே வந்ததால் இரண்டாவது முறையும் விவாகரத்து கிடைத்தது.
         மேலும், ஜாதகி தந்தைக்குப் பின் என்பதை குறிகாட்டும் மேஷத்திலுள்ள சூரியன், சுக்கிரன், புதன் மற்றும் கேது ஆகியவை அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் காதலைக் குறிகாட்டுகிறது. அவளது ஜாதகத்தில் உள்ள சுக்கிரன், புதன், கேது இணைவு அவளுக்கு, தந்தையுடனான நிலம் (புதன்) மற்றும் சொத்துப் (சுக்கிரன்) பிரச்சனைகளில் வழக்கு விவகாரங்கள் நடப்பதைக் குறிகாட்டுகிறது. மேலும் சுக்கிரன் தனது வக்கிர நிலையால் 2 ஆம் இடத்துக்கு தனது பரிவர்த்தனையால் வருகிறது. ( மேஷத்தில் சூரியனுக்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் ) ரிஷபத்திலுள்ள குருவுடனான பரிவர்த்தனை (கோர்ட் மற்றும் நீதிபதியைக் குறிக்கிறது) அவளுடைய தந்தை (சூரியன்) மாமா (செவ்வாய்) ஒரு வீட்டையும், கொஞ்சம் பணத்தையும் வழக்கு மூலமாக அடைந்தனர்.
        இதன் மூலமாக அறிவது, முதலில் கிரகங்களின் உச்ச நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு பின்னரே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
        முன்னர் கொடுக்கப்பட்ட விதிகளில் 2 மற்றும் 3 ஆம் விதிகளுக்கான உதாரணங்கள் -  
இராகு+சூரியன்+சனி = தந்தைக்கு மற்றும் மகனுக்கு ஏற்படும் கஷ்டங்கள் மற்றும்                       தடைகள்.
கேது+சனி+செவ்வாய் = தொழில்/வேலை தடுமாற்றம்/பாதியிலேயே தடைபடுதல்.
இராகு+சந்திரன்+செவ்வாய் = மன மயக்கம், மருட்சி மற்றும் குறுகிய                                   மனப்பான்மை.
சூரியன்+சுக்கிரன்+கேது = புத்திர பாக்கியம் அமைவதில் பிரச்சனை மற்றும்                                    பொருளாதார நஷ்டம்.
கேது+சனி+சந்திரன் =  பணியிடத்தில் கெட்ட பெயர் எடுத்தல்.
கேது+சந்திரன்+சனி =  பணியிடத்தில் மன அமைதியின்மை.
சூரியன்+சனி+செவ்வாய் = பணியிடத்தில் எதிரிகளால் துன்பம், தொல்லை,                                    கொடுமைகளுக்கு ஆளாதல்.
சுக்கிரன்+கேது+புதன் = சொத்துகள், பூமி, பணம், மனைவி மற்றும் காதல்                               ஆகிவற்றால் வழக்கு விவகாரங்கள்.
         இப்படியாக ஒரு கிரகத்துக்கு 12 அல்லது 2 இல் பகை கிரகம் இடம்பெற அல்லது ஒரு பகை கிரகம் இரு நட்பு கிரகங்களுக்கு இடையே இருக்க நற்பலன்கள் ரத்தாகும்/இல்லாமல் போகும்.
         4 ஆம் விதிக்கான விளக்கம் குருவும், வக்ர சுக்கிரனும் கிரக பரிவர்த்தனை பற்றிய விளக்கம் முந்தைய ஜாதகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.